மிகவும் அருமையான பதிவு மிலா
.வசந்த் தான் தன்னிடம் பேசியது,போன் அனுப்பியது என கிருஷ்ணாவுக்கு தெரியுமா
.உண்மையா லவ் பண்ணா தேடி வரட்டும்னு சொன்னவ தாலி கட்டவும் ஏத்துட்டாளா.கோதைக்கு தன்னை பிடிச்சிருந்ததை கேட்ட கிருஷ்க்கு சந்தோஷம்
துணை முதல்வராக போகும் இறுமாப்பில் இருந்த கனகுவை,அருள் பணம் கொடுத்து யாரும் ஓட்டு போடாம செஞ்சுட்டான்
.கனகவேல் செய்த பாவத்தின் பலனாக படுக்கையில் கிடக்கும் நிலை..
ராதை பெத்த பொண்ணு இல்லைனாலும் வளர்த்த பாசம் கூட கயந்திகாக்கு இல்லாமல் போயிடுச்சு
.இவ திமிர் பிடிச்சு கல்யாணம் பண்ணிட்டு,இப்ப கண்ணபிரான் மேல வழக்கு போடறேன்னு சொல்றா
.கடைசி வரை திருந்தாதவளுக்கு மரணமே தண்டனையா கிடைச்சிருச்சு
.
அக்கா மக பஜாரின்னு நெனச்ச ராதை,அபியின் மகள் என தெரிந்த பின் அமைதியானவளாக பெற்றோர் சொல்வதை கேட்டு யுவனை திருமணம் செய்ய
,தன் காதலி ஊமைன்னு நெனச்சு கோதைக்கு தாலி கட்டுன கிருஷ் தான் மாட்டிட்டு முழிக்கிறான்
.கிருஷ்,அர்ஜூன்,மாலினி போல அவர்கள் குழந்தைகளும் ஒன்றாகவே இருப்பது அருமை
.
அருமையான கதை மிலா.கயந்திகா சொத்துக்காக யுவனை,கோதைக்கு திருமணம் செய்ய நினைக்க,,
அபி,கண்ணபிரானின் மனைவி என ஊரார் முன் காட்டுவதற்காக கோதை திருமணத்துக்கு சம்மதம் சொல்ல
,திருமணம் நடக்கும் நேரத்தில் தன் காதலி என கிருஷ்,கோதைக்கு தாலி கட்டுவதும், அங்கு ஏற்படும் பிரச்சனையில் அபி மூத்த மனைவி என தெரிய வருவது எதிர்பாராத திருப்பம்....
கிருஷ்,கோதை திருமணத்தை கேட்டு கோபப்படும் யசோதையை பேசியே சரி செய்வதும்,கனகுவை கண்டதும் "நான் பார்த்துட்டேன்"என கோதை குழந்தைய போல ஆட்டம் போட்டு கவுப்பதும்
,
வடிவுபாட்டி நீங்க தான் தாலி கொடுத்து அனுப்பியதான்னு கேட்பது கலகலக்கும் பதிவு
சிறுவயது அன்பழகியை கடலை மிட்டாய் கொடுக்கும் அருள்,எதிர்பாராத அவர்கள் திருமணம்...
அப்பா சொல்லுக்கு தலையாட்டும் பொம்மையாக இருக்கும் அருள்
, மனைவிக்காக அப்பாவை மிரட்டுவது
,தாயின் வாழ்க்கையை கெடுத்ததால் கனகு மேல் கொண்ட வன்மம் வெளிப்படுவதுடன் கனகுவை மிரட்டி முதல்வராவது என அருள் அசத்திட்டான்
.
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.இனிமையான முடிவு. வாழ்த்துக்கள் மிலா