நேசம் மறவா நெஞ்சம் -25Nesam Marava Nenjam

Advertisement

Keerthi elango

Well-Known Member
Hey....enama ithu oru oore kayala thedi athum van vechu vanthuruku sema...ithuku than maram yera kathukurangalo....but sema...kayal kannan sema cute and so lovely...sudha vasu ku ithy sema adi...inithan avangaluku vazhkaina enanu theriya pothu...ena apatha posukunu kelamba solita...Paru ipo unala Ayyanar vera aruvala eduka ready aitaru...but i think kayal po mata....i m waiting sis...come quick...
 

muthu pandi

Well-Known Member
அன்று இரவு வாசு வீட்டில் வினோத் மாடியில் அமர்ந்து தண்ணி அடித்துக் கொண்டிருந்தான்... தன் அண்ணனை அழைத்து…..” நீயும் கொஞ்சம் குடிடா.... இந்தா..”.

வாசு எப்போதும் தண்ணியடிக்க மாட்டான்.... எப்போதாவது ஒருநாள்தான் குடிப்பான்..... இன்றும் தம்பியோடு உட்கார்ந்து தண்ணியடிக்க.......சிறிது நேரத்திலேயே அவன் சுதாவின் அழகை பற்றி போதையில் உளர துவங்கினான்... “டேய் ஒம்பொண்டாட்டி.... எப்புடிடா இப்புடி தளதளன்னு இருக்கா.....” என்பது போல ஒரு அண்ணனிடம் எவ்வாறெல்லாம் அவன் மனைவியை பேசக்கூடாதோ அப்படி பேச வாசு ஒரு எல்லைக்கு மேல் பேச்சு கேட்க முடியாமல் போக...வார்த்தை முற்றி இருவரும் அடிதடியில் இறங்கினர்……



கீழே சத்தம் கேட்டு சுதாவும் அவர்களின் பெற்றோரும் அடித்து பிடித்து மேலே வந்து இருவரையும் விலக்க.... வினோத்தை வாசு நன்கு வெளுத்திருந்தான்.... “அடப்பாவிகளா... ஏண்டா இப்புடி அடிச்சுக்குறீக... டேய்….” என பேச்சி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பிக்க.... இவர்களின் தந்தையோ... தண்ணீரை பிடித்து இருவர் மேலும் மாற்றி மாற்றி ஊற்ற....இருவருக்கும் சிறிது நேரத்தில் போதை தெளிந்தது... அப்போதுதான் வினோத்துக்கு தான் பேசியது சிறிது சிறிதாக ஞாபகத்திற்கு வந்தது...... எங்க இவன் அத அப்பா அம்மாட்ட சொல்லிருவானோ என்று நினைத்து ..... வினோத் படக்கென்று பணப்பிரச்சனையை கொண்டு வந்தான்....



“டேய்... நீங்கல்லாம் அண்ணே தம்பிகளா... இப்புடி அடிச்சுக்கிறீங்க...வெக்கமாயில்லை...”



“ஏம்மா...நான் கஷ்டப்பட்டு வெளிநாட்டுல சம்பாதிப்பேன்... இவனும் இவன் பொண்டாட்டியும் ஒய்யாரமா உக்காந்து சாப்புடுவாங்களா... இவன் வீடு கட்டுனதுலயே எம்புட்டு காச ஆட்டைய போட்டுறுக்கான் தெரியுமா... இதுக்கு அப்பா நீங்களும் சப்போர்ட்டு......”



“டேய் நான் என்ன சப்போர்ட் பண்ணுனேன்.....”



“விடுங்கப்பா.... எல்லாம் எனக்கு தெரியும் அப்புடி ரோசம் இருக்குறவனா இருந்தா இப்ப நான் குடுத்த காச வைக்கச் சொல்லுங்க.... இல்லையா இவனையும் இவன் பொண்டாட்டியையும் வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லுங்க…..” அடப்பாவி எப்புடி பேச்சை மாத்திட்டான்.... வாழ்க்கையில் முதல் முறையாக இவ்வளவுநாள் ஊதாரிதனமாக இருந்ததற்கு வாசு வருத்தப்பட்டான்..... இவன் மனசுல இப்புடி ஒரு எண்ணம் இருக்குன்னு சொன்னா நம்ம அம்மா அப்பா நம்புவாங்களா.... கண்டிப்பா நம்ம மாட்டாங்க.... இப்ப என்ன பண்ணுறது.....



“டேய் .... என்ன வாய மூடிக்கிட்டு இருக்க.... ஒன்னு பணத்தை இப்பவே எண்ணி வை... இல்லையா வீட்டைவிட்டு வெளிய போ....”



“டேய்.... டேய்... இன்னேரத்துல காசுக்கு அவன் என்ன பண்ணுவான்......இப்ப எப்புடிடா வெளிய போவான்......”



“அம்மா...அப்பா... இப்ப சொல்றத கேளுங்க... ஒன்னு பணத்தை எண்ணி வைக்கனும் இல்லைன்னா வெளிய போகச்சொல்லுங்க..... வாய மூடிக்கிட்டு இருந்தா நீங்க இங்க இருக்களாம்.... இல்லைனா ....நீங்களும் அவனோட வெளிய போயிருங்க......”



பேச்சிக்கு பகீரென்றது......... நம்ம மவனுக்காக வெளிய போனாலும் இவ நம்மள ஒரு மனுசியாக் கூட மதிக்க மாட்டாளே...... என்று நினைத்து வாயை மூடிக்கொண்டாள்....



“டேய் இப்பவே மணி பத்தாக போகுது........ இன்னேரத்துல அவுக எங்க வெளிய போவாங்க......ராத்திரி மட்டும் போகட்டும்டா...காலையில பேசிக்கலாம்.....”



வினோத் இவன் ஒரு ராத்திரி தங்குனா கூட நம்மள பத்தி போட்டுக் குடுத்துருவான்... இவன் பொண்டாட்டி எங்க போயிர போறா..... என்று நினைத்தபடி கண்டிப்பாக வெளியே சென்றுதான் ஆக வேண்டும் என்று ஒரே குறியாக நின்றான்.... இருவரும் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்க வில்லை........ வாசுவுக்கு மிகவும் அவமானமாக இருந்தது .... சுதாவோ... இவரு என்னத்த பேசுனாருன்னு தெரியலயே... கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இருந்திருக்கலாம்.....



“டேய்... நீங்க வேனும்னா நம்ம தோப்புல போய் தங்குங்க.... அது குடும்ப சொத்து அது மூத்தவன் உனக்குத் தான் சேரும்......”



“தோப்புக்கா....” என்ற வாசுவுக்கு அங்கு ஒரு வசதியும் இல்லையே என்று நினைத்தபடி இருவரும் வீட்டை விட்டு கிளம்பினர்......



வாசு...” வேணுனா... உங்க அம்மாவீட்டுக்கு போவமா.....”



“வேணாம்... வேணாம்...” அன்று தன் தந்தை பேசியதை அவள் வாசுவிடம் சொல்லவே இல்லை...” நீங்க கொஞ்சநேரம் வாய மூடிக்கிட்டு இருந்திருந்தா... இந்த பிரச்சனையே இல்லை....”



“கொஞ்சம் வாயமூடு.... அவன் என்ன பேசுனான்னு தெரியுமா...... பேசாமா வா அங்க எந்த வசதியும் இருக்காது..... கூட வாராதாயிருந்தா வா... இல்லைனா உங்க அம்மாவீட்டுக்கு போ......”.சுள்ளென சொல்லவும் சுதா வாயை திறக்கவே இல்லை.... சுற்றிலும் இவ்வளவு உறவு இருந்தும் இருவரும் அந்த இரவு நேரத்தில் ஊரை விட்டு தள்ளியிருந்த அந்த தோப்பிற்கு சென்றனர்.......



கண்ணன் வீட்டிற்கு அனைவரும் வரவும் கயலை வெளியே நிறுத்தி ஆரத்தி எடுத்து சாவித்திரி உள்ளே கூட்டிச் சென்றார்...” ஊரு கண்ணுயெல்லாம் ஒம்மேலதான்தா... அதுதான் உனக்கு இப்புடி நடந்திருச்சு.....”எல்லாரையும் அன்போடு வரவேற்க கண்ணன் வீடு ஜே...ஜே வென்று இருந்தது....



காந்திமதி” போத்தா போய் தலையோட ஊத்தி குளிச்சிட்டு வா... எல்லா கிரகமும் தொலையட்டும்...போத்தா...”.



கயல் மாடிக்கு குளிக்க போக கண்ணன் அனைவரையும் கவனிக்கச் சென்றான்....

கயல் குளிக்கும் போது காயம்பட்ட இடங்களில் எல்லாம் எரிச்சல் கிளம்பியது..... முழங்காலிலும் கை முட்டியிலும் ரத்தம் உறைந்திருந்தது ...... மெதுவாக தேய்த்து குளித்தவள்...... தலையை காய வைத்தபடி கீழே வந்து தன் தங்கச்சிகளோடு பேசிக் கொண்டிருக்க..... அவள் தந்தை வந்து அவள் அருகில் அமரவும் அவர் மடியில் தலைவைத்து படுத்தாள்.... மாணிக்கம் இன்று கண்ணன் போன் செய்யவும் மிகவும் பயந்திருந்தார்.... மெதுவாக கயல் தலையை தடவிக் கொடுக்க காந்திமதி வந்து கயலின் காலை எடுத்து தன் மடியில் வைத்து அமுக்கி விட...... அவள் சகோதரிகள் இருவரும் அவள் கையை பிடித்தபடி உட்காந்திருந்தனர்........



அப்போதுதான் தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த கண்ணன் இந்த காட்சியை பார்த்து .... பார்ரா.... எம் பொண்டாட்டிக்கு அவ குடும்பமே சேந்து சேவுகம் செய்யுதுக..... என்று சிரித்தபடி உள்ளே வந்தான்......



சாவித்திரியோடு சகுந்தலாவும் சேர்ந்து சமைக்க ஒரு மணி நேரத்தில் சமைத்து முடித்திருந்தனர்....... அனைவரும் பேசியபடி சாப்பிட்டு கொண்டிருக்க பரிமாற வந்த கயலை கண்ணன் வேண்டாம் என தடுத்து அவனே பரிமாறினான்.......



எல்லாருக்கும் படுக்கையை விர்த்து கொடுத்தவள்....படுக்க போக மணி 1 ஆயிற்று....



மாடிக்கு வந்தவள் கண்ணன் படுத்திருக்கவும்..... அவன் அருகில் வந்து படுத்தவள்..... “ஏங்க தூக்கம் வரலையா.....”



“ம்ம்ம்.... இன்னைக்கு மாதிரி நான் வாழ்க்கையில டென்சன் ஆனதே இல்லை...... ப்பா.... ஒரு நாளுல ராட்சசி என்ன பாடு படுத்திட்ட .....” என்றபடி அவள் பக்கம் திரும்பி படுத்தவன்......” ஏண்டி போன்னு ஒன்னு இருக்குல..... இந்த மாதிரி வண்டி ரிப்பேரா போனா எனக்கு ஒரு வார்த்தை போன்ல சொல்லியிருந்தா.....நான் வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்ல...... இன்னைக்கு உம்மேல இருந்த கோபத்துக்கு உன்னைய அடி வெளுத்திருப்பேன்..... பாவம்னுதான் விட்டேன்.....”..

கயல் அவனுக்கு முதுகைகாட்டி திரும்பி படுக்கவும்....” இப்ப என்ன.... இந்த பக்கம் திரும்பி படு......”



“ம்ம்ம்....மாட்டேன் நீங்கதான் என்னைய அடிப்பேன்னு சொல்றீங்க......”



“அப்புறம் உன்னைய கொஞ்சுவாங்களா..... நீ பண்ண வேலைக்கு..... இங்கிட்டு திரும்பு” என்றபடி அவளை தன் புறம் திருப்பியவன் அவளை தன் அருகில் இழுத்தவன்.... “என்னைய ரொம்ப தேடுனியா......”



“ஆமா.... “

“எவ்வளவு......தேடுன....”



“ந்தா..... இம்புட்டு” என்று தன் கையை அகல விரித்து காட்ட.....



“வாடிச் செல்லக்குட்டி …….”என்று அவளை இறுக்கி அணைக்க.... அவன் கை காயத்தில் உரசவும் கயல்” ஸ்ஸ்ஸ....... அம்மா......”



“என்னடி.... என்னாச்சு.....”. எழுந்து லைட்டை போட்டவன் அவளின் காயத்தை பார்த்தவன் தன் தலையில் அடித்துக் கொண்டவன்....” யேய்.... உனக்கு அடி பட்டுச்சு தானே மருந்து போடல..... வா நான் போட்டு விடுறேன்....”



“வேணாம்.... மருந்த குடுங்க நானே போட்டுக்குறேன்.....”

“நீ சொன்னவுடனே நான் கேக்க போறனா... வா “என்று அவள் கைக்கு மருந்தை போட்டவன் அவள் கால் பக்கம் வர.....” குடுங்க கால்ல நானே போட்டுக்குறேன்.....” மெதுவாக நைட்டியை தூக்கியவன்....அவள் முழங்காலில் மருந்தை போட்டவன் அவள் காலைபிடித்து விட.....” ஐய்யையோ... என்ன பண்ணுறீங்க....விடுங்க....”

“நான் ஏன் விடனும் எம்பொண்டாட்டி.... உங்க அப்பத்தா மட்டும் பிடிச்சு விடுறாங்கள்ள...நானும் பிடிச்சு விடுவேன் “என்று பிடித்து விட்டவன்....... அவள் காலுக்கு முத்தமிட்டு அவள் கால் விரலுக்கு முத்தமிட கயலுக்கு என்ன தோன்றியதோ.... படக்கென்று அவன் கையை எடுத்து விட்டவள் தன் நைட்டியை இழுத்து விட்டு போதும் தூக்கம் வருது படுங்க…. எப்போதும் தூங்கும்போது தன் கை காலை மட்டும் போட்டு தூங்குபவள்.... இன்று தன் தலையை எடுத்து கண்ணன் மார்பில் தலைவைத்து உறங்கியிருந்தாள்...... கண்ணனும் உள்ளுர ரசித்தபடி உறங்கினான்.......



மறுநாள் காலை இருவரும் கீழே இறங்கி வர.... காந்திமதி...” சரித்தா நீ ஊருக்கு கிளம்பு.....”

கண்ணன் கொலைவெறியுடன் அப்பத்தாவை முறைத்துக் கொண்டிருந்தான்......



இனி................... ?



தொடரும்...................
Nice
 

Saroja

Well-Known Member
கயலு பண்ண கூத்துல ஊரே கூடியிருக்கிறது
அருமையான பதிவு
சுதா வாசு இனி மேல திருந்தி வருவார்களா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top