சிவரஞ்சனி, சரவணகுமரன், திலகா மூவரையும் சுற்றுலா அனுப்பி வைத்திருந்தான் ரிஷி. பேரப்பசங்களை சுற்றுவதுதில் தான் பா சுகம் என்று மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக இந்தியா முழுவதும் சுத்திப்பார்த்து விட்டு வரும் படி உத்தரவிட்டிருந்தான். சுற்றுலா சென்றவர்களின் மனமோ வீட்டை சுற்றியே இருக்க ஞாயிறு அன்று வீடியோ காலில் பேர பசங்களோடு செல்லம் கொஞ்சாமல் அவர்களின் சுற்றுலா முழுமையாகாமல் இருந்துக் கொண்டிருக்கின்றது.
அமுதன் குடும்பம் சென்னை வாசம் தான். வெள்ளி மாலையே விமானம் ஏறி மும்பை வருபவர்கள் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து ஞாயிறு மீண்டும் சென்னையை நோக்கி பயணிப்பது வழக்கம். தன் மகள் குடுப்பத்தாரோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று இது மலர்விழி எடுத்திருக்கும் முடிவு.
தியா, பிரதீபன் ரிஷி, கயல் பக்கத்து பக்கத்தில் இன்றும் ஒற்றுமையாக, ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்களின் தொழில் இந்தியா முழுவதும் வியாபித்திருந்தாலும் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க விரும்பாமல் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பது அனைவரினதும் விருப்பமாக இருக்க, மலர்விழியின் குடும்பத் தொழில் காரணமாக அவர்கள் மாத்திரம் சென்னையில் வசிக்கின்றனர்.
"யாரு டாடி இந்த தாத்தா டெய்லியும் காலைல ஸ்கூல் போகும் போது வணங்கிட்டுதான் போகணும்னு சொல்லுறீங்க சரி அதுக்காக லீவு நாளையும் தூங்க விடாம தூக்கிட்டு வந்து ரிஷி மாமா வீட்டுல விடுறீங்க" தியாவை போலவே ப்ரதீபனை உண்டு இல்லை என்று பண்ண பிறந்தவன் தான் பிரபாத். பிரதீபன் தியாவின் இரண்டாவது வாரிசு.
மோகனசுந்தரத்தினால் தான் தனக்கு இந்த வாழ்க்கையும், குடும்பமும் கிடைத்ததென்றதை என்றுமே மறக்காமல் தன் பிள்ளைகளுக்கும் அவர் தெய்வமாக வழிகாட்டுவார் என்று நம்பலானான் பிரதீபன்.
"அப்படியே உன் அம்மா மாதிரி... இவரு பெரிய காலேஜ் படிக்கிறாரு லீவு விட. எல்.கே.ஜி. போற உனக்கே இவ்வளவு அலுப்பு" மனசுக்குள் திட்டினாலும் "தாத்தா தான்டா நமக்கு எல்லாமே! அவரு தெய்வமா இருந்து நம்மள பாத்துக்கொண்டு இருக்குறாரு. தப்பா பேசாத என்ன சரியா" மிரட்டலும், அன்பும் கலந்து கூறியவாறே ரிஷியின் வீட்டினுள் நுழைய ஐந்தே வயதான பிரபாத் இறங்கி ஓடி பூஜையறையில் ஐக்கியமானான்.
அங்கே ஸ்ரீராம் பெரியவனாக நின்று சாமி பாடல் பாட ப்ரதீபனின் செல்ல மகள் ஏழு வயதான தீக்ஷனா கூட பாடிக் கொண்டிருந்தாள். அவர்களை சுற்றி ரிஷியின் செல்லமகள் சஹானா, ப்ரதீபனின் கடைசி வாரிசு பியூஸ் மற்றும் அமுதனின் மகள் மஹிமா வணக்கியவாறு கண்களை மூடி அமர்ந்திருக்க பிரபாத் அவர்களை சீண்டும் வேலையில் இறங்கி இருந்தான்.
நான்கு வயது கூட ஆகாத மஹிமா சமத்தாக அண்ணன் ஸ்ரீராம் சொன்னதைக் கேட்டு பிஞ்சுக் கைகளை கூப்பி சுவாமியை வணங்கிக் கொண்டிருக்க அவளின் தலையின் மேல் வீற்றிருந்த குட்டி தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த ஹேர் பெண்டடை உருவி தன்கையில் அணிந்துக் கொண்டான் பிரபாத்.
"பாத்தியா உன் பையனுக்கு இருக்கும் சேட்டையை... அப்படியே அப்பன் புத்தி நீ என்ன சீண்டுற மாதிரியே உன் பையனும் என் பொண்ண சீண்டிக்கிட்டே இருக்கான். அவனுக்கு என் பொண்ண தர மாட்டேன் சொல்லிட்டேன்" அமுதன் முறிக்கிக் கொள்ள
"போடா டேய் என் மருமகளை தூக்கிட்டு போய் தாலி காட்டுவாண்டா என் சிங்கக்குட்டி"
"என்ன பேச்சு பேசுறீங்க காலையிலையே... ஷூ... அமைதியா இருங்க" தியா அதட்ட கப்சிப் என்றானான் பிரதீபன்.
மோகனசுந்தரத்தின் படத்தை வணங்கி விட்டு ஒவ்வொரு குழந்தையாக வெளியே வர பெற்றோர்களிடம் முறையிடுவதுதான் முதலில் நடக்கும். எல்லாம் பிரபாத்தின் அட்டகாசங்கள். அவனை அதட்டினாலும், மிரட்டினாலும் அஞ்சாமல், பணியாதவன் கொஞ்சமாலும் அடங்குவான் என்றால் அது அகல்யாவிடம் மாத்திரம். ஆனால் அவளும் திருமணமாகி பெங்களூரில் வசிப்பதால் அவனை அடக்கும் வழிதான் தெரியவில்லை.
தீக்ஷனா பிறக்கும் போதே ஸ்ரீராமுக்கு என்று முடிவு செய்திருக்க அதை சிறுவர்கள் மனதில் திணிக்க விரும்பாமல் ரிஷி அவளை நீதான் நல்லா பார்த்துக்கணும் என்ற சொல்லி வைக்க வீட்டுக்கே மூத்தவனான அவன் அதற்கு பின் பிறந்த அன்னைவரையும் காக்கும் கடவுளானான். பெற்றோரிடம் முறையிட்டு அடங்காத பிரபாத்தை பதினோரு வயதான ஸ்ரீராம் வீடியோ கேம் கொடுக்காமல் மிரட்டி பணிய வைத்துக் கொண்டிருக்க குட்டி வாண்டுகளுக்கு அவன் ஹீரோவாகிப்போனான்.
சஹானா கயலை போல் பொறுமையின் மறு உருவமாக இருந்தாள்.
"அவசர பட்டுட்டியே ரிஷி பொறுத்ததும் பொறுத்த பிரபாத் பிறந்த பிறகு சஹானா பிறந்திருந்த அவளை என் மருமகளாக்கி இருப்பேனே" பிரதீபன் மனமுருகி சொல்ல
"அப்போ என் பொண்ணு" அமுதன் முறைக்க
"அதான் பியூஸ் இருக்கானே!"
"ஆமாடா... அவன் தங்கமான பையன் சொன்ன பேச்சு கேக்குறவன் அவனுக்காக ஒரு பொண்ண பெத்துக்கணும்" அமுதன் முந்திக்கொள்ள
"கொன்னுடுவேன். அவனை ரிஷியோட பெண்ணுக்குத்தான் கொடுப்பேன் ரிஷி நீ ஏன் இன்னொரு பொண்ணு பெத்துக்க கூடாது"
ப்ரதீபனை முறைத்தவன் "உனக்கென்ன விளையாட்டா போச்சா... சஹானா உண்டானப்போ வார் மசக்கையாள எவ்வளவு கஷ்டப்பட்டா பொறக்குறப்போ வ்வளவு துடிச்சா அதெல்லாம் பார்த்துட்டு குழந்தேயே வேணாம்னு இருக்கேன்" வாய்விட்டு கூறியவன் மனதுக்குள் "குடிச்சாநாம நம்ம கண்ட்ரோல்லையே இல்ல முதல்ல ஸ்ரீராம் அப்பொறம் சஹானா சத்தியமா இனி சரக்க இனி மோந்து கூட பார்க்க மாட்டேன்"
"உனக்குத்தான் அதெல்லாம் பெருசா தெரியுது அண்ணி கிட்ட கேளேன் ஒண்ணுமே இல்லனு சொல்வாங்க, மலரும் அப்படிதான் சொன்ன.." அமுதன் சொல்ல
"என்ன இங்க மாநாடு நடக்குது... வாரத்துக்கு ரெண்டு நாள் மும்பாய் போலாம்னு சொன்னப்போ முடியாது தொழிலை பார்க்கணும்னு அந்த குதி குதிச்சீங்க, இங்க வந்த ஒட்டிக்கிட்டு திரியிறீங்க முதல்ல வாங்க பசங்களெல்லாம் அப்பாக்களுக்காக வைட்டிங்..." மலர் அமுதனின் கையை பிடித்து இழுக்க மூவருமே எழுந்து உள்ளே நடந்தனர்.
Last edited: