ஜெய் இருந்த கோபத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பான். ஆனால் அவன் முன்பு வெண்ணிலா நின்ற தோற்றம் அவனை கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்னவோ உண்மை.
“நான் இந்த வீட்ல எதுவுமே பேசக் கூடாதா? பேசினா வீட்டை விட்டு போன்னு சொல்வீங்களா?”
“சரி போறேன். ஆனா அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் போறேன்.”
“அண்ணன்காரன் கல்யாணம் பண்ணதும் தனியா போயிட்டான்னு என்னைத்தான் மத்தவங்க கேவலமா நினைப்பாங்க. அதனால அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் போறேன். எனக்கு அந்த ஒரு கடமை இருக்கு.” ஜெய் பேசி முடிக்க, வீட்டில் குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவு நிசப்த்தம்.
அமைதியை கலைத்தது சந்திரன் தான். “ஜெய் நீ ஒன்னும் போக வேண்டாம். அண்ணே, நீங்க ஏன் அவனை தனியா போக சொல்றீங்க? இந்த வீடு அவன் இல்லைனா வந்திருக்குமா?”
“நாம இருந்த வீட்டை வச்சு தானே சமாளிச்சிட்டு இருந்தோம். அவன் தானே அங்க இங்க இருக்கிற பணத்தைப் புரட்டி, பேங்க்ல லோன் வாங்கி, அவனால முடிஞ்ச பணனத்தையும் போட்டு இந்த வீட்டைக் கட்டினான்.”
“பொம்பளை பிள்ளைங்க கல்யாணம் முடிஞ்சதும் போயிடுவாங்க. யஸ்வந்த் படிச்சிட்டு கோயம்புத்தூர்ல இருக்கான். சத்யா படிச்சிட்டு எங்க இருப்பான்னு தெரியாது. நம்மோட இருக்க ஒருத்தனையும் அனுப்பிட்டு, நாம இங்க தனியா இருக்கவா, இந்த வீடு கட்டினோம்.”
தம்பி பேசியதுக்கு ஜெயராமன் மறுப்பாக எதுவும் பேசவில்லை. அவர் அமைதியாக இருக்க...
“எல்லாம் போங்க போய் வேலையைப் பாருங்க.” என சந்திரன் சொல்ல, எல்லோரும் களைந்து செல்ல.. ஜெய் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
************************************************************************************************
காலையில் சென்றவன் மதிய உணவுக்கும் வரவில்லை. அவன் வந்ததும் உண்ணுகிறேன் என வெண்ணிலாவும் உண்ணாமல் இருக்க... ஆளாளுக்கு அவளை உண்ண சொல்லி சொல்லியும் அவள் உண்ணவில்லை.
வீட்டில் யாரும் யாரோடும் பேசவில்லை. எப்போது வேண்டுமானால் அழுதுவிடுபவள் போல வெண்ணிலா இருக்க, காமாட்சிக்கே தான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என தோன்றிவிட்டது. அவர் பெற்ற பிள்ளைகளே அவரை உன்னால்தான் என்பது போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமுதா கண்கள் கலங்கியபடி இருந்தாலும், அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அகல்யாவும் அமைதியாக இருந்தாள்.
இரவு உணவு நேரத்திற்கும் ஜெய் வரவில்லை என்றதும், அகல்யா தனியாக சென்று ஜெய்யை அழைக்க, காரணமில்லாமல் தங்கை அழைக்க மாட்டாள் என அவனுக்கு தெரியும். அதனால் அவன் எடுக்க, “அண்ணா நீ முதல்ல வீட்டுக்கு வா... மதியத்துல இருந்து வெண்ணிலா சாப்பிடவே இல்லை. யார் சொன்னாலும் கேட்கலை.” என்றதும்,
“ம்ம்... வரேன்.” என வைத்து விட்டவன், அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்தான். வெண்ணிலாவுக்காக ஜெய் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.
“சாப்பாடு எடுத்து வை.” என்றவன், “நீ சாப்பிட்டிய?” என, அவள் இல்லையென்றதும், “ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.” என்றவன், வெண்ணிலாவோடு உட்கார்ந்து உண்டுவிட்டு, யாரோடும் பேசாமல் மாடிக்கு சென்றுவிட்டான்.
*************************************************************************************************
இவ ஏன் இப்படி இருக்கா என்பது போல, மற்றவர்கள் அவளைப் பார்க்க,
“அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் அண்ணன் வீட்டை விட்டு போயிடுறேன்னு சொன்னாங்க. அகல்யா கல்யாணம் மட்டும் தான் அவங்க பொறுப்பா... அவங்க கூடப் பிறந்த தங்கையை மட்டும் தானே நினைச்சாங்க. அப்ப நான் அவங்க தங்கை இல்லையா?”
“இனி நான் அவங்களோட பேசவே மாட்டேன்.” என ராதிகா அழுகையுடன் சொல்ல, எல்லோருக்கும் வருத்தமாகி விட்டது.
பார்த்தியா உன் பிள்ளைகளை என்பது போல சந்திரன் மனைவியைப் பார்க்க, “நான் எதோ யதார்த்தமா சொன்னேன். உங்க அண்ணன் உடனே அவனை தனியாப் போக சொல்வாருன்னு, நான் என்ன கனவா கண்டேன்.”
“இனிமே நான் இந்த வீட்ல வாயை திறந்தா கேளுங்க.” என்றவர், சென்று படுத்துக் கொண்டார்.
“நான் இந்த வீட்ல எதுவுமே பேசக் கூடாதா? பேசினா வீட்டை விட்டு போன்னு சொல்வீங்களா?”
“சரி போறேன். ஆனா அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் போறேன்.”
“அண்ணன்காரன் கல்யாணம் பண்ணதும் தனியா போயிட்டான்னு என்னைத்தான் மத்தவங்க கேவலமா நினைப்பாங்க. அதனால அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் போறேன். எனக்கு அந்த ஒரு கடமை இருக்கு.” ஜெய் பேசி முடிக்க, வீட்டில் குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவு நிசப்த்தம்.
அமைதியை கலைத்தது சந்திரன் தான். “ஜெய் நீ ஒன்னும் போக வேண்டாம். அண்ணே, நீங்க ஏன் அவனை தனியா போக சொல்றீங்க? இந்த வீடு அவன் இல்லைனா வந்திருக்குமா?”
“நாம இருந்த வீட்டை வச்சு தானே சமாளிச்சிட்டு இருந்தோம். அவன் தானே அங்க இங்க இருக்கிற பணத்தைப் புரட்டி, பேங்க்ல லோன் வாங்கி, அவனால முடிஞ்ச பணனத்தையும் போட்டு இந்த வீட்டைக் கட்டினான்.”
“பொம்பளை பிள்ளைங்க கல்யாணம் முடிஞ்சதும் போயிடுவாங்க. யஸ்வந்த் படிச்சிட்டு கோயம்புத்தூர்ல இருக்கான். சத்யா படிச்சிட்டு எங்க இருப்பான்னு தெரியாது. நம்மோட இருக்க ஒருத்தனையும் அனுப்பிட்டு, நாம இங்க தனியா இருக்கவா, இந்த வீடு கட்டினோம்.”
தம்பி பேசியதுக்கு ஜெயராமன் மறுப்பாக எதுவும் பேசவில்லை. அவர் அமைதியாக இருக்க...
“எல்லாம் போங்க போய் வேலையைப் பாருங்க.” என சந்திரன் சொல்ல, எல்லோரும் களைந்து செல்ல.. ஜெய் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
************************************************************************************************
காலையில் சென்றவன் மதிய உணவுக்கும் வரவில்லை. அவன் வந்ததும் உண்ணுகிறேன் என வெண்ணிலாவும் உண்ணாமல் இருக்க... ஆளாளுக்கு அவளை உண்ண சொல்லி சொல்லியும் அவள் உண்ணவில்லை.
வீட்டில் யாரும் யாரோடும் பேசவில்லை. எப்போது வேண்டுமானால் அழுதுவிடுபவள் போல வெண்ணிலா இருக்க, காமாட்சிக்கே தான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என தோன்றிவிட்டது. அவர் பெற்ற பிள்ளைகளே அவரை உன்னால்தான் என்பது போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமுதா கண்கள் கலங்கியபடி இருந்தாலும், அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அகல்யாவும் அமைதியாக இருந்தாள்.
இரவு உணவு நேரத்திற்கும் ஜெய் வரவில்லை என்றதும், அகல்யா தனியாக சென்று ஜெய்யை அழைக்க, காரணமில்லாமல் தங்கை அழைக்க மாட்டாள் என அவனுக்கு தெரியும். அதனால் அவன் எடுக்க, “அண்ணா நீ முதல்ல வீட்டுக்கு வா... மதியத்துல இருந்து வெண்ணிலா சாப்பிடவே இல்லை. யார் சொன்னாலும் கேட்கலை.” என்றதும்,
“ம்ம்... வரேன்.” என வைத்து விட்டவன், அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்தான். வெண்ணிலாவுக்காக ஜெய் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.
“சாப்பாடு எடுத்து வை.” என்றவன், “நீ சாப்பிட்டிய?” என, அவள் இல்லையென்றதும், “ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.” என்றவன், வெண்ணிலாவோடு உட்கார்ந்து உண்டுவிட்டு, யாரோடும் பேசாமல் மாடிக்கு சென்றுவிட்டான்.
*************************************************************************************************
இவ ஏன் இப்படி இருக்கா என்பது போல, மற்றவர்கள் அவளைப் பார்க்க,
“அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் அண்ணன் வீட்டை விட்டு போயிடுறேன்னு சொன்னாங்க. அகல்யா கல்யாணம் மட்டும் தான் அவங்க பொறுப்பா... அவங்க கூடப் பிறந்த தங்கையை மட்டும் தானே நினைச்சாங்க. அப்ப நான் அவங்க தங்கை இல்லையா?”
“இனி நான் அவங்களோட பேசவே மாட்டேன்.” என ராதிகா அழுகையுடன் சொல்ல, எல்லோருக்கும் வருத்தமாகி விட்டது.
பார்த்தியா உன் பிள்ளைகளை என்பது போல சந்திரன் மனைவியைப் பார்க்க, “நான் எதோ யதார்த்தமா சொன்னேன். உங்க அண்ணன் உடனே அவனை தனியாப் போக சொல்வாருன்னு, நான் என்ன கனவா கண்டேன்.”
“இனிமே நான் இந்த வீட்ல வாயை திறந்தா கேளுங்க.” என்றவர், சென்று படுத்துக் கொண்டார்.