ஏம்மா சுந்தரி உனக்கு என்னதான்மா பிரச்சனை?
நீதான் உன்னை இறக்கி விட்டுட்டு
போய் குழந்தையை கூட்டிட்டு
வான்னு சொன்னே
அப்புறம் எப்படி அவன் குழந்தை
அபியை உன்னிடமிருந்து
பிரிச்சுடுவான்னு நினைத்து
கண்டதையும் பேசுறே
எங்கேயோ போற மாராத்தா
என் மேலே வந்து ஏறாத்தாங்கிற
கதையா டெய்லர் லேடி மேல
இருக்கிற கோவத்தை கணவனிடம்
நீ காட்டலாமா, சுந்தரி?
எது எப்படியிருந்தாலும்
பசிக்குதுன்னு சொன்ன புருஷன்
கண்ணனுக்கு சாப்பிட ஒண்ணும்
கொடுக்காமல் இவளும் பட்டினி
இருந்தது என்னால கொஞ்சமும்
ஏற்றுக் கொள்ள முடியலை,
மல்லிகா டியர்
என்ன காசு பணம் இருந்து
என்ன பிரயோஜனம்?
அதையா திங்க முடியும்?
வயிற்றுக்கு சாப்பிடுவது கூட
வரமாகி விடுமோ?
துரைக்கண்ணனின் நிலைமை
அய்யய்யோ பாவம்தான்ப்பா
கடையில் சாப்பிடலாம்ன்னு
துரை சொன்னால் சரின்னு
சாப்பிட்டுவிட்டு வந்திருக்கணும்
வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்ன்னு சொன்ன சுந்தரி வீட்டுக்கு
வந்து என்ன கிழித்தாள்?
மாமியார் வீட்டில் அரைகுறையாக
எட்டி வேவு பார்த்துட்டு கண்டதையும்
நினைச்சு குழம்பி கடைசியில்
பட்டினியோடு படுத்ததுதான்
மிச்சம்
அவனோட அம்மா வீட்டில் துரை
சாப்பிட்டதை நீ கண்ணால்
பார்த்தியா, சுந்தரி
பொண்டாட்டி சாப்பிடாமல்
காத்துக்கிட்டிருப்பாள்ன்னு
இவளுக்காக சாப்பிடாமல்
துரை வந்தது ரொம்பவே
தப்புதான் போலவே