நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-22
கயல் ஒரு மாதிரி முழிக்கவும்....காந்திமதி அங்கு பக்கத்தில் இருந்த வாளி தண்ணீரை எடுத்து கயலின் தலையில் ஊற்ற......
“அப்பத்தா..... உனக்கென்ன லூசா புடிச்சிருக்கு..... இப்ப ஏன் என் தலையில தண்ணிய ஊத்துன.....?” என்று தலையை சிலிர்த்தபடி கேள்வி கேட்க..... அவளை சுற்றி ராமனும் முத்துவும் சாவித்திரியும் சிரித்தபடி நின்றனர்.....
மாடிக்கு போன கண்ணன் காந்திமதி பேச ஆரம்பிக்கவும் பேப்பர் படிக்கும் சாக்கில் கீழே வந்து சேரில் அமர்ந்து கயலை ரசித்துக கொண்டிருந்தான்....
“ஆமாடி.... எனக்கு லூசு புடிச்சிருக்கு..... ஆனா உனக்கு பேயில்ல புடிச்சிருக்கு.....”
“என்னது பேயா......??? எனக்கு பேய் புடிச்சிருக்குன்னு யாரு சொன்னா...???.”
“ஏன் நாந்தான்.... ஊருல எம்புட்டு பேரு முகத்த பாத்தே..... நான் சொல்லிருக்கேன்.....”
“கிழிச்ச...... அதுக்காக உன்னைய எங்கிட்ட வந்து எம்புட்டு பேரு திட்டிட்டு போச்சுகன்னு எனக்குதான் தெரியும்.... உன் வேலைய எங்கிட்டயே காட்டாத..... நாந்தான் காலையிலேயே குளிச்சிட்டேன்ல....... இப்ப தலையில வேற தண்ணிய ஊத்தி வச்சிருக்க..... என் தலை முடி எப்ப காய.... ஒன்னைய கொல்லபோறேன் பாரு....”என்று அழுவது போல முகத்தை வைத்திருக்க........
“இதென்னடி கால கொடுமையா இருக்கு...... ஏதோ....பாவம் புள்ளைக்கு என்னாச்சோ.... ஏதாச்சோ....புள்ள ஒன்னும் பேசாம ஒருமாதிரியா இருக்கேன்னு உபகாரம் பண்ணுனா.....ம்கும்.....ரொம்பத்தான்.....பகுமானம் பண்ணுற..... இப்ப இம்புட்டு பேசுறவ...அப்ப உங்க அயித்த கூப்புடயில ஏன் பேசாம இருந்தே.....?”
இப்போது கயலுக்கு கண்ணன் முத்தமிட்டது ஞாபகத்திற்கு வர..... எங்க அவரு அம்புட்டுக்கும் காரணம் அவருதான்.... ஆனா ஒன்னுமே நடக்காத மாதிரி பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்காரு.....என்று கண்ணனை பார்த்தவள்......
“ அது ஒன்னுமில்ல....கொல்லயில ஒரு பாம்பு பாத்தேன்......”
“என்னது பாம்பா....”. என்றபடி காந்திமதி ஓடிப்போய் கதவு ஓரம் சாத்தியிருந்த உலக்கையை எடுத்து கொண்டு வந்து.....
“எங்க.... எங்க...... பாம்பு.....”
“அங்க என்ன மலைபாம்பா வந்துச்சு..... இவ்வளவு பெரிய உலக்கை.....அது இத்தூன்டு” என்றபடி கையில் ஒருஜான் அளவுக்கு வைத்துக் காட்ட....
“ அது இன்னேரம் பத்து ஊரு தாண்டி போயிருக்கும்........”ராமனும் முத்துவும் விழுந்து விழுந்து சிரிக்க..... கண்ணன் நைசாக மாடியேறி போனவன்....அங்கு போய் சிரித்து கொண்டிருந்தான்.....
சாவித்திரி சிரித்தபடி...”.போத்தா...போய் டிரஸ்ஸ மாத்து...அப்புடியே தலைய நல்லா காய...வை......”
“ம்ம்ம்....இந்தா போறத்தே.... இரு வந்து உன்னைய கவனிச்சுக்குறேன்......”என்றபடி மாடி ஏறி போனவள்....
கண்ணன் அலமாரியில் ஏதோ எடுத்து கொண்டிருக்கவும்.....
“ ஏன் இப்புடி பண்ணுனீங்க......”
“நான் என்ன பண்ணுனேன்......பாவம் கீழே விழுக போறன்னு காப்பாத்த வந்தேன்.... நல்லா யோசிச்சு பாரு எப்பவாச்சும் நானா வந்து உன்னைய கட்டிப்புடிச்சிருக்கனா.....இன்னைக்கும் நான் வந்து உன்னைய கட்டிபுடிச்சனா....”.கயல் யோசிக்க ஆரம்பிக்க.....(ஸ்ஸ்ஸ்....அப்பா....இவள நல்லா....குழப்பிவிட்டுட்டோம்)
“ஆமால்ல...பாவம் இவருமேல எந்த தப்பும் இல்ல கல்யாணத்துக்கு முன்னாடியும் நாமதான் ரெண்டுதடவ கட்டிப்புடிச்சோம்..... அன்னைக்கு அழுகும் போதும் நாமதான் கட்டிப் புடிச்சோம்..... இன்னைக்கும் நம்ம மேலதான் மிஸ்டேக்கோ...... ஆனா....
நீங்க ஏன் முத்தம் குடுத்தீங்க......”.
“ஏன் நீ ரெண்டுதரமும் கட்டிப்புடிச்சிட்டு எப்புடி கத்துன...... அதான் கத்தவுடாம பண்ணேன்......”
“அதுக்கு நீங்க கையால வாய மூடவேண்டியது தானே.......அன்னைக்கு அப்புடிதானே பண்ணீங்க.....?”
“ஏய் லூசு..... அன்னைக்கு கைல ஒன்னுமில்ல அதுனால கைல மூடுனேன்..... இன்னைக்கு கொல்லையில வேலை பாத்து கையெல்லாம் மண்ணாயிருந்துச்சுடி..... அதான் உதட்டால மூடுனேன்.....” என்றபடி நெருங்கி வந்தவன்..... முகத்தில் படிந்திருந்த தண்ணீர்துளிகளை.... அங்கிருந்த துண்டால் மெதுவாக ஒற்றி எடுத்தவன்......
“ஆனா உங்க அப்பத்தா சொன்னமாதிரி உனக்கு என்னமோ புடிச்சிருக்குடி......”
அப்ப அப்பத்தா சொன்னது உண்மையாயிருக்குமோ......” ஆத்தி அப்பநான் வித்தியாசமா நடந்துக்கிறனா.....?’
“ஆமா.....”
“யாரு மாதிரி.......”
“அது எனக்கு புடிச்சமாதிரி…..” அவளை தன் கை வளைவிற்குள் அவளை கொண்டுவந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.... அவள் இருகண்களுக்கு கொடுத்து கன்னத்திற்கு வர..... கயல் வெட்கத்துடன் அவன் மார்பில் முகத்தை பதிக்க........
“ஏய்.... என்னைய நிமிந்து பாரு “என்று கிசுகிசுத்தவன்...... அவள் முகத்தை தன்மார்பில் இருந்து அவள் முகத்தை தூக்க.....கயல் தன் முகத்தை இருகையால் மூடியவள்..... அவனுக்கு முதுகு காட்டியபடி நிற்க.....
“.. ஏய் ..... இங்கிட்டு ....திரும்பு........”
“ம்கூம்.....” என்று தலையை மட்டும் அசைத்தவளை......அவள் இடுப்பில் கைவைத்து இறுக்கியவன்...... அவள் பின் கழுத்திலிருந்து தன் முத்தத்தை ஆரம்பிக்க......கயலுக்கு இதயம் வெளியே வரும் அளவிற்கு படபடவென்று அடித்தது...... கை...காலெல்லாம் வெடவெடவென்று நடுங்க துவங்கியது...... அவள் நடுக்கத்தை உணர்ந்து கண்ணன் தன் சுய உணர்வுக்கு வந்தவன்.......
“ போ....ரொம்ப நேரம் ஈர டிரஸ்ஸோட நிக்காம போய் டிரஸ்ஸ மாத்து..... அப்புடியே.... இன்னைக்கு சேலைய கட்டிட்டு வாரியா......?”
“சேலையா...... நாம எங்கயாச்சும் வெளிய போறமா.....”
“ஆமா.....உனக்குதான் இன்னும் ரெண்டுநாளுள செமஸ்டர் ஆரம்பம்னு சொன்னில..... அதுனால இன்னைக்கு உனக்கு தீபாவளிக்கு டிரஸ் எடுத்துட்டு வரலாம்......”
“அப்ப கடைக்கு போக வேணாமா.....”
“இல்ல....தம்பிய போகச் சொல்லிட்டேன்.......நீ சீக்கிரம் கிளம்பா வா..... போ....”
கயல் கிளம்பி வரவும்..... கண்ணன் சாப்பிட்டு கொண்டிருக்க.....
“ அத்தே..நீங்களும் வாங்க போய் டிரஸ் எடுத்துட்டு வரலாம்.....”.
“இல்லத்தா....நான் கட்டுற கண்டாங்கி சேலை எல்லாம்......தம்பிக்கு தெரிஞ்சவுக ஒருத்தர் வீட்லயே கொண்டுவந்து மொத்தமா குடுத்துட்டு போயிருவாகத்தா...... வீட்லயே நெய்யிரதால நல்ல தரமா இருக்கும்தா.......”
“முத்து அப்ப நீயாச்சும் வரலாம்ல......”.
“இல்லண்ணி ஒரு நோட்ஸ் வாங்க என் பிரண்ட்டு ஒருத்தன் வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருக்கான்....... நீங்க போய்ட்டு வாங்கண்ணி.....”.
“அப்புடியா....சரி வாரேன்தே....... அப்பத்தா வரவா.....”
“ம்ம்ம் அங்க இங்க வேடிக்கை பாக்காம போயிட்டு வா......”
அத்தியாயம்-22
கயல் ஒரு மாதிரி முழிக்கவும்....காந்திமதி அங்கு பக்கத்தில் இருந்த வாளி தண்ணீரை எடுத்து கயலின் தலையில் ஊற்ற......
“அப்பத்தா..... உனக்கென்ன லூசா புடிச்சிருக்கு..... இப்ப ஏன் என் தலையில தண்ணிய ஊத்துன.....?” என்று தலையை சிலிர்த்தபடி கேள்வி கேட்க..... அவளை சுற்றி ராமனும் முத்துவும் சாவித்திரியும் சிரித்தபடி நின்றனர்.....
மாடிக்கு போன கண்ணன் காந்திமதி பேச ஆரம்பிக்கவும் பேப்பர் படிக்கும் சாக்கில் கீழே வந்து சேரில் அமர்ந்து கயலை ரசித்துக கொண்டிருந்தான்....
“ஆமாடி.... எனக்கு லூசு புடிச்சிருக்கு..... ஆனா உனக்கு பேயில்ல புடிச்சிருக்கு.....”
“என்னது பேயா......??? எனக்கு பேய் புடிச்சிருக்குன்னு யாரு சொன்னா...???.”
“ஏன் நாந்தான்.... ஊருல எம்புட்டு பேரு முகத்த பாத்தே..... நான் சொல்லிருக்கேன்.....”
“கிழிச்ச...... அதுக்காக உன்னைய எங்கிட்ட வந்து எம்புட்டு பேரு திட்டிட்டு போச்சுகன்னு எனக்குதான் தெரியும்.... உன் வேலைய எங்கிட்டயே காட்டாத..... நாந்தான் காலையிலேயே குளிச்சிட்டேன்ல....... இப்ப தலையில வேற தண்ணிய ஊத்தி வச்சிருக்க..... என் தலை முடி எப்ப காய.... ஒன்னைய கொல்லபோறேன் பாரு....”என்று அழுவது போல முகத்தை வைத்திருக்க........
“இதென்னடி கால கொடுமையா இருக்கு...... ஏதோ....பாவம் புள்ளைக்கு என்னாச்சோ.... ஏதாச்சோ....புள்ள ஒன்னும் பேசாம ஒருமாதிரியா இருக்கேன்னு உபகாரம் பண்ணுனா.....ம்கும்.....ரொம்பத்தான்.....பகுமானம் பண்ணுற..... இப்ப இம்புட்டு பேசுறவ...அப்ப உங்க அயித்த கூப்புடயில ஏன் பேசாம இருந்தே.....?”
இப்போது கயலுக்கு கண்ணன் முத்தமிட்டது ஞாபகத்திற்கு வர..... எங்க அவரு அம்புட்டுக்கும் காரணம் அவருதான்.... ஆனா ஒன்னுமே நடக்காத மாதிரி பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்காரு.....என்று கண்ணனை பார்த்தவள்......
“ அது ஒன்னுமில்ல....கொல்லயில ஒரு பாம்பு பாத்தேன்......”
“என்னது பாம்பா....”. என்றபடி காந்திமதி ஓடிப்போய் கதவு ஓரம் சாத்தியிருந்த உலக்கையை எடுத்து கொண்டு வந்து.....
“எங்க.... எங்க...... பாம்பு.....”
“அங்க என்ன மலைபாம்பா வந்துச்சு..... இவ்வளவு பெரிய உலக்கை.....அது இத்தூன்டு” என்றபடி கையில் ஒருஜான் அளவுக்கு வைத்துக் காட்ட....
“ அது இன்னேரம் பத்து ஊரு தாண்டி போயிருக்கும்........”ராமனும் முத்துவும் விழுந்து விழுந்து சிரிக்க..... கண்ணன் நைசாக மாடியேறி போனவன்....அங்கு போய் சிரித்து கொண்டிருந்தான்.....
சாவித்திரி சிரித்தபடி...”.போத்தா...போய் டிரஸ்ஸ மாத்து...அப்புடியே தலைய நல்லா காய...வை......”
“ம்ம்ம்....இந்தா போறத்தே.... இரு வந்து உன்னைய கவனிச்சுக்குறேன்......”என்றபடி மாடி ஏறி போனவள்....
கண்ணன் அலமாரியில் ஏதோ எடுத்து கொண்டிருக்கவும்.....
“ ஏன் இப்புடி பண்ணுனீங்க......”
“நான் என்ன பண்ணுனேன்......பாவம் கீழே விழுக போறன்னு காப்பாத்த வந்தேன்.... நல்லா யோசிச்சு பாரு எப்பவாச்சும் நானா வந்து உன்னைய கட்டிப்புடிச்சிருக்கனா.....இன்னைக்கும் நான் வந்து உன்னைய கட்டிபுடிச்சனா....”.கயல் யோசிக்க ஆரம்பிக்க.....(ஸ்ஸ்ஸ்....அப்பா....இவள நல்லா....குழப்பிவிட்டுட்டோம்)
“ஆமால்ல...பாவம் இவருமேல எந்த தப்பும் இல்ல கல்யாணத்துக்கு முன்னாடியும் நாமதான் ரெண்டுதடவ கட்டிப்புடிச்சோம்..... அன்னைக்கு அழுகும் போதும் நாமதான் கட்டிப் புடிச்சோம்..... இன்னைக்கும் நம்ம மேலதான் மிஸ்டேக்கோ...... ஆனா....
நீங்க ஏன் முத்தம் குடுத்தீங்க......”.
“ஏன் நீ ரெண்டுதரமும் கட்டிப்புடிச்சிட்டு எப்புடி கத்துன...... அதான் கத்தவுடாம பண்ணேன்......”
“அதுக்கு நீங்க கையால வாய மூடவேண்டியது தானே.......அன்னைக்கு அப்புடிதானே பண்ணீங்க.....?”
“ஏய் லூசு..... அன்னைக்கு கைல ஒன்னுமில்ல அதுனால கைல மூடுனேன்..... இன்னைக்கு கொல்லையில வேலை பாத்து கையெல்லாம் மண்ணாயிருந்துச்சுடி..... அதான் உதட்டால மூடுனேன்.....” என்றபடி நெருங்கி வந்தவன்..... முகத்தில் படிந்திருந்த தண்ணீர்துளிகளை.... அங்கிருந்த துண்டால் மெதுவாக ஒற்றி எடுத்தவன்......
“ஆனா உங்க அப்பத்தா சொன்னமாதிரி உனக்கு என்னமோ புடிச்சிருக்குடி......”
அப்ப அப்பத்தா சொன்னது உண்மையாயிருக்குமோ......” ஆத்தி அப்பநான் வித்தியாசமா நடந்துக்கிறனா.....?’
“ஆமா.....”
“யாரு மாதிரி.......”
“அது எனக்கு புடிச்சமாதிரி…..” அவளை தன் கை வளைவிற்குள் அவளை கொண்டுவந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.... அவள் இருகண்களுக்கு கொடுத்து கன்னத்திற்கு வர..... கயல் வெட்கத்துடன் அவன் மார்பில் முகத்தை பதிக்க........
“ஏய்.... என்னைய நிமிந்து பாரு “என்று கிசுகிசுத்தவன்...... அவள் முகத்தை தன்மார்பில் இருந்து அவள் முகத்தை தூக்க.....கயல் தன் முகத்தை இருகையால் மூடியவள்..... அவனுக்கு முதுகு காட்டியபடி நிற்க.....
“.. ஏய் ..... இங்கிட்டு ....திரும்பு........”
“ம்கூம்.....” என்று தலையை மட்டும் அசைத்தவளை......அவள் இடுப்பில் கைவைத்து இறுக்கியவன்...... அவள் பின் கழுத்திலிருந்து தன் முத்தத்தை ஆரம்பிக்க......கயலுக்கு இதயம் வெளியே வரும் அளவிற்கு படபடவென்று அடித்தது...... கை...காலெல்லாம் வெடவெடவென்று நடுங்க துவங்கியது...... அவள் நடுக்கத்தை உணர்ந்து கண்ணன் தன் சுய உணர்வுக்கு வந்தவன்.......
“ போ....ரொம்ப நேரம் ஈர டிரஸ்ஸோட நிக்காம போய் டிரஸ்ஸ மாத்து..... அப்புடியே.... இன்னைக்கு சேலைய கட்டிட்டு வாரியா......?”
“சேலையா...... நாம எங்கயாச்சும் வெளிய போறமா.....”
“ஆமா.....உனக்குதான் இன்னும் ரெண்டுநாளுள செமஸ்டர் ஆரம்பம்னு சொன்னில..... அதுனால இன்னைக்கு உனக்கு தீபாவளிக்கு டிரஸ் எடுத்துட்டு வரலாம்......”
“அப்ப கடைக்கு போக வேணாமா.....”
“இல்ல....தம்பிய போகச் சொல்லிட்டேன்.......நீ சீக்கிரம் கிளம்பா வா..... போ....”
கயல் கிளம்பி வரவும்..... கண்ணன் சாப்பிட்டு கொண்டிருக்க.....
“ அத்தே..நீங்களும் வாங்க போய் டிரஸ் எடுத்துட்டு வரலாம்.....”.
“இல்லத்தா....நான் கட்டுற கண்டாங்கி சேலை எல்லாம்......தம்பிக்கு தெரிஞ்சவுக ஒருத்தர் வீட்லயே கொண்டுவந்து மொத்தமா குடுத்துட்டு போயிருவாகத்தா...... வீட்லயே நெய்யிரதால நல்ல தரமா இருக்கும்தா.......”
“முத்து அப்ப நீயாச்சும் வரலாம்ல......”.
“இல்லண்ணி ஒரு நோட்ஸ் வாங்க என் பிரண்ட்டு ஒருத்தன் வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருக்கான்....... நீங்க போய்ட்டு வாங்கண்ணி.....”.
“அப்புடியா....சரி வாரேன்தே....... அப்பத்தா வரவா.....”
“ம்ம்ம் அங்க இங்க வேடிக்கை பாக்காம போயிட்டு வா......”
Last edited: