Ennapa ippadi ayiduchuஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
ஓ மை சின்ரெல்லா நாவலில் இருந்து ஒரு சின்ன டீசர்.....
படித்துவிட்டு யாரும் கட்டையை தூக்கக் கூடாது....
அந்த நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் மரத்தில் மோதி மணல் லாரி ஒன்று நின்றிருக்க அதன் அடியில் முழு மொத்தமாய் உருக்குலைந்த நிலையில்….. சில மணிநேரங்களுக்கு முன்பு புதிதாய் திருமணம் முடித்து பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு பயணம் தொடங்கிய ஆரியன் ஷிவானி தம்பதியினர் வந்த அந்த விலை உயர்ந்த கார்…... மணப்பெண் அமர்ந்திருந்த ஒரு பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கி கிடந்தது….. விபத்து நடந்து சில மணி நேரங்கள் சென்றிருக்க விபத்தின் மிச்ச மீதியை பலர் நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்……
பெரும்பாலானோர் தங்கள் தொலைபேசி கேமராவின் மூலம் விபத்து நடந்த இடத்தை வெகு சுவாரஸ்யமாய் தங்கள் செல்போனில் காணொளி காய் பதிவு செய்ய….. அதில் சிறிது மனிதாபிமானம் மிக்க மனிதர் யாரோ அழைத்ததால் சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்தது….. உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் அதன் பிறகு அனைத்தும் அவசரகதியில் நடைபெற…...உணர்விழந்த நிலையில் கிடந்தவர்களை சுமந்துகொண்டு மருத்துவமனை நோக்கி பறந்தது அந்த வாகனம்……