Shakthimagizhvathani
Member
உள்ளம் கொள்ளை போகுதடா
ஷக்தி : அச்சு ஏண்டி இப்படி உரஞ்சு போய் நிக்கர
ஷிவா : அது எங்களை பார்த்ததால் இருக்கும்
ஷக்தி : (திடீரென்று கேட்ட குரலில் பதறிய ஷக்தி பின் நிதானத்திற்கு வந்து) ஹலோ நீல சட்டை என்ன நீங்க இப்படி திடீர்னு வந்து நிக்கறீங்க இனிமே ஏதாவது குரல் குடுத்துடே வாங்க இல்லனா நாங்க பேசறத கேட்டு நீங்க தான் வருத்தப்படுவீங்க, ஏதோ இன்னைக்கு கொஞ்சம் மரியாதையா பேசிட்டு இருந்தோம் .
வசந்த் : எது மரியாதையாவ என்ன உராங்குட்டான் னு சொன்னது உங்களுக்கு மரியாதையா அண்ணி
ஷக்தி : இதோ பாருங்க மஞ்ச சட்ட நாங்க அக்கா தங்கச்சி குள்ள ஆயிரம் பேசிப்போம் நீங்க ஏன் அதா கேக்கறீங்க
ஷிவா : ஷக்தி ஏன் பேரு ஷிவா இவன் வசந்த் தயவு செஞ்சு இந்த சட்ட கலர் சொல்லி கூப்பிடாதீங்க
ஷக்தி : சரிங்க ஆனா நாங்க உங்கள எப்படி சொல்லி கூப்பிடறது பேர் சொல்லி கூப்பிட்டா எங்க அம்மாக்கள் எங்களை பின்னி எடுத்துடுவாங்க
வசந்த் : அப்போ இப்ப கூப்பிட்ட மாதிரி கூப்பிட்டா கோவில் காட்டுவாங்களோ
ஷக்தி : மஞ்ச சட்ட என்ன கிண்டலா
வசந்த் : நீங்க எனக்கு அண்ணியா வரப்போறீங்க தயவு செஞ்சு என்ன பேர் சொல்லி கூப்பிடுங்க நான் தினமும் மஞ்ச சட்ட போட மாட்டேன்.
ஷக்தி : ஓகே வசந்த் அழுந்துடாதீங்க நான் உங்கள பேர் சொல்லியே கூப்பிடுறேன்
ஷிவா : ஷக்தி , வசந்தும் அஸ்வினியும் கொஞ்சம் தனியா பேசிக்கட்டும் நாம அப்படி தள்ளி போய் நிக்கலாமா
வசந்த் : அவளோ நல்லவனா டா நீ, அண்ணிகிட்ட பேசனும்னா போய் பேசவேண்டியது தான அதுக்கு ஏன் என்ன இந்த பாப்பா கிட்ட கோத்துவிடற
அஸ்வினி : ஹலோ மஞ்ச சட்ட யாரை பாப்பா னு சொல்லறீங்க நான் காலேஜ் lecturer புரிஞ்சிதா
வசந்த் : சாரிங்க
அஸ்வினி : அது
அப்பொழுது அங்கு வந்த ஷர்மி
ஷர்மி : டேய் ஷிவா வசந்த் நீங்க இங்க தான் இருக்கீங்களா அம்மா உங்க ரெண்டு பேரையும் கீழ கூப்பிடறாங்க
ஷிவா : ஷக்தி மற்றும் அஸ்வினியிடம் இவதாங்க எங்க தங்கச்சி பேர் ஷர்மிளா
ஷக்தி மற்றும் அஸ்வினி ஷார்மியை பார்த்து அறிமுக புன்னகை சிந்த அவள் தன் தமயன்களை அழைத்து செல்வதிலே குறியாய் இருந்தாள் . அவர்கள் சென்ற பிறகு
அஸ்வினி : ஷக்தி என்னடி இந்த பொண்ணு நம்ம முன்னாடியே அவங்கள டா போட்டு பேசுது
ஷக்தி : நம்மக்கு என்ன வந்தது நம்மள டீ போடாம இருந்த சரி தான்
அஸ்வினி : கொஞ்சம் திமிர் புடிச்ச பொண்ணு மாதிரி இருக்கு டீ
ஷக்தி : யாரையும் முதல் சந்திப்புலே தவறா நினைக்க கூடாதுடீ
கீழே வந்த ஷிவா ஷர்மியிடம்
ஷிவா : ஏன் ஷர்மி இவ்வளவு அவசரம் அவங்க கிட்ட உன்ன அறிமுக படுத்தினா கொஞ்சம் நின்னு பேசமாட்டியா இப்படி எங்களை இழுத்துட்டு வர இது தப்பு ஷர்மி
இதுவரை தன்னை கடிந்து கூட பேசிடாத தன் தமயன் தன்னை குறை கூறுவது ஷர்மிக்கு பிடிக்கவில்லை அவளின் முக மாறுதல்களை சரியாய் கணித்த பரமேஸ்வரி
பரமேஸ்வரி : என்ன ஷிவா குழந்தை கிட்ட இப்படி வெடுக்குனு சொல்லற பாரு அவ முகமே என்னமோ மாதிரி ஆகிடுகிச்சு இன்னும் அவங்க நம்ம வீட்டுக்கே வரல அதுக்குள்ள ஏன் புள்ளைய அவங்களுக்காக நீ திட்டுவியா
தன் தாயை பற்றி புரிந்து கொண்ட ஷிவாவோ இதற்க்கு மேல் பேசின்னல் நமக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டு வாயை முடிகொண்டான் எப்பொழுதும் போல.
ஷண்முகமும் லக்ஷ்மியும் அனைவரையும் விருந்துண்ண அழைக்க அதனை நாசுக்காக மறுத்த பரமேஸ்வரி நிச்சயதார்தத்திற்கு பிறகு இதெல்லாம் இருக்கட்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். அவர்கள் கிளம்புவதற்கு முன்பு ஷக்தியையும் அஸ்வினியையும் அழைத்து பூ வைத்து விட்டே அனைவரும் சென்றார்கள்.
இரண்டு நாள் கழித்து வைத்தியநாதன் ஷண்முகம் குடும்பத்தாரை அழைத்து அடுத்த வாரம் புதன் கிழமை நாள் நன்றாக இருப்பதால் அன்று நிச்சயம் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு அனைவரின் சம்மதப்படி அன்று நிச்சயம் என்று முடிவானது. நிச்சயதார்த்த புடவை வாங்க இரண்டு குடும்பமும் திருநெல்வேலி RMKV க்கு முதலில் வந்தனர்.
ஷிவாவிற்கு தனது உடைகளை ஷக்தி தேர்வு செய்து தர வேண்டும் என்று ஆசை ஆனால் தனது எண்ணத்தை யாரிடம் சொல்வது என தயக்கமாக இருந்தது. காட்டும் அணைத்து உடைகளிலும் திருப்தி அடையாமல் பார்த்து கொண்டிருந்தான்.
ஷக்தி மற்றும் அஸ்வினி க்கு புடவை எடுக்கும் பிரிவிற்கு அனைவரும் சென்றனர் அஸ்வினி தனக்கு புடவை எடுக்க வசந்த் வரவில்லையே என்று புலம்பிக்கொண்டு கடையையே ஒரு வழி செய்து கொண்டிருந்தாள். ஆமாம் பரமேஸ்வரி வசந்தை கடைக்கு அழைத்து வரவில்லை காரணம் அவர்கள் உறவில் யாருக்கோ திருமணமாம் அவனை அங்கு அனுப்பியிருந்தார். இதை கேட்டதில் இருந்து அஸ்வினி பரமேஸ்வரியை தாளித்துக்கொண்டிருந்தாள். ஷக்திக்கான புடவையை பரமேஸ்வரி தேர்வு செய்ய அதன் வண்ணம் ஷக்திக்கு பிடிக்கவில்லை அனைவருக்கும் இதை எப்படி பரமேஸ்வரியிடம் சொல்ல என்று தடுமாறும் பொழுது ஷக்தி நேரே சென்று தனக்கு பிடித்த lavender colour புடவையை எடுத்து பரமேஸ்வரியிடம் கொடுத்துவிட்டு இதுதான் தனக்கு பிடித்திருப்பதாக கூறி சென்று விட்டாள்.
பரமேஸ்வரிக்கு ஷக்தியின் இந்த செயல் சுத்தமாக பிடிக்கவில்லை அவரது மறுப்பை அவர் தெரிவிக்கும் சமயம் அங்கு வந்த ஷிவா ஷக்தி எடுத்த புடவையை எடுத்து கொண்டு பரமேஸ்வரியிடம் சென்று
ஷிவா : அம்மா எவ்வளோ அழகா புடவை தேர்வு செய்திருக்கீங்க இந்த புடவை மிகவும் அழகாக இருக்குது அம்மா
பரமேஸ்வரி : ஆமாடா கண்ணா ஏன் வீட்டு முதல் மருமகளுக்கு நான் பாத்து பாத்து எடுத்தது உனக்கு புடிச்சிருக்கா
வைத்தியநாதன் : (பரமேஸ்வரியின் காதினுள்) அது எப்புடி பரமு அந்நியன் மாதிரி இப்படி திடீர்னு மாறிட்ட
பரமேஸ்வரி : அதுவா வீட்டுக்கு வாங்க எப்படினு சொல்லறேன்
அதன் பிறகு வைத்தியநாதன் தன் வாயை ஏன் திறக்க போகிறார்
அடித்து பிடித்து கடைக்கு வந்த வசந்தை பார்த்த பரமேஸ்வரி ஏன் வசந்த் உன்ன கல்யாணத்துக்கு தான போக சொன்னன் நீ இங்க வந்திருக்கிற.
வசந்த் : மத்தவன் கல்யாணத்துக்கு நான் போய்ட்டா ஏன் கல்யாண வேலைய யாரு கவனிக்கிறது அதான் நேரா இங்க வந்துட்டேன்
வசந்தை பார்த்ததும் முகம் மலர்ந்த அஸ்வினி பின் தனக்கு பிடித்த Baby pink நிற பட்டு சேலையை அனைவருக்கும் காட்ட, ஏற்கனவே அனைவரின் முன்பும் வசந்த் தன்னை மரியாதை குறைவாய் பேசிவிட்டான் என கருதிய பரமேஸ்வரி அஸ்வினியின் புடவை தனக்கு பிடிக்கவில்லை என்றும் அதற்க்கு மாறாக நல்ல பஞ்சு மிட்டாய் நிறத்தில் உள்ள புடவையை எடுத்து இதுதான் தனக்கு பிடித்திருக்கிறதென்றும் கூற அஸ்வினியின் முகம் வாடி விட்டது. தாயின் பேச்சிற்கு ஷர்மி வேறு ஒத்து ஊத இதை கேட்ப்பார் யாரும் இல்லையோ என்று அஸ்வினி வசந்தின் முகத்தையே பார்த்துகொண்டிண்டிருந்தாள். இதற்க்கு மேல் தன்னால் முடியாது என்று வசந்த் கையை தூக்கி விட நடக்கும் அனைத்தையும் பார்வையாளராக பார்த்து கொண்டிருந்த ஷக்தி எழுந்து சென்று பரமேஸ்வரியிடம் பேசபோக அதற்குள் அங்கு வந்த ஷிவா இப்போ என்ன மா இந்த பஞ்சு மிட்டாய் கலர் உனக்கும் ஷர்மிக்கும் பிடிச்சிருந்தாள் இதை ஷர்மிக்கு எடுத்துக்கலாம். அஸ்வினிக்கு பிடித்த கலர் புடவையை அஸ்வினி எடுத்துக்கட்டும் என்று கூறி புடவைக்கு பணம் கட்ட எடுத்து சென்று விட்டான். ஷிவாவின் இந்த செயல் அஸ்வினிக்கு அவன் மேல் மிகுந்த மரியாதையை விளைவித்தது.
பரமேஸ்வரியின் காதினுள் ஷர்மி
ஷர்மி : அம்மா அந்த புடவை எனக்கு புடிக்கல வேற வாங்கிதா மா
பரமேஸ்வரி : இவ வேற ஏண்டி நானே ஏன் ரெண்டு பிள்ளைகளும் ஏன் கைநழுவி போய்டுவாங்களோனு இருக்கிறன் உனக்கு புடவை தான் இப்போ பிரச்சனையா
ஷர்மி : அப்போ நீ கட்டிக்கோ அந்த புடவைய எனக்கு வேண்டாம்
நடக்கும் களேபரத்தை பார்த்த ஷக்திக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை , தனியாக உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்த ஷக்தியின் அருகில் வந்த ஷிவா
ஷிவா : ஷக்தி தயவு செய்து எங்க அம்மாவை தவறாக நினைக்காதீங்க அவங்க ரொம்ப நல்லவங்க , இன்னைக்கு ஏதோ அவங்களுக்கு மனசு சரியில்ல அதுதான் இப்படி என்று கூறி நின்றான்
ஷக்தி : நல்ல வேளை Highways ல வர speed breaker மாதிரி வந்து உங்க அம்மாவை காப்பாத்திடீங்க இல்லனா இங்க ஒரு கலவரமே நடந்திருக்கும்.
ஷக்தியின் இந்த பேச்சு ஷிவாவை மிகவும் வருத்தமடைய செய்தது அதை அவன் முகம் வெளிப்படுத்த அதை கண்ட ஷக்தி தன் மேல் தவறு இல்லை என்று அமைதியாக அமர்ந்து கொண்டாள் .
அடித்து மாப்பிள்ளை களுக்கு தேர்வு செய்ய அனைவரும் சென்று விட பரமு தற்பொழுது அமைதியாக வந்தார். ஷிவா மற்றும் வசந்த் பரமுவை ஆனந்த படுத்த அவர்களுக்கு பரமுவே தேர்வு செய்யுமாறு கூறினர். இதை கேட்டு பரமு ஆனந்தத்தில் திளைத்துவிட்டார் உடனே தன் புதல்வர்களுக்கு ஓடி ஓடி அனைத்து வகை துணிகளையும் பார்த்தார் அவருக்கு எதுவும் பிடிக்கவில்லை. அப்பொழுது அங்கு ஓரமாக அமர்ந்து கொண்டு தனது mobile game விளையாடிக்கொண்டிருந்த ஷக்தியிடம் வந்த பரமு என்ன ஷக்தி யாருக்கோ வந்த விருந்துனு உக்காந்திருக்குற அவன் உங்களுக்கு புடிச்ச கலர் ஏன் மனசு வருத்தப்படாம எடுத்து குடுத்திருக்கான் நீ என்ன நா அவனுக்குனு பாக்காம இங்க வந்து உக்காந்திருக்குற என்று ஷக்தியிடம் காய்ந்தார். இந்த அம்மாக்கு இப்ப என்ன பிரச்சனை நான் சும்மா தான உன்காந்திருக்கிறான் ஏன் கிட்ட வந்து வம்பு பண்ணுது என்று நினைத்து கொண்டு பரமுவை பார்த்துகோண்டிருந்தாள். அப்பொழுது லக்ஷ்மி கண்களால் ஷக்தியிடம் எதுவும் பேசாதே என்று கூறிக்கொண்டிருந்தார்
பரமு விடம் பதில் பேசாத ஷக்தி நேரே ஆண்கள் பக்கத்திற்கு சென்று 5 நிமிடத்தில் Dark Purple colour half coat மற்றும் அதற்க்கு தகுந்த சட்டை மற்றும் கால் சட்டை எடுத்து விட்டு ஷிவாவிடம் கொடுத்து விட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து mobile game விளையாட ஆரம்பித்து விட்டாள். இந்த இடைப்பட்ட நேரத்தில் அஸ்வினி அவளுக்கு எடுத்த அதே நிறத்தில் வசந்துக்கு half coat மற்றும் அதற்க்கு தகுந்த சட்டை மற்றும் கால் சட்டை எடுத்து விட்டு வசந்த்திடம் கொடுத்துவிட்டு வந்து ஷக்தியின் அருகினில் அமர்ந்து கொண்டாள்.
ஷிவாவிற்கு தனக்கு ஷக்தியே தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி , அந்த ஆனந்த கடலில் அவன் மூழ்கி இருக்க அங்கு வந்த விஷ்ணு டேய் ஷிவா ரொம்ப சந்தோஷ படாதடா இன்னும் உங்க அம்மா இந்த துணிய ஓகே பண்ணல என்று சத்தமில்லாமல் ஒரு வெடி வைத்துவிட்டு சென்று விட்டான் . ஷிவாவிற்கு அம்மா இந்த துணி வேணாம்னு சொல்லிட்டாங்க நா ஷக்தி கோச்சிப்பாங்க அம்மாவையும் ஷக்தியையும் எப்படி சமாளிக்க என்று முழித்துக்கொண்டிருந்த வேளை அங்கு வந்த வைத்தியநாதன் என்ன ஷிவா அதான் உங்க அம்மா ஆசை படி மருமகளே உனக்கு துணி தேர்வு செஞ்சிடுச்சு இன்னும் ஏன் முழிச்சிகிட்டு இருக்குற சீக்கிரம் வா பணம் கட்டணும் என்று அவனையும் வசந்தையும் கையோடு அழைத்து சென்று விட்டார். அவரை பார்த்து ஷிவா மற்றும் வசந்த் சிரித்துக்கொண்டிருந்தனர்.
தொடரும்