என் அலாதிநேசம் நீ!.. 9

Advertisement

mallika

Administrator

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இப்படி தான் நடந்து இருக்கும்னு எதிர் பார்த்தது தான்... ஆனாலும் படிக்கும் போது பதறுது... :(:( ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச தப்புக்கு தண்டனை அவளுக்கு மட்டும்.... அடேய் யோகி, இந்த மாதிரி நிலையில நிறுத்தி, எங்கடா போய் தொலைஞ்ச? :mad::mad:

 
Last edited:

உதயா

Well-Known Member
அடேய் யோகி எந்த நிலையில் விட்டுட்டு போயிருக்க.....

ஊருக்கு போன யோகி திரும்பி வரவே இல்லையா...... இல்லை வந்தவனை வாசு பார்க்க விடாமல் அனுப்பிட்டாரா

ஏதோ காதலிச்சு மாட்டிகிட்டாங்க என்று நினைச்சா... இவங்க கர்ப்பம் வரை போயிட்டாங்க....

யோகி எங்க இருக்கான்.... சீக்கிரம் வர சொல்லுங்க...
 

Novel-reader

Well-Known Member
பாண்டிச்சேரிக்கு பிள்ளைங்களை விட்டுட்டு tour போனாரா வாசு? நான் கூட ஏதோ பக்தி உலாவோன்னு நினைச்சேன். தாயில்லாத குழந்தைகளை தாயாகவும் இருந்து கவனிக்கணும். அதுக்கு பொறுமையும் மெனக்கெடலும் அதிகம் தேவை. இவர் அப்படியெல்லாம் குழந்தைகளோட நேரத்தை செலவு பண்ணினதா தெரியலை. இவரால முடிஞ்சதை (materialistic needs) பூர்த்தி பண்ணுகிறார் அவ்வளவு தான். ஆனால் அவங்களோட வயசுக்கும் மனசுக்கும் தேவையான support இவர் கொடுக்கவே இல்லை.

பக்குவமும் மன முதிர்ச்சியும் இருக்க வேண்டிய இவருக்கே familyresponsibilities-லிருந்து ஒரு சின்ன break தேவைப்படுது. இவர் அங்க போய் என்ன தியானப்பயிற்சியில் ஈடுபட்டுட்டா வந்தார்? அப்ப இவரை, இவர் செய்த தவறுக்காக யாரு தண்டிப்பது?

குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சி காலத்தில் மனநிலை மாற்றதிற்கேற்ற பிசகுகள் வரத்தானே செய்யும். அதை எல்லாம் இவர் கவனிக்கவே இல்லையே.

பெண்ணோட நிலை தெரிந்தவுடன் முதலில் அவளோட வளர்ப்புல நம்ம எங்க தவறினோம்ன்னு அவர் ஒரு நொடி கூட சுய அலசல் செய்யலை. அடிக்க கிளம்பிட்டாரு. Atleast யாருன்னு தெரிஞ்ச பின் அவளிடமும் பொறுமையா பேசி, ரங்கநாதனிடமாவது இது பற்றி பேசி இருக்கலாமே. இவங்க குடும்ப நண்பர்கள் தானே.
So அம்மா இல்லாத பெண்ணோட நிலை அவல நிலை தான். கஷ்டமெல்லாம் பெண்ணுக்கு தான். பாவம் மிர்த்தி.

டேய் யோகி, இன்னுமாடா அந்த கபடி பஞ்சாயத்து முடியலை. எங்கடா இருக்க? உன்னோட 'லட்டு'-ஐ அவங்கப்பா பூந்தி ஆக்கிட்டாரு. வந்து கொஞ்சம் என்னன்னு கேளுடா.

யோகி தானே சென்னை போனான். ரங்கநாதன் இங்கேயே தானே இருக்கார்? இப்பவும் ஏன் இந்த விஷயம் அவர் வரை போகலை?அவங்க சிறிய வயதில் தப்பு செய்திருந்தாலும், இப்ப அவங்களை மனசுக்கு பிடித்த வாழ்க்கை துணையோட வாழ வைக்க கூடாதா என்ன?
 
Last edited:

Deviharisha

Well-Known Member
Nice epi. Dear, அம்மா இல்லாத பெண் குழந்தை நல்லது கெட்டது தெரியவில்லை. இருவர் செய்யும் தவறுக்கு தண்டனை என்னவோ என்றும் பெண்களுக்கு மட்டும்தான். இந்த யோகி பையன் இப்ப வரை மிர்த்தியை ஏன் பார்க்க வராமல் இருக்கிறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top