AnuSu
Member
வழக்கமான மேல்தட்டு வாழ்வு நாயகன் அல்லது நாயகியை வர்ணிக்காமல் எளிய மனிதர்களையும் அவர்களுகளது வாழ்வையும் தேர்ந்தெடுத்து சிறப்பான கதையை தந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரது மனமும் உணர்வும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டது. நடுநடுவே உங்களின் தத்துவம் சிரிக்க சிந்திக்கத் தூண்டியது.
எதிர்பார்ப்பின்றி உதவும் ஒருவரது (கண்ணன்) மனப்பாங்கு எவ்வாறு உடன் வாழும் மனிதருக்குள் (principal நண்பர், அரசு, பிரவீன்) கடத்தப்படுகிறது என்பதை விவரிக்கும் கதை. இன்னொரு சிறப்பான கருத்து உழைப்புதான் முக்கியமென நினைக்கும் படித்த ஒருவன் வாழ்நாள் முழுமையும் பிரிதொரு நிறுவனத்தில் அடிமையாய் வாழாது சிறு முதலீடேனும் வைத்து தனக்கான தொழிலை செய்து முன்னேறுவது. நன்மை தீமை இரண்டும் கலந்ததே வாழ்க்கை, இதில் முயற்சித்தால் முடியாதது இல்லை எனும் நல்ல கருத்தோடு நிறைவான கதையை தந்ததற்கு நன்றி. மேலும் பல கதைகளை எழுதுங்கள் வாழ்த்துகள்.
எதிர்பார்ப்பின்றி உதவும் ஒருவரது (கண்ணன்) மனப்பாங்கு எவ்வாறு உடன் வாழும் மனிதருக்குள் (principal நண்பர், அரசு, பிரவீன்) கடத்தப்படுகிறது என்பதை விவரிக்கும் கதை. இன்னொரு சிறப்பான கருத்து உழைப்புதான் முக்கியமென நினைக்கும் படித்த ஒருவன் வாழ்நாள் முழுமையும் பிரிதொரு நிறுவனத்தில் அடிமையாய் வாழாது சிறு முதலீடேனும் வைத்து தனக்கான தொழிலை செய்து முன்னேறுவது. நன்மை தீமை இரண்டும் கலந்ததே வாழ்க்கை, இதில் முயற்சித்தால் முடியாதது இல்லை எனும் நல்ல கருத்தோடு நிறைவான கதையை தந்ததற்கு நன்றி. மேலும் பல கதைகளை எழுதுங்கள் வாழ்த்துகள்.