"சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" - முன்னோட்டம்

Advertisement

Rudraprarthana

Well-Known Member
11020

"போதும் போதும் தேவ்" என்று புன்னகையுடன் திரும்பிய வித்யாவின் பார்வையில் வர்ஷுவோடு விளையாடிக்கொண்டு இருந்த ப்ரீத்தி பட திரும்பி தேவ்வை பார்த்தவர் ஆமா தேவ் நான் ரொம்ப நாளா உன்னை கேட்கணும்ன்னு நினைப்பேன் ஆனா மறந்துடுவேன் என்றிட

'என்னம்மா கேட்கணும்..??' என்றான் கையில் இருந்த குழந்தைக்கு இட்லியை பாலில் தோய்த்து ஊட்டியவாறு

"அது ஒண்ணுமில்லை என்னை கவுக்க எப்பவும் கைவசம் பாட்டு ரெடியா வச்சிருப்பியே ஒருவேளை ப்ரீத்தி இனி... என்று ப்ரீத்தியை பார்த்தவர்.. ஒருவேளை என்ன ஒருவேளை எனக்கு நம்பிக்கை இருக்கு நீ சொல்லு ப்ரீத்தியை கவுக்க என்ன பாட்டு வச்சிருக்க..?? " என்றவர் அவன் நெற்றி யோசனையில் சுருங்குவதை கண்டு,

"அதாவது நீ ஒன்னு கேட்டு அதை ப்ரீத்தி மறுத்து சொல்லவே முடியாத படி லாக் பண்ற ஒரு பாட்டு" என்று தெளிவு படுத்த

விஷ்வாவின் முகத்தில் மென்னகை படர்ந்தது..

அதை கண்ட வித்யா..., "ஆனா என் மருமக அவளோ சீக்கிரம் அசருற ஆள் இல்லை தே.." என்று அவர் முடிக்கும் முன்னமே,

"நீ காற்று, நான் மரம்,
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி,
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்
நீ இரவு, நான் விண்மீன்,
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்..

என்று விஷ்வா ஆரம்பிக்கவுமே அசந்து போய் நின்றுவிட்டார் வித்யா... அவனோ அதை கண்டு மெல்லிய புன்னகையுடனே தொடர்ந்து,


"நீ அலை, நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்று கொள்வேன்


நீ உடல், நான் நிழல்
நீ விழ வேண்டாம், நான் விழுவேன்"


என்ற வரிகளே அவன் காதலின் ஆழமும் ப்ரீத்திக்கான அவன் துடிப்பையும் எடுத்துரைக்க வித்யாவின் விழிகளில் லேசான கண்ணீர் படலம் உருவானது.

விஷ்வாவோ குழந்தையை தட்டி கொடுத்தவாறே கண்மூடி தொடர்ந்து பாடலில் லயித்திருந்தான்.


"நீ கிளை, நான் இலை,
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர் தரிப்பேன்

நீ விழி, நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்

நீ பகல், நான் ஒளி,
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்"


என்று உயிரை உருக்கி வார்த்திகளாக அவன் வடித்து முடித்த போது பேச்சற்று போனார் வித்யாதேவி.

விஷ்வாவோ பாடலை முடித்த பின்பும் கண்களை திறக்காமல் இமைகளுக்குள் ஊடுருவி நின்ற ப்ரீத்தியை ரசித்தவாறே ஒருவித மோன நிலையில் நின்றிருந்தவன் குழந்தையின் தொடுகையில் விழிகளை திறக்கவும் அதில் தோட்டத்தில் விளையாடி முடித்து வர்ஷுவுடன் சேர்ந்து பூக்களை பறித்து கொண்டு இருந்த ப்ரீத்தி நிறைந்தாள்.

சில நொடிகள் இமைக்கவும் மறந்து அவளை பார்த்திருந்தவன் மெல்ல வித்யாவின் புறம் திரும்ப அவர் நின்றிருந்த நிலையை கண்டு.


"என்னமா இப்படி நிற்கிறீங்க..?? ஏன் பாட்டு நல்லா இல்லையா..??" என்று கேட்க,

அவரோ இதை விட அவன் மெய்காதலை வடிக்க வேறு பொருத்தமான பாடல் இருக்க வாய்ப்பே இல்லை என்பதாக நினைத்தவர் குரலை செருமி அவனிடம் "இதை கேட்டா ப்ரீத்தி கிளீன் போல்ட் சந்தேகமே இல்லை ஆனா.." என்று யோசனையுடன் நிறுத்தியவர்,

"ஆமா இதுக்கு முன்ன நீ ப்ரீத்திக்கு வேற ஏதாவது பாட்டு பாடி இருக்கியா..??" என்று கேட்க,


விஷ்வாவின் முகத்தில் ஈயாடவில்லை..!! பின்னே அவன் பிரீத்தியிடம் பாடிய பாடல்கள் எத்தனை வில்லங்கமானவை என்று அவனுக்கு தானே தெரியும் அதை எப்படி அவரிடம் கூற..!!! அதனால் குழந்தையை சாக்கிட்டு பதிலளிப்பதை தவிர்த்து மெல்ல அங்கிருந்து நழுவினான்.

ஹீரோ ஆர்மி கண்ணுல தண்ணி பார்க்க வேணாமேன்னு நாலு எபிக்கு அப்புறம் வரபோற டீசரை இன்னைக்கு போட்டிருக்கேன்.. அதுக்கு பதிலா இனி வர போற நாலு எபிக்கும் யாரும் பொங்க மாட்டோம்ன்னு சத்தியம் பண்ணிட்டு போங்க தங்கம்ஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top