பிரசாத் ஊரு குறிஞ்சி ஊர் ....நட்சத்திர விழிகள் நாயகன் பிரபாகர் குடும்பமும் பிரசாந்த் குடும்பமும் ரொம்ப நெருக்கம் .... இரண்டு பேரு அப்பாவும் நண்பர்கள் .....அண்ணண் தம்பி போல .....பிரசாத் பத்தாவது படிக்கிறப்போ ஒரு விபத்துல அவங்க அப்பா இறந்துடுவாங்க .....Nan padichu iruken.. but ninaivuku vara Oru kathai surukkam thaanga pa..
மிக்க நன்றி உமா... ஒன்று படிச்சா நியாபகம் இருக்கும்...மீதி படிச்சுட்டு பிரசாத் எப்படின்னு சொல்லிடுங்க உமாபிரசாத் ஊரு குறிஞ்சி ஊர் ....நட்சத்திர விழிகள் நாயகன் பிரபாகர் குடும்பமும் பிரசாந்த் குடும்பமும் ரொம்ப நெருக்கம் .... இரண்டு பேரு அப்பாவும் நண்பர்கள் .....அண்ணண் தம்பி போல .....பிரசாத் பத்தாவது படிக்கிறப்போ ஒரு விபத்துல அவங்க அப்பா இறந்துடுவாங்க .....
பிரபாகர் அப்பாவுக்கும் காயம் ....பிரசாத் தன்னோட அப்பா சாவுக்கு பிரபாகர் அப்பா தான் காரணம்ன்னு நினைச்சு அவங்க மேல வெறுப்பை வளர்த்துக்குவான் ..... பிரசாத் அப்பா செய்த நகை வியாபாரத்துல ஒரு கொடுக்கல் வாங்கலில் அவங்க அம்மா தெரியாம பண்ணின தப்புக்காக
மோசமா பேச்சு வாங்கு வாங்க .....அவனோட அம்மா அதனால ஊருக்கு வெளில இருக்கும் தோட்ட வீட்டுல தான் இருப்பாங்க.....ஒற்ருக்குள்ள போக மாட்டாங்க ....
பிரசாத் அடிக்கடி பிரபாகர் குடும்பத்துக்கு தொல்லை கொடுத்துட்டே இருப்பான் ....பிரபாகர் தான் அவனோட டார்கெட் .....பிரசாத் அம்மா தனத்துக்கு பிரபாகர் மேல ரொம்ப பாசம் ...அதுவும் அவனுக்கு பிடிக்காது.....
பக்கத்து ஊரு திருவிழா நடக்கும் போது பிரசாத் குடிச்சுட்டு அவன் நண்பர்கள் கூட சேர்த்து ஒரு பொண்ணை தூக்க பிளான் பண்ணுவாங்க ...அதை மித்ரா (நட்சத்திர விழிகள் நாயகி) கேட்டுட்டு அந்த பொண்ணை காப்பாத்த செய்ற செயல்கள் பிரசாத்தை கோவப்படுத்தி மித்ராவை பழி வாங்கணும்னு வெறி ஏத்துது .....ஊர் தலைவர் கிட்ட தந்திரமா பேசி மித்ராவை தூக்கிட்டு போறப்போ பிரபாகர் வந்து காப்பாத்தி மித்ராவை அவனே கல்யாணம் பண்ணிக்குவான் .....
பிரசாத் நல்லவனா கெட்டவனா இன்னும் தெரியலை உமா .....பாதிக்கு மேல கொஞ்சம் படிச்சு இருக்கேன் .....
Appo vishal .....hero kidaiyatha....avanum Pavan thirunthitan...avanuku heroine...ennapa?ஹாய் ப்ரெண்ட்ஸ்
எல்லாரும் எப்டி இருக்கீங்க? உங்க எல்லோருடைய அன்பு அஷ்மியை கூட்டி வந்துவிட்டேன். ஆம், இன்றிலிருந்து வாரம் மூன்று நாள் அஷ்மி உங்களுடன்.
தேன் தெளிக்கும் தென்றலாய்
அஷ்மிதா - பிரசாத்.
இவர்களுடன் உங்களுக்கு பரிட்சயப்பட்ட பல நபர்களும் இக்கதையில்.
மனதில் பட்டதை தவறென்றால் அப்படியே கேட்டுவிடும் நாயகி, யார் என்ன நினைத்தாலும் சரியோ தவறோ தனக்கு தோன்றியதை மட்டுமே செயல்படுத்தும் ஒட்டுமொத்த திமிரின் அவதாரம் நாயகன்.
கிட்டத்தட்ட ஒரே குணாதிசயம் கொண்ட இருவர் வாழ்வில் இணைந்தால்?
எளிதில் யூகிக்க கூடிய கதைதான். எதை வேண்டாமென்று எந்த தவறை ஏற்க முடியாதென்று ஒரு உறவை விலக்கி விலகினாளோ கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்றை செய்தவனை வாழ்க்கையாக ஏற்கும் நம் நாயகி அஷ்மிதா அதை எப்படி ஏற்று கடந்துவருகிறாள் என்பதுதான் கதை களம்.
காதலெனும் தேனை யார் மீது யார் தெளிக்கிறார்கள் என்பதை கதையில் தெரிந்துகொள்வோம்.
கதையிலிருந்து உங்களுக்காக சில வார்த்தையாடல்கள்...
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா...” அஷ்மி பாட,
“ஏய் உனக்கு சொன்னா புரியாதா?...” ரத்தினசாமி எகிற,
“என்ன மயிலு ஆடாம அசையாம அடக்கமா, அமைதியா, அழகா ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கியேன்னு ஷார்ட்டா பாட்டுல சொன்னேன். நீ ஓவராத்தான் கொதிக்கிற...” என்று சிரிக்க,
“உன்னை எந்த நேரத்துல உங்கப்பன் பெத்தான்னு தெரியல. கல்யாணப்பொண்ணா அடக்க ஒடுக்கமா ஒரு இடத்துல உக்காந்து தொலை...” ரத்தினசாமி எரிந்துவிழ,
“அட அட அட, அழக பத்தி சொன்னதும் செல்லத்துக்கு வெக்கத்த பாரேன். முகம் சிவக்குது போ. இங்க பொண்ணு நானா நீயான்னு எனக்கு டவுட்டே வந்துருச்சு மயிலு...” என அஷ்மி உதட்டை பிதுக்க சேரிலிருந்து படாரென எழுந்தேவிட்டார் ரத்தினசாமி.
----------------------------------------------------------------------------------
கண் மூடி திறக்கும் முன்னால் பிரசாத் அறைந்திருந்தான் அஷ்மிதாவை. ஒரு நொடி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை அஷ்மிதாவிற்கு.
“டேய் என்னடா அடிச்சுட்ட?...” என கேட்டவளுக்கு கோவம் வருவதற்குள்,
“ஒரு அறையோட விட்டேன்னு சந்தோஷப்பட்டுக்க. உன்னை பாத்த நிமிஷம் என்ன பண்ணனும்னு நினச்சேன். ஆனா இருக்கிற கோவத்துக்கும, நிக்கிற இடத்துக்காகவும் மட்டும் தான் இந்த அடி...”
“நீ அடிச்சா நான் வாங்கிட்டு போகனுமோ?...” அவனை திரும்பவும் அறைந்துவிடும் வேகம் அஷ்மிதாவின் பேச்சில் தெறிக்க அதை கண்டுகொள்ளாதவனின் அலட்சியம் இன்னமும் அவளை சூடேற்றியது.
“என்கிட்டையே உன் திமிரை கட்டுறையா?...” என்று எகிறிய அஷ்மியின் பேச்சு எதுவும் பிரசாத்திடம் எடுபடவில்லை. அவளை அவனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தான்.
இனி அஷ்மிதாவின் கையில் எதுவும் இல்லை.
-----------------------------------------------------
“மிஸ்டர் தூக்குதுரை...” என்ற அழைப்பில் அவன் சுற்றிலும் பார்க்க,
“தம்பி அந்த பொண்ணு உங்களத்தான் கூப்பிடுது...” என பந்தில் அமர்ந்திருந்த பெண் அவனுக்கு சொல்ல திரும்பி பாத்தவன் அஷ்மிதாவை கண்டதும் எரிச்சலானான்.
“வெள்ளலி என்ன நக்கலா?...” என முறைப்பாய் நிற்க,
“ப்ச், இவங்களுக்கு சாம்பார் வேணுமாம். சாம்பார் வாளியை தூக்கி வச்சிருக்கற துரை நீங்கதான. சோ கால்ட் தூக்குதுரை...” அஷ்மி கண்ணடிக்க கையிலிருந்த வாளியை டேபிளில் வைத்துவிட்டு,
“அடிங்க...” என அவளை துரத்திக்கொண்டு ஓடினான் அவன்.
-------------------------------------------------------------------------
வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்ட உணர்வு. இனி அடுத்த நொடியை கடக்கமுடியாத அளவுக்கு மூச்சுமுட்டு சுமை அவனின் நெஞ்சினில்.
அவ்வளவு தானா? இதுவரை எதுவும் அவளே தான் இனி என்றிருந்த அவனுக்கு அனைத்தும் அவ்வளவு தானா என்று தோற்றம் அரும்ப தொடங்கியது.
உடைந்து சிதறி அனைத்தும் முடிந்தது என நினைக்கும் பொழுதில் வாழ்வின் வெளிச்சதுகள்களாய் அவள் பிம்பம்.
அத்தனை வேதனையிலும் புன்னகைத்தான் பிரசாத்.
--------------------------------------------------------------------
போதும்னு நினைக்கிறேன். எனது முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதரவினையும், ஊக்கங்களையும், உற்சாகத்தையும், கருத்துக்களையும் இந்த கதைக்கும் கண்டிப்பா தருவீங்கன்னு நம்பறேன்.
கருத்து என்னவா இருந்தாலும் சந்தோஷப்படுவேன். சரியில்லைனா கண்டிப்பா சொல்லுங்க திருத்திப்பேன்.
புதன் கிழமை முதல் அத்தியாயத்துடன் உங்களை சந்திக்க வருகிறேன் உங்கள் அஷ்மியுடன்.
மிக்க நன்றி உமா... ஒன்று படிச்சா நியாபகம் இருக்கும்...மீதி படிச்சுட்டு பிரசாத் எப்படின்னு சொல்லிடுங்க உமா
Thanks... thank you so much umaபிரபாகர் இக்கட்டுல இருந்து மித்ராவை காப்பாத்த கல்யாணம் பண்ணிட்டாலும் அவ மேல ஒரு ஈர்ப்பு இருக்கு.....மித்ரா அப்பாவுக்கு
அவனை பிடிக்கவே இல்லை .....சண்டை போட்டு பிரபாகர் இனி மித்ராவை தொந்தரவு செய்ய கூடாதுன்னு சத்தியம் வாங்கி அவளோட தாலியையும் கோவில் உண்டியல்ல பொட்டுடடார் .....மித்ரா இதனால அவளுக்குள்ள ஒடுங்கி போய்டுற .....பிரபாகர் அவ வேற ஒரு நல்ல பையனை கல்யாணம் பண்ணிக்கட்டும் ...நல்லா இருந்தா போதும்னு சொல்லிட்டு இருக்கான்....
இரண்டரை வருஷம் போகுது....பிரசாத் மித்ரா இருக்கும் இடத்தை கண்டு பிடிச்சுடறான்.... மித்ரா அப்பா அவளுக்கு கல்யாணம் பண்ண முயற்சி பண்ணி
எல்லாத்துலயும் தோல்வி தான்....பிரசாத் ஒரு குடிகாரனை அனுப்பி மித்ரா அப்பாவை நல்லவன்னு நம்ப வைச்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவான் .....விஷயம் தெரிஞ்சு பிரபாகர் வந்து சத்தம் போட்டு என் பொண்டாட்டி சொல்லி கூப்பிடு போயிடுவான்....பிரசாத் திட்டம் தெரியுது....
இங்க சில பல சுவாரசியமான நிகழ்வுகளுக்கு அப்புறம் பிரபாகர் மித்ரா இரண்டு பெரும் சேர்த்து வாழ ஆரம்பிக்குறாங்க .....பிரபாகர் சொந்த அத்தையே மித்ராவை கொலை பண்ண திட்டம் போடறாங்க ( படிக்க ரொம்ப interesting அவங்க கதை )....அதுக்கு பிரசாத் துணை போறது போல தோற்றம் ......கடைசி நிமிசத்துல மித்ராவை காப்பாத்திடுவாங்க .....
பிரசாத் எல்லாமே பிரபாகர் மித்ரா நன்மைக்கு தான் செய்ததா சொல்லுவான் ....திருவிழாவுல பண்ணினது எல்லாம் குடிச்சதால தான்.....ஆனா மித்ராவுக்கு எந்த ஒரு தீங்கும் வர விட்டு இருக்க மாட்டேன்னும் சொல்லறான் ....பிரிந்த குடும்பம் சேருது .....இதுல என்ன ட்விஸ்ட் ???....
அவனுக்கு மித்ராவை பார்த்ததும் பிடிக்குது ....ஒரு ஈர்ப்பு ....அதனால தான் அவ முந்திரிக்கொட்டை போல அவனை தப்ப பேசுறதையும் அடிக்கிறதையும் பார்த்து கோவம் வந்தது போல நடிச்சு (????) அவளை தூக்குனான் ....அவளை கல்யாணம் தான் பண்ணி இருப்பான் .....வேற எதுவும் பண்ணி இருக்க மாட்டான் .....இதை சொல்லாம மனசுலயே வைச்சுகிறான் ( ஒரு தலை காதல் or ஈர்ப்பு) ......
மித்ராவுக்கு அவன் என்ன சமாதானம் சொன்னாலும் அவன் மேல இருக்கிற கோவம் போகாது .....இரண்டு பேருக்கும் எப்போவும் சண்டை தான் ....பிரபாகர் தான் எப்போவும் இவங்க சண்டைக்கு பஞ்சாயத்து பண்ணுறது .....மித்ரா ரொம்ப சேட்டைகார பொண்ணு .....அவ பிரசாத்துக்கு சாபம் கொடுப்பா ...என்னன்னா அவளை விட 100 மடங்கு வாயாடி பொண்ணு தான் அவனுக்கு பொண்டாட்டியா வருவா ...அவ கிட்ட இவன் ஒவ்வொரு நாளும் மாட்டிகிட்டு பாடுபட போறான் .....
actually இது சாபமா இல்லை வரமா ???? ..... வரம் தான் .... அவனுக்கு வரமா வரப்போறவ அஸ்மிதா .... இனி கதையில் பார்ப்போம் இவங்க குடுமி பிடி சண்டையை .....
பிரசாத் பார்ட் மட்டும் எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சொல்லிட்டேன் உமா ....Enjoy
Yes...interesting start Uma .... avasiyam padingaThanks... thank you so much uma
அப்போ ஒரு தலை காதல் பிரசாத் அஷ்மிய கை பிடிக்கப் போறானா..
சரண் அப்டேட் போட்டாச்சே