hi......... again pinki தீரன் கூட முட்டிக்க வந்துட்டா
"ஹேய் ஸ்கூபி இங்க என்னடா பண்ணுற? தனியாகவா வந்த? இருக்காதே? தாத்தா எங்கடா?" பிங்கி ஸ்கூபியிடம் கேள்விகளை அடுக்க அது முன்னங்காலை உயர்த்தி பிங்கியின் மேல் ஏறி அவளை அனைத்துக் கொண்டது ஒரு நல்ல நண்பனாய்.
ஸ்கூபியை தேடிவந்த தீரன் அது பிங்கியிடம் இருப்பதை கண்டு யோசனையாக வர ஸ்கூபி அவனை கண்டு குறைக்க ஆரம்பித்தது. அதில் அவனை நிமிர்ந்த்துப் பார்த்து அவனை முறைத்தவள் ஸ்கூபியுடன் செல்லப் போக
"ஏய் நில்லு எங்க போற?" “ஸ்கூபியை கொடுத்துட்டு போ” என்று சொல்ல வருவதற்குள்
"என்ன? என்ன பாலோவ் பண்ணுறியா? டேய் வேணாம் என் கிட்ட வம்பு வழக்காத ஸ்கூபிய விட்டு கடிக்க விடுவேன்" பிங்கி எகிற
"இதோடா இவ உலக அழகி அப்படியே நா இவ பின்னாடி லோலோனு அலைய சும்மா கடுப்படிக்காம போடி"
"போய்கிட்டு இருந்தவளாத்தாண்டா ஏய் நில்லுன்னு வம்பு வளத்துக்கு கிட்டு இருக்க. நான் உலக அழகியானு வேற கேக்குற? எனக்கென்ன கொறச்சல்? நீ தாண்டா சுமார் மூஞ்சி குமாரு. பொத்திக் கிட்டு போறியா" என்று நடையை தொடர
வாயா? வங்காளவிரிகுடாவா? தீரன் வியந்து நோக்கி ஸ்கூபியின் கழுத்து பட்டியை பிடித்து இழுத்தவன் "நாய விட்டுட்டு போ" என்று சொல்ல
"ஓஹ் நீ நாய் பிடிக்கிறவனா? இது ஒன்னும் அனாத நாய் இல்ல எனக்கு தெரிஞ்சவரோட நாய் தான் நானே கொண்டு போய் விட்டுடுறேன்" என்று சொல்ல
அவளை அடுத்து சந்திக்கும் போது நாய்களோடு இருக்கப் போவதை அறியாமல் "யாரப் பாத்து நாய் பிடிக்கிறவன் என்று சொன்ன?" என்று பல்லை கடித்தவன் "எங்க வீட்டுக்கு வரியா வாடி வா வச்சிக்கிறேன் உன்ன" என்று மனத்தால் நினைத்தது விட்டு எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான்.
"என்ன நெட்டுக்கொக்கு நெடுமாறன் அமைதியா போறான் ஏதோ சரியில்ல" என்று முணுமுணுத்தவாறே பிங்கி ஸ்கூபியோடு செல்ல
"இதுங்க ரெண்டும் எப்போ காதலிச்சு? கல்யாணம் பண்ணுறது? செம்ம ஜோடின்னு சேர்த்து வைக்கப் பார்த்தா? ஏற்கனவே முட்டி, மோதிக்கிட்டு உடைஞ்சி கிடக்குதுங்க. ஒட்ட வைக்க ரொம்ப கஷ்டம் போலயே" என்று ஸ்கூபியின் மனசாட்ச்சி புலம்பியவாறே பிங்கியின் பின்னால் சென்றது.
அரோஹி அண்ட் தீரன்{எந்த தீரன்?} கூட்டிட்டு வர ட்ரை பண்ணுறேன்.
"ஹேய் ஸ்கூபி இங்க என்னடா பண்ணுற? தனியாகவா வந்த? இருக்காதே? தாத்தா எங்கடா?" பிங்கி ஸ்கூபியிடம் கேள்விகளை அடுக்க அது முன்னங்காலை உயர்த்தி பிங்கியின் மேல் ஏறி அவளை அனைத்துக் கொண்டது ஒரு நல்ல நண்பனாய்.
ஸ்கூபியை தேடிவந்த தீரன் அது பிங்கியிடம் இருப்பதை கண்டு யோசனையாக வர ஸ்கூபி அவனை கண்டு குறைக்க ஆரம்பித்தது. அதில் அவனை நிமிர்ந்த்துப் பார்த்து அவனை முறைத்தவள் ஸ்கூபியுடன் செல்லப் போக
"ஏய் நில்லு எங்க போற?" “ஸ்கூபியை கொடுத்துட்டு போ” என்று சொல்ல வருவதற்குள்
"என்ன? என்ன பாலோவ் பண்ணுறியா? டேய் வேணாம் என் கிட்ட வம்பு வழக்காத ஸ்கூபிய விட்டு கடிக்க விடுவேன்" பிங்கி எகிற
"இதோடா இவ உலக அழகி அப்படியே நா இவ பின்னாடி லோலோனு அலைய சும்மா கடுப்படிக்காம போடி"
"போய்கிட்டு இருந்தவளாத்தாண்டா ஏய் நில்லுன்னு வம்பு வளத்துக்கு கிட்டு இருக்க. நான் உலக அழகியானு வேற கேக்குற? எனக்கென்ன கொறச்சல்? நீ தாண்டா சுமார் மூஞ்சி குமாரு. பொத்திக் கிட்டு போறியா" என்று நடையை தொடர
வாயா? வங்காளவிரிகுடாவா? தீரன் வியந்து நோக்கி ஸ்கூபியின் கழுத்து பட்டியை பிடித்து இழுத்தவன் "நாய விட்டுட்டு போ" என்று சொல்ல
"ஓஹ் நீ நாய் பிடிக்கிறவனா? இது ஒன்னும் அனாத நாய் இல்ல எனக்கு தெரிஞ்சவரோட நாய் தான் நானே கொண்டு போய் விட்டுடுறேன்" என்று சொல்ல
அவளை அடுத்து சந்திக்கும் போது நாய்களோடு இருக்கப் போவதை அறியாமல் "யாரப் பாத்து நாய் பிடிக்கிறவன் என்று சொன்ன?" என்று பல்லை கடித்தவன் "எங்க வீட்டுக்கு வரியா வாடி வா வச்சிக்கிறேன் உன்ன" என்று மனத்தால் நினைத்தது விட்டு எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான்.
"என்ன நெட்டுக்கொக்கு நெடுமாறன் அமைதியா போறான் ஏதோ சரியில்ல" என்று முணுமுணுத்தவாறே பிங்கி ஸ்கூபியோடு செல்ல
"இதுங்க ரெண்டும் எப்போ காதலிச்சு? கல்யாணம் பண்ணுறது? செம்ம ஜோடின்னு சேர்த்து வைக்கப் பார்த்தா? ஏற்கனவே முட்டி, மோதிக்கிட்டு உடைஞ்சி கிடக்குதுங்க. ஒட்ட வைக்க ரொம்ப கஷ்டம் போலயே" என்று ஸ்கூபியின் மனசாட்ச்சி புலம்பியவாறே பிங்கியின் பின்னால் சென்றது.
அரோஹி அண்ட் தீரன்{எந்த தீரன்?} கூட்டிட்டு வர ட்ரை பண்ணுறேன்.
Last edited: