அருமையான பதிவு மிலா.கோதை இல்லைன்னா ராதை,ராதை இல்லைன்னா மாலினி என
வம்பிழுக்க சொன்னது இப்போ கிருஷ்ணாவுக்கே வினையா மாறிடுச்சு.கனகவேல் சொன்னதை கேட்ட கோதை,கிருஷ், மாலினிய காதலிச்சதா நெனச்சுட்டு அடிபிண்றா.
போன் வந்த பார்சல் கிருஷ் பேர்ல வராம பூங்கோதை பேர்ல வந்திருக்கு.மாலினி அதிர்ச்சியாகறது போல போன்ல என்ன இருந்தது. கிருஷ்கு தெரியாம ஏன் அழிச்சா.
அரசியல்ல நிக்க சொன்ன கனகவேலுக்கு சரியான பதிலடி கொடுத்ததோடு,கட்டாயம் பண்ண நெனச்சா நாட்டை விட்டே போயிடுவேன்,உங்க கைல சிக்க மாட்டேன்னு கிருஷ் மிரட்ட, மகன் சொன்னதை செஞ்சிடுவான்னு மகனை சமாதானம் பண்ண கணவனை விட்டு போய்ட்டாங்க.
கனகவேல் செஞ்ச தப்போட ஆதாரம்,சுவிஸ் வங்கி கடவுச்சொல் எல்லாம் அருள்வேல்ட்ட இருக்க, இத்தனை நாள் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருந்தவன் விஸ்வரூபம் கண்டு ஒன்றும் செய்ய முடியா நிலை அதிர்ச்சியில் கனகு.
அருள் தேர்தல்ல ஜெயிச்ச பிறகு, கனகு மூட்டை முடிச்சு கட்டிட்டு போய் ஊர்ல இருக்கற பஞ்சு ஆலைய பார்த்துக்கனுமா.அம்மா வாழ்க்கைய நாசம் பண்ணதுக்கு தண்டனை என சொல்லி அசத்திட்டான் அருள்.