“உனக்கு தெரியுமா நான் எதுவும் பண்ணலைன்னு.” யாஷிக்காவும் கோபத்தை காட்ட...
“உருப்படியா எதுவும் பண்ணியிருக்க மாட்ட... அதோட இப்படி தின்னு பெருத்த உன்னையெல்லாம் எவன் பார்ப்பான்.” என திலீபன் தனது தோற்றத்தை குறித்து சொன்னதும், யஷிகாவுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வர
“நான் வெற்றியை நேர்ல பார்க்கணும்னு சொல்லியிருக்கேன். இல்லைனா அந்த வீடியோவை ஷோசியல் மீடியாவுல விட்டுடுவேன் சொல்லி மிரட்டி இருக்கேன்.”
“நீ அந்த வீடியோவை எதுவும் அனுப்பிடலையே...”
திலீபன் கேட்டதும் திறுதிறுவென விழித்த யாஷிகா, “நான் அனுப்பிட்டேனே.” என்றாள்.
“ஐயோ நான் உன்னை அனுப்பாதேன்னு தானே சொன்னேன். சும்மா மிரட்டி அவனை வெளியில சந்திக்க ஏற்பாடு பண்ணிட்டு எனக்கு தகவல் சொல்லுன்னு தானே சொன்னேன்.”
“அவங்க யாரும் பயப்படவே இல்லை. அதோட வெற்றியோட பொண்டாட்டி நம்பாம பேசினா அதுதான் வீடியோ அனுப்பி வச்சேன்.”
“அந்த வீடியோவில் ஒன்னும் இல்லைன்னு சொல்லித்தானே அனுப்பாத சொன்னேன். அவங்களுக்கு என்ன நடந்தது அந்த வீடியோவில் என்ன இருந்ததுன்னே தெரியாது. இப்ப அந்த வீடியோவை பார்த்து சுதாரிச்சு இருப்பாங்க.”
“நீ ஏன் டென்ஷன் ஆகிற அது என்னோட ப்ராப்லம்.”
*************************************************************************************************************
“சார் நீங்க அன்னைக்கு எதுவும் பிரச்சனை வராது சொன்னீங்க. அதனாலதான் நீங்க சொன்னபடி பண்ணேன். ஆனா அந்த ரெண்டு பேரும் இன்னைக்கு ரேசர்ட் வந்திருந்தாங்க. அதோட மனேஜர் பார்த்து எதோ பேசினாங்க.”
“உன்னை எதுவும் விசாரிச்சாங்களா?”
“இல்லை... ஆனா மனேஜர் என்னை ஒருமாதிரி பார்த்தார். நான் வேலை செய்யுற மாதிரி அப்படியே பின்னாடி பக்கமா வெளிய வந்திட்டேன்.”
“நல்லது பண்ண. யார் கண்ணுலேயும் மாட்டிக்காம வெளியூர் எங்காவது போயிடு.”
“சார் நீங்க கொடுத்த ரெண்டாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு என் வேலையும் போய், நான் ஜெயிலுக்கும் போகப்போறேனா சார்.”
“ஆமாம் நீ பெரிய கவர்னர் வேலைப் பார்த்த... போகுதுன்னு வருத்தப்பட, நீ யார் கண்ணுலேயும் படமா இரு. நான் உனக்கு வேற இடத்தில வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.”
***************************************************************************************************************
“ஹலோ...”
“சொல்லுங்க அண்ணா.”
“எங்க இருக்கீங்க?”
“ரூம்ல தானா இருக்கோம்.”
“உடனே கிளம்பி அவனுங்க ரெண்டு பேர் வீடு இருக்கிற ஏரியாக்கும் போங்க. ரெண்டு பேர்ல யார் பசங்க கிடைச்சாலும் தூக்கிட்டு நம்ம இடத்துக்கு போயிடுங்க. போகும்போது எனக்கு தகவல் மட்டும் சொல்லிடுங்க.”
“சரிண்ணா...”
“யார்கிட்டயும் மாட்டிக்காம பண்ணுங்க.”
**********************************************************************************************************
பார்க்க வாய்ப்பு கிடைத்தால் சில ஆண்களும் விடுவதில்லை. நண்பர்கள் சிலர் ஆர்வமாகவும், சிலர் கேலியாகவும் பார்த்தால்... என்னது இந்தக் கண்றாவி என விக்ரம் கூட முறைத்தபடி ஒரு பார்வைப் பார்த்தான். ஆனால் பார்க்காமல் இருந்தது வெற்றி மட்டுமே.
யாஷிகா நீந்துவது போல, யார் தன்னை எப்படி பார்கிறார்கள் என கவனித்துக்கொண்டு இருந்தாள். ஆர்வமாக பார்த்தவர்களை தன் அழகில் கர்வம் கொண்டு மிதப்பாகவும். கேலியாக பார்த்தவர்களை அலட்சியமாகவும், முறைத்து பார்த்த விக்ரமை கண்டுகொள்ளாமலும் இருந்தவள், தன்னை இதுவரை பார்க்காத வெற்றியை மட்டுமே, அவன் தன்னை எப்படி பார்ப்பான் என்ற ஆர்வத்தில் விடாது கவனித்துக் கொண்டு இருந்தாள்.
அந்தோ பரிதாபம் வெற்றி அவள் பக்கம் பார்வையை திருப்பவேயில்லை. அந்தப் பக்கம் பெண் ஒருத்தி இருப்பதை நண்பர்களின் கேலியில் உணர்ந்தவன், அதன்பிறகு மறந்தும் அந்தப் பக்கம் பார்க்கவில்லை.
“உருப்படியா எதுவும் பண்ணியிருக்க மாட்ட... அதோட இப்படி தின்னு பெருத்த உன்னையெல்லாம் எவன் பார்ப்பான்.” என திலீபன் தனது தோற்றத்தை குறித்து சொன்னதும், யஷிகாவுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வர
“நான் வெற்றியை நேர்ல பார்க்கணும்னு சொல்லியிருக்கேன். இல்லைனா அந்த வீடியோவை ஷோசியல் மீடியாவுல விட்டுடுவேன் சொல்லி மிரட்டி இருக்கேன்.”
“நீ அந்த வீடியோவை எதுவும் அனுப்பிடலையே...”
திலீபன் கேட்டதும் திறுதிறுவென விழித்த யாஷிகா, “நான் அனுப்பிட்டேனே.” என்றாள்.
“ஐயோ நான் உன்னை அனுப்பாதேன்னு தானே சொன்னேன். சும்மா மிரட்டி அவனை வெளியில சந்திக்க ஏற்பாடு பண்ணிட்டு எனக்கு தகவல் சொல்லுன்னு தானே சொன்னேன்.”
“அவங்க யாரும் பயப்படவே இல்லை. அதோட வெற்றியோட பொண்டாட்டி நம்பாம பேசினா அதுதான் வீடியோ அனுப்பி வச்சேன்.”
“அந்த வீடியோவில் ஒன்னும் இல்லைன்னு சொல்லித்தானே அனுப்பாத சொன்னேன். அவங்களுக்கு என்ன நடந்தது அந்த வீடியோவில் என்ன இருந்ததுன்னே தெரியாது. இப்ப அந்த வீடியோவை பார்த்து சுதாரிச்சு இருப்பாங்க.”
“நீ ஏன் டென்ஷன் ஆகிற அது என்னோட ப்ராப்லம்.”
*************************************************************************************************************
“சார் நீங்க அன்னைக்கு எதுவும் பிரச்சனை வராது சொன்னீங்க. அதனாலதான் நீங்க சொன்னபடி பண்ணேன். ஆனா அந்த ரெண்டு பேரும் இன்னைக்கு ரேசர்ட் வந்திருந்தாங்க. அதோட மனேஜர் பார்த்து எதோ பேசினாங்க.”
“உன்னை எதுவும் விசாரிச்சாங்களா?”
“இல்லை... ஆனா மனேஜர் என்னை ஒருமாதிரி பார்த்தார். நான் வேலை செய்யுற மாதிரி அப்படியே பின்னாடி பக்கமா வெளிய வந்திட்டேன்.”
“நல்லது பண்ண. யார் கண்ணுலேயும் மாட்டிக்காம வெளியூர் எங்காவது போயிடு.”
“சார் நீங்க கொடுத்த ரெண்டாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு என் வேலையும் போய், நான் ஜெயிலுக்கும் போகப்போறேனா சார்.”
“ஆமாம் நீ பெரிய கவர்னர் வேலைப் பார்த்த... போகுதுன்னு வருத்தப்பட, நீ யார் கண்ணுலேயும் படமா இரு. நான் உனக்கு வேற இடத்தில வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.”
***************************************************************************************************************
“ஹலோ...”
“சொல்லுங்க அண்ணா.”
“எங்க இருக்கீங்க?”
“ரூம்ல தானா இருக்கோம்.”
“உடனே கிளம்பி அவனுங்க ரெண்டு பேர் வீடு இருக்கிற ஏரியாக்கும் போங்க. ரெண்டு பேர்ல யார் பசங்க கிடைச்சாலும் தூக்கிட்டு நம்ம இடத்துக்கு போயிடுங்க. போகும்போது எனக்கு தகவல் மட்டும் சொல்லிடுங்க.”
“சரிண்ணா...”
“யார்கிட்டயும் மாட்டிக்காம பண்ணுங்க.”
**********************************************************************************************************
பார்க்க வாய்ப்பு கிடைத்தால் சில ஆண்களும் விடுவதில்லை. நண்பர்கள் சிலர் ஆர்வமாகவும், சிலர் கேலியாகவும் பார்த்தால்... என்னது இந்தக் கண்றாவி என விக்ரம் கூட முறைத்தபடி ஒரு பார்வைப் பார்த்தான். ஆனால் பார்க்காமல் இருந்தது வெற்றி மட்டுமே.
யாஷிகா நீந்துவது போல, யார் தன்னை எப்படி பார்கிறார்கள் என கவனித்துக்கொண்டு இருந்தாள். ஆர்வமாக பார்த்தவர்களை தன் அழகில் கர்வம் கொண்டு மிதப்பாகவும். கேலியாக பார்த்தவர்களை அலட்சியமாகவும், முறைத்து பார்த்த விக்ரமை கண்டுகொள்ளாமலும் இருந்தவள், தன்னை இதுவரை பார்க்காத வெற்றியை மட்டுமே, அவன் தன்னை எப்படி பார்ப்பான் என்ற ஆர்வத்தில் விடாது கவனித்துக் கொண்டு இருந்தாள்.
அந்தோ பரிதாபம் வெற்றி அவள் பக்கம் பார்வையை திருப்பவேயில்லை. அந்தப் பக்கம் பெண் ஒருத்தி இருப்பதை நண்பர்களின் கேலியில் உணர்ந்தவன், அதன்பிறகு மறந்தும் அந்தப் பக்கம் பார்க்கவில்லை.