அருமையான பதிவு மிலா.சாம்பவி சின்ன வயசுல இந்திராவுக்கு கொடுக்கறதை பார்த்து பொறாமை பட்டதை ஒத்துக்கலாம்.ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகும் அவ குழந்தைங்க கிட்ட வெறுப்பை காட்டறது சரியில்லையே.
சாம்பவி குணம் தெரிஞ்சு முப்பாத்தா சந்திராவை எந்த விஷேசமும் செய்ய அனுமதிக்காத போதே இவ்வளவு வெறுப்பை காட்டறா.முப்பாத்தா இருந்திருந்தா கௌசி,சக்தி கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கவே மாட்டார்.
சின்ன பசங்க ஒன்னா சேர்ந்து விளையாடறாங்கன்னு நெனைக்காம,பெரியவனானா அவளை தான் கட்டிக்குவேன்னு சொல்லுவான்னு சொல்லியே,இவளே வெற்றி மனசுல பெரியவனாகி சந்தியாவை தான் கல்யாணம் செய்யனும் என பதிய வச்சுட்டா.
சக்தி அப்படியே அம்மாவை போல விஷமா இருக்கான்,கௌசிய தள்ளி விடறது,கொட்டறது, தண்ணி கொடுக்கும் போது மயக்க பார்க்கறீயா,விஷம் கலந்து கொல்ல பார்க்கறியான்னு சொல்றது, ஸ்கூல்ல படிக்கற பையன் பேசற பேச்சா பேசறான்.
கபிலர் சொன்னதை கூட கேட்காம திமிர் புடிச்சு வெற்றிட்டயும் சொல்லாம கல்யாண ஏற்பாடு செஞ்ச சாம்பவிக்கு இந்த அவமானம் தேவை தான்.இதில் கௌசி மாட்டிக்கிட்டது தான் பரிதாபம்.வெற்றி,சந்தியாவை கட்டிக்கிட்டதுக்காகவா கௌசியை வேணாம்னு சொன்னா