Thank u all...
உங்களோட அன்பும் ஆதரவும் எனக்கு எல்லையற்ற சந்தோசத்தை தந்தது டியர்ஸ்... என்னோட நீங்க பயணிச்சதுக்கு மனமார்ந்த நன்றி...
ஏன் கதை / அப்டேட் குட்டி?
என் கதைகள் பெரும்பாலும் குறுநாவல்கள் தான்... அது எழுத தான் எனக்கு நேரம் ஒத்து வரும்...
கண்மணி, சுடர் கொடி, அக்ஷயா போன்ற மாத இதழ்களில் என் கதையை நீங்கள் பார்த்திருக்கலாம்.
மாத இதழ்களுக்கு அனுப்பும் கதைகள் எல்லாம் பக்க அளவுகளுக்கு உட்பட்டது. அதனால் குட்டி கதைகள்... சரி அத்தியாயங்களை கொஞ்சம் நிறைய காட்டி வைப்போமே என குட்டி குட்டியாக எழுதி make up செய்திருப்பேன்.
அடுத்த கதை பெரிதாக தாங்க...
நான் என்ன வெச்சுட்டா வஞ்சனை செய்யறேன்... மொத்தமே 4,5 பெரிய கதை எழுதி இருப்பேன்.
மீதி எல்லாமே magazine க்காக எழுதி அனுப்பி விடறது தான்... நீங்க கேட்டதுக்காக அடுத்து ஒரு பெரிய கதை போட்டுடலாம். ஆனா எல்லாமே அப்படி எதிர்பார்க்காதீங்க... என் ஸ்டைல் இதுதான். என்கிட்ட இருக்கும் கதைகள் சின்னது தான்...
எபிலாக்...
எனக்கு எபிலாக் எழுதி பழக்கமே இல்லைங்க. 25 கதைகள் பக்கம் எழுதியிருப்பேன். அதுல ஒருமுறை தான் எபிலாக் வந்திருக்குன்னா பாருங்களேன்...
இந்த கதைகள் எல்லாம் எழுதி முடிச்சே சில வருஷங்கள் ஆகி இருக்கும்... உங்களோட சேர்ந்து நானும் ஒருமுறை படிக்கிறேன் அப்படிங்கிறதே எனக்கு பெரிய சந்தோசம்.
வேறு ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க... சீக்கிரம் அடுத்த கதையோட வந்துடறேன்.