“ஸ்வேதா மாப்பிள்ளை போட்டோ பார்த்தியா டி?” சமையல் அறையில் இருந்து அம்மாவின் குரல் வர...
ஐயோ பார்க்கலைனா விட மாட்டாங்க என நினைத்த ஸ்வேதா, “அம்மா எல்லாம் உறுதி ஆகிடுச்சு தான... சும்மா எல்லாம் என்னால யார் போட்டோவும் பார்க்க முடியாது.” என பதிலுக்கு சத்தமாக கேட்க,
“இல்லைனா உன்கிட்ட போட்டோ காட்டுவோமா...” என குரல் மட்டும் வந்தது.
“சாமி படம் முன்னாடி இருக்கு பாரு. எடுத்து பார்த்திட்டு சொல்லு. பையன் வீட்ல சரின்னு சொல்லிட்டாங்க. நாம்தான் சொல்லணும்.”
ஸ்வேதாவிடம் எதிர்ப்பார்ப்போ, படபடப்போ இல்லை. வீட்டில் வரன் பார்த்து இருக்கிறார்கள், கடமைக்கு தான் தன்னிடம் கேட்கிறார்கள் என்றும் தெரியும், அப்படி நன்றாக இல்லாத வரனை பார்த்தும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு முழு திருப்தி ஆனதால் தான் போட்டோ பார்க்கும் வரை வந்திருக்கிறது.
மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கவரில் இருந்த போட்டோவை எடுத்து பார்த்தவளுக்கு, தன் கண்ணையே ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை.
இது நிஜமாவே அவன்தானா, புகைப்படத்தை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்தவள், அவன் தானா என உறுதி செய்துகொள்ள.... கூடவே இருந்த பயோ டேட்டாவை எடுத்து படித்து பார்த்தாள்.
பால குரு நந்தன் M.sc., என்று இருந்தது. மற்றும் அவனது மற்ற விபரங்கள் இருந்தது. அவனே தான் என நினைத்தவள்,சமையல் அறைக்கு விரைந்தாள்.
***********************************************************************************************************************
மறுநாள் பெண் பார்க்க மாப்பிள்ளையை தவிர அனைவரும் வந்திருக்க... ஸ்வேதா இன்னும் தவித்து போனாள். வேறு யாரிடமும் கேட்க முடியாமல், தன் அக்காவிடம் மெதுவாக கேட்டுப் பார்த்தாள்.
“ஏன் கா மாப்பிள்ளை வரலை?”
“அவருக்கு அவங்க வீட்ல பார்த்தா போதுமாம்.” என்றாள்.
“இன்னும் அந்த திமிர் போகலை... என்னை பத்தி யோசிக்கிறானா பாரு. இப்பவும் அவனைப் பத்தி தான் யோசிக்கிறான்.” என மனதிற்குள் நன்றாக திட்டினாள்.
*******************************************************************************************************************
“ஹலோ...” என அந்தப் பக்கம் அவனின் குரல் கேட்க,
“நந்தாவா...” என கேட்க வந்தவள், “பாலா குரு நந்தா இருக்காங்களா?” என மாற்றினாள்.
“நான் தான் சொல்லு.” என அவன் தெரிந்தது போல எப்ச...
“நான் ஸ்வேதா பேசுறேன்.” என்றாள்.
“தெரியுது சொல்லு.”
“எங்க வீட்ல உங்களைதான் எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. உங்களுக்கு நான் எந்த ஸ்வேதா தெரியும் இல்ல...”
“தெரியும், இதுக்குதான் போன் பண்ணியா?”
“ஆமாம்.”
“அப்ப சரி வச்சிடுறேன்.” என நந்தா சொல்ல...
சரியான திமிர் பிடிச்சவன் என நினைத்தவள், “நான் இந்த மாப்பிள்ளை வேண்டாம்ன்னு சொல்லப் போறேன்.” என்றாள்.
“சரி சொல்லிக்கோ.” என்றான் அலட்சியமாக.
“நான் இன்னும் அதே ஸ்வேதா தான், திமிர் பிடிச்ச, கர்வம் பிடிச்ச ஸ்வேதா தான்.”
“அது தான் எனக்கு தெரியுமே...” என்றவனின் குரலில் கேலி இருக்க...
“தெரிஞ்சிட்டு ஏன் என்னைக் கல்யாணம் பண்றீங்க? நீங்களே உங்க வீட்ல வேண்டாம்ன்னு சொல்லுங்க.”
“எனக்கு நிறைய வேலை இருக்கு, போன்னை வை.” என்றவன், வைத்து விட்டான்.
இதுவரை அவன் தன்னை யாரென்று தெரியாமல் திருமணதிற்கு சரி என்று சொல்லி இருப்பான் என நினைத்து இருந்தாள். அவன் தன்னைத் தெரிந்தே தான் சொல்லி இருக்கிறான் என்றதும், ஸ்வேதாவிற்கு மனதிற்குள் அப்படி ஒரு கோபம் எழுந்தது.
ஐயோ பார்க்கலைனா விட மாட்டாங்க என நினைத்த ஸ்வேதா, “அம்மா எல்லாம் உறுதி ஆகிடுச்சு தான... சும்மா எல்லாம் என்னால யார் போட்டோவும் பார்க்க முடியாது.” என பதிலுக்கு சத்தமாக கேட்க,
“இல்லைனா உன்கிட்ட போட்டோ காட்டுவோமா...” என குரல் மட்டும் வந்தது.
“சாமி படம் முன்னாடி இருக்கு பாரு. எடுத்து பார்த்திட்டு சொல்லு. பையன் வீட்ல சரின்னு சொல்லிட்டாங்க. நாம்தான் சொல்லணும்.”
ஸ்வேதாவிடம் எதிர்ப்பார்ப்போ, படபடப்போ இல்லை. வீட்டில் வரன் பார்த்து இருக்கிறார்கள், கடமைக்கு தான் தன்னிடம் கேட்கிறார்கள் என்றும் தெரியும், அப்படி நன்றாக இல்லாத வரனை பார்த்தும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு முழு திருப்தி ஆனதால் தான் போட்டோ பார்க்கும் வரை வந்திருக்கிறது.
மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கவரில் இருந்த போட்டோவை எடுத்து பார்த்தவளுக்கு, தன் கண்ணையே ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை.
இது நிஜமாவே அவன்தானா, புகைப்படத்தை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்தவள், அவன் தானா என உறுதி செய்துகொள்ள.... கூடவே இருந்த பயோ டேட்டாவை எடுத்து படித்து பார்த்தாள்.
பால குரு நந்தன் M.sc., என்று இருந்தது. மற்றும் அவனது மற்ற விபரங்கள் இருந்தது. அவனே தான் என நினைத்தவள்,சமையல் அறைக்கு விரைந்தாள்.
***********************************************************************************************************************
மறுநாள் பெண் பார்க்க மாப்பிள்ளையை தவிர அனைவரும் வந்திருக்க... ஸ்வேதா இன்னும் தவித்து போனாள். வேறு யாரிடமும் கேட்க முடியாமல், தன் அக்காவிடம் மெதுவாக கேட்டுப் பார்த்தாள்.
“ஏன் கா மாப்பிள்ளை வரலை?”
“அவருக்கு அவங்க வீட்ல பார்த்தா போதுமாம்.” என்றாள்.
“இன்னும் அந்த திமிர் போகலை... என்னை பத்தி யோசிக்கிறானா பாரு. இப்பவும் அவனைப் பத்தி தான் யோசிக்கிறான்.” என மனதிற்குள் நன்றாக திட்டினாள்.
*******************************************************************************************************************
“ஹலோ...” என அந்தப் பக்கம் அவனின் குரல் கேட்க,
“நந்தாவா...” என கேட்க வந்தவள், “பாலா குரு நந்தா இருக்காங்களா?” என மாற்றினாள்.
“நான் தான் சொல்லு.” என அவன் தெரிந்தது போல எப்ச...
“நான் ஸ்வேதா பேசுறேன்.” என்றாள்.
“தெரியுது சொல்லு.”
“எங்க வீட்ல உங்களைதான் எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. உங்களுக்கு நான் எந்த ஸ்வேதா தெரியும் இல்ல...”
“தெரியும், இதுக்குதான் போன் பண்ணியா?”
“ஆமாம்.”
“அப்ப சரி வச்சிடுறேன்.” என நந்தா சொல்ல...
சரியான திமிர் பிடிச்சவன் என நினைத்தவள், “நான் இந்த மாப்பிள்ளை வேண்டாம்ன்னு சொல்லப் போறேன்.” என்றாள்.
“சரி சொல்லிக்கோ.” என்றான் அலட்சியமாக.
“நான் இன்னும் அதே ஸ்வேதா தான், திமிர் பிடிச்ச, கர்வம் பிடிச்ச ஸ்வேதா தான்.”
“அது தான் எனக்கு தெரியுமே...” என்றவனின் குரலில் கேலி இருக்க...
“தெரிஞ்சிட்டு ஏன் என்னைக் கல்யாணம் பண்றீங்க? நீங்களே உங்க வீட்ல வேண்டாம்ன்னு சொல்லுங்க.”
“எனக்கு நிறைய வேலை இருக்கு, போன்னை வை.” என்றவன், வைத்து விட்டான்.
இதுவரை அவன் தன்னை யாரென்று தெரியாமல் திருமணதிற்கு சரி என்று சொல்லி இருப்பான் என நினைத்து இருந்தாள். அவன் தன்னைத் தெரிந்தே தான் சொல்லி இருக்கிறான் என்றதும், ஸ்வேதாவிற்கு மனதிற்குள் அப்படி ஒரு கோபம் எழுந்தது.