Manimegalai
Well-Known Member
பெரும் பணக்காரர் ஆக இருந்து ஏழ்மை அனுபவிப்பதுதான் கொடுமை..தாராளமா சொல்லுங்க ப்ரோ .....
நீங்க உங்க நிலையில் இருந்து பார்க்கறீங்க ..... பிறருக்கு உதவும் போது அவங்க நிலையில்
நம்மை வைத்து பார்க்கணும் .... அப்படி பார்த்தா இப்படி நினைக்க தோணாது ப்ரோ...
எல்லாம் அம்மா சொல்ல கேட்டது தான் ..... அம்மாவோட குழந்தை பருவம்( 5-18 ) ஏழ்மை
நிறைந்தது ...வீட்டுல அரிசி வாங்க கூட காசு இருக்காது ....தாத்தா படுக்கையில் .....வீட்டுல எல்லோரும் நூல் சுத்துவாங்க ....அதுல வர வருமானம் தான்.....தாத்தா பெரும் பணக்காரர் .....
சினிமால வர மாதிரி சரக்கு கப்பல் கவிழ்ந்து ஒரே நாளில் ஒன்னும் இல்லாம போனது....தெரிஞ்சவங்க அவங்க வீடு விஷேசமான பலகாரம் கொடுப்பங்க .....எங்க அம்மா சின்ன குழந்தை இல்லையா ...அன்னைக்கு மட்டும் நல்லா சாப்பிட்டுட்டு மத்த நாள்ல எல்லாம் ரொம்ப ஏங்குவாங்க ....பாட்டியோட தோழிகள் சில பேர் முறை போட்டுக்கிட்டு அரிசி , பருப்புனு கொடுப்பாங்க ..... ஒரு பத்து நாள் பொழுது போகும் ....
இப்போ நீங்களே சொல்லுங்க ..... அந்த குழந்தைகளுக்கு ஏக்கம் வர கூடாது இல்லையா ....உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்யுங்க ப்ரோ ....
ரொம்ப தையிரியம்,தன்னம்பிக்கை,
இருப்பவர்களால் தான் மீண்டு வர முடியும்...