Very very superb ud, Malli chellam
மிகவும் அருமையான, ஒரு பதிவை தந்திருக்கீங்க,
மல்லி டியர்
அதிலும் இரண்டு பார்ட், சூப்பரோ சூப்பர், மல்லி செல்லம்
வரும் திங்கள் முதல், SJM சங்கீத ஜாதி முல்லை,
தர்றேன்=ன்னு, நீங்க சொன்னது, இன்னும், சூப்பரோ
சூப்பர்தான், மல்லி டியர்
hmm................ நம்ம துரைக்கண்ணன் 2 மாதமாக வராததை
நினைத்து, நம்ம சுந்தரி டியர் வருந்துவது, நன்றாக
இருந்தது பா
ஹா, ஹா, முன்பு ஒரேயடியாக விட்டுப்போனவன், திரும்ப
வந்து ஆசையை மூட்டிவிட்டு, போய்ட்டானே-ன்னு இவளுக்கு
வந்த வேதனையில் ஆத்திரத்தில் தன்னிலை இழப்பது
சகஜம்தான்,
பாவம் வடிவுப்பாட்டி, இவளைப் பற்றி கவலைப்பட்டே
உடம்புக்கு இழுத்து விட்டுக்கொண்டார் போல்
ஐயோ பாவம், சுந்தரி வேறு காலில் சுடுநீரைக் கொட்டிக்
காலைப் புண்ணாக்கி கொண்டாளே
நல்ல வேளையாக நம்ம துரைக்கண்ணன் டியர், சிந்தா
போய்ச் சொல்லி அப்பா முதலான பெரியவர்களை வர
வைத்துவிட்டானே
அட, நம்ம விமலாவா, பாட்டியை பார்த்துக் கொள்ளுறேன்னது!
ஆனால், நம்ம துரையோட வீட்டில், ஐந்து நாட்கள் இருந்ததுக்கு,
ஐந்து ஜென்மத்துக்கும், நம்ம சுந்தரி துன்பப்பட்டிருப்பாள்
போலவே
என்னா பா இது புதுசா திருமணமாகி வந்தப் புதுப்பொண்ணுக்கு
சோறு கூடவா வேளா வேளைக்குக் கொடுக்க மாட்டாங்க?
ஐயோ, நம்ம சுந்தரி எவ்வளவு அவமானப்பட்டிருக்காள்?
இவளை இவ்வளவு பாடுபடுத்திட்டு எப்பிடிப்பா ஒண்ணுமே
நடக்காததைப்போல கூலா சுந்தரி கிட்ட, திரும்ப வராங்க?
நம்ம கண்ணன் டியரையும் சேர்த்துத்தான் சொல்லுறேன்
இவளுக்கு இருக்கிற வசதிக்கு சுந்தரி டியர் பத்து பவுனில் கூட
தாலியைப் போட்டிருக்கலாம்
தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலி தானே என்று
அலட்சியமாக ஒரு சன்ன மெல்லிய சங்கிலியில் தாலியைப் போட்டிருக்கிறாள்
ஆனால், விவாகத்தைத்தான் ரத்து பண்ண முடியும்
விவாகரத்தை என்ன செய்வது?
நீங்கள் தான் சொல்ல வேண்டும், மல்லி செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, மல்லி டியர்