போயும்போயும் வாசுவோட சகோதரி மிர்த்திக்கு உதவுவாங்கன்னு எதிர்பார்த்தேனே (மிர்த்தியும் தான்) என்ன சொல்லறது, ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மாதிரி தான் இருக்காங்க.
இவங்களுக்கும் logic-கோட சாக்கு கிடைக்குது, யோகிகிட்ட இருந்து இவளை தள்ளி வெக்க.
சரி திவசத்துக்கு போகக்கூடாதுன்னா, இவர்களே நல்ல மங்கள விஷயமா
மிர்த்தி-யோகி கல்யாணத்தை fix பண்ணவேண்டியது தானே.
அவங்க கூட அனுசரணையுடன் பேசி அவங்க தடுமாறின வயசுலயும் அவங்க சார்பாக யோசிச்சு ஆதரவு கொடுக்கலை, (செஞ்சுருந்தா பேரப்பிள்ளை இப்ப
3-ஆவது /4-ஆவது படிச்சுட்டு இருக்கும்)
அது தான் இல்லைன்னு, அவங்களாகவே வேதனைகளைக் கடந்து, வளர்ந்து, மனசை நேர் செஞ்சு முன்னேறி பக்குவத்துடன் இப்ப தங்களோட காதலுக்காக போராடுறாங்க. இப்பவும் வாசு அவங்களோட விருப்பத்தை மதிக்க மாட்டேங்கறார். பாவம் அவனுக்கு உரிமையா வந்து பேசி பெண் கேட்க அப்பா அம்மாவும் இல்லை, இருந்த ஒரே மாமாவும் இல்லை. இதெல்லாம் கொஞ்சம் கூட தோணாதா வாசுவுக்கு.
என்னிக்குமே யோகியை பார்த்துட்டா மிர்த்தியோட மனசு மூளையை அடக்கி தான் வைக்கும். இப்ப ஒன்னும் புதுசா நடக்கலை.
ஏது, மிர்த்தி யோகிகிட்ட வில்லுப்பாட்டா வசைமாரி பாடறதா? Chance-சே இல்லை. அவளோட அதிகபட்ச கோவத்தோட வெளிப்பாடே kitchen போய் காபி போட்டு இவனுக்கு கொடுக்கறது தானே. கூடுதலா முடிஞ்சா டிபனும். இது புரியாமல் மடையன் மிர்த்திகிட்ட கோவிச்சுட்டு போறான்.
டேய் யோகி, நீ உன்னோட சின்ன வயசுல உணர்ச்சிவசப்பட்டு அவகிட்ட உனக்கு இருக்கற காதலை காமிச்சு அவளை காயப்படுத்தின.
இப்ப ஆர்ப்பாட்டமில்லாமல் உன் காதலை காமிக்க கோவப்பட்டு அவளை காயப்படுத்தற. பாவம் மிர்த்தி. அவ யாருக்குன்னு பார்ப்பா?
Finally, பொறுத்தது போதும்னு கிளம்பிட்டா மிர்த்தி. நிச்சயம் தனக்காக இல்லாட்டியும் யோகியின் தனிமைக்கு முற்றுபப்புள்ளி வைக்கவாவது இந்த முறை மிர்த்தி தன் அப்பாவிடம் பேசுவா. பேசி(மிரட்டி ) அவரை சம்மதிக்க வைப்பான்னு எதிர்பார்க்கறேன்.