Sasideera
Well-Known Member
இளமையே வரம் என்பதை மாற்றி முதுமையை வரமாய் பெற்று தமிழை நிலைநிறுத்திய ஔவையார்!!!
இளவரசியேனாலும் கரம் கோர்த்த கணவனுடன் காட்டில் வாழ்ந்து காதலை உணர்த்திய சீதை!!!
மாண்ட கணவனுக்காக தவறு இழைத்த அரசனை எதிர்த்து மதுரையை எரித்த கண்ணகி!!!
நீதி தவறியதால் உயிர் நீத்த கணவனுடன் கவரிமானாய் தானும் மாண்ட பாண்டிமாதேவி!!!
அழகு மட்டுமல்ல அறிவையும் அணிகலனாய்அணிந்து சோழனையே வழிநடத்திய குந்தவை!!!
அடுப்படியின் அடிமை பெண்கள் என்பதை மாற்றி ஆங்கிலேயரை எதிர்த்த அஞ்சலையம்மாள்!!!
ஆணாதிக்க சமூகத்தில் வீட்டுப்படி தாண்டி அறப்போராட்டம் நடத்திய அம்புஜத்தம்மாள்!!!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வரிசையில் வீரத்தின் இலக்கணமாய் நின்ற ஜான்சி ராணி!!!
பலவீனத்தை பலமாய் மாற்றி கணவனைக் கொன்ற பகைவனை எதிர்த்து போரிட்டு வென்ற வேலுநாச்சியார்!!!
கண்ணீர் மட்டுமே பெண்களின் சொத்து என்பதை தகர்த்து நாட்டைக் காத்த இராணி மங்கம்மாள்!!!
அன்பை மட்டுமே விதைத்து என்றும் அன்பின் விருட்சமாக வளர்ந்துள்ள அன்னை தெரசா!!!
ஆதிக்கம் என்பது ஆணவமும் அடிமைத்தனமுமல்ல கண் பார்வையிலே எதிரியை தூர நிறுத்தும் மனதிடம் உள்ள ஜெயலலிதா!!!
இந்த உலகின் மையமாக!!!
அன்பு காட்டும் அன்னையாக!!!
அரவணைக்கும் சகோதரியாக!!!
தோள் கொடுக்கும் தோழியாக!!!
மணம்புரிந்து மனதோடு இணையும் மனைவியாக!!!
வாழ்க்கையின் நிறைவை உணர்த்தும் மகளாக!!!
சகிப்புத்தன்மை எல்லாம் சக்தியாக மாற்றி!!!
பொன் என பொறுமை கொண்டு!!!
சங்க காலம் முதல் இந்த காலம் வரை கண்ணுக்கு முன்னே பின்னே என இவர்களின் பிம்பங்கள் பல!!!
பாரதி கண்டதும் காண விரும்பியதும் இவர்களின் எதிரொளிப்பான புதுமை பெண்களையே தவிர!!!
இவர்களின் அரிச்சுவடியே இல்லாத அபத்தமான பெண்களையல்ல!!!
பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் தன்னைக் காக்கவும் முன்னேறவும் இந்த சமூகத்துடன் போராடும் ஒவ்வொரு பெண்ணும் புதுமை பெண்ணே!!!
எத்தனை முற்பிறவியின் தவத்தின் பயனோ இன்று நானும் பெண்ணாய் பிறந்தேன்!!!
சசி
இளவரசியேனாலும் கரம் கோர்த்த கணவனுடன் காட்டில் வாழ்ந்து காதலை உணர்த்திய சீதை!!!
மாண்ட கணவனுக்காக தவறு இழைத்த அரசனை எதிர்த்து மதுரையை எரித்த கண்ணகி!!!
நீதி தவறியதால் உயிர் நீத்த கணவனுடன் கவரிமானாய் தானும் மாண்ட பாண்டிமாதேவி!!!
அழகு மட்டுமல்ல அறிவையும் அணிகலனாய்அணிந்து சோழனையே வழிநடத்திய குந்தவை!!!
அடுப்படியின் அடிமை பெண்கள் என்பதை மாற்றி ஆங்கிலேயரை எதிர்த்த அஞ்சலையம்மாள்!!!
ஆணாதிக்க சமூகத்தில் வீட்டுப்படி தாண்டி அறப்போராட்டம் நடத்திய அம்புஜத்தம்மாள்!!!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வரிசையில் வீரத்தின் இலக்கணமாய் நின்ற ஜான்சி ராணி!!!
பலவீனத்தை பலமாய் மாற்றி கணவனைக் கொன்ற பகைவனை எதிர்த்து போரிட்டு வென்ற வேலுநாச்சியார்!!!
கண்ணீர் மட்டுமே பெண்களின் சொத்து என்பதை தகர்த்து நாட்டைக் காத்த இராணி மங்கம்மாள்!!!
அன்பை மட்டுமே விதைத்து என்றும் அன்பின் விருட்சமாக வளர்ந்துள்ள அன்னை தெரசா!!!
ஆதிக்கம் என்பது ஆணவமும் அடிமைத்தனமுமல்ல கண் பார்வையிலே எதிரியை தூர நிறுத்தும் மனதிடம் உள்ள ஜெயலலிதா!!!
இந்த உலகின் மையமாக!!!
அன்பு காட்டும் அன்னையாக!!!
அரவணைக்கும் சகோதரியாக!!!
தோள் கொடுக்கும் தோழியாக!!!
மணம்புரிந்து மனதோடு இணையும் மனைவியாக!!!
வாழ்க்கையின் நிறைவை உணர்த்தும் மகளாக!!!
சகிப்புத்தன்மை எல்லாம் சக்தியாக மாற்றி!!!
பொன் என பொறுமை கொண்டு!!!
சங்க காலம் முதல் இந்த காலம் வரை கண்ணுக்கு முன்னே பின்னே என இவர்களின் பிம்பங்கள் பல!!!
பாரதி கண்டதும் காண விரும்பியதும் இவர்களின் எதிரொளிப்பான புதுமை பெண்களையே தவிர!!!
இவர்களின் அரிச்சுவடியே இல்லாத அபத்தமான பெண்களையல்ல!!!
பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் தன்னைக் காக்கவும் முன்னேறவும் இந்த சமூகத்துடன் போராடும் ஒவ்வொரு பெண்ணும் புதுமை பெண்ணே!!!
எத்தனை முற்பிறவியின் தவத்தின் பயனோ இன்று நானும் பெண்ணாய் பிறந்தேன்!!!
சசி
Last edited: