Naan Enathu Manathu 26 1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நிச்சியமும், வளைகாப்பும் நல்லபடியா முடிஞ்சது... நிச்சியத்துக்கே 25 பவுன் நகையா??? :eek::eek: அப்ப கல்யாானத்துக்கு எவ்வளவு போடுவாங்க??? :unsure::unsure: இன்னும் இருபது நாள்ல கல்யாணமா??

என்ன மாமா ஷர்மிக்கு கிஃப்ட் எதுவும் இல்லையா??? ரவி MV நானே உன் தங்கச்சிக்கு கிஃப்ட்.. அப்புறம் எதுக்கு வேற கிஃப்ட்??? :p:p

சீதம்மா & விஷாலி அம்மா ரெண்டு பேரும் வாயை குறைக்கிறது நல்லது...

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மல்லி.. :love::love::love:

நேத்து Precap...
இன்னைக்கு எபிசோட்...
Pleasent Surprise...
அடுத்த பார்ட்டையும் கொஞ்சம் சீக்கிரமா போட்டுருங்க மல்லி... நாளைக்கு தீபாவளி வேற..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

Happy Deepavali Malli :love::love::love:

எப்போவும் அக்கா தங்கச்சிங்க கோவிச்சுப்பாங்க...... இங்கே என்ன அம்மா :mad::mad::mad:

இந்த கேசவன் ரவிக்கு கூட வளையல் போட இடம் விடலையா :eek::eek::eek: அப்போ ரவி ஸ்பெஷல் இல்லையா :p:p:p

அடேய் நீ வாங்கலையா :mad::mad::mad: கண்ணுப் படுமா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அதை தெரிஞ்சு தான் மாமனார் கையை நிறைச்சுட்டார் போல........

ஏம்மா எப்போவும் பேசி பேசி கடுப்பேத்துவீங்க இப்போ சோத்தை போட்டு பயமுறுத்துறீங்க :p:p:p
அப்போ ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்.......
எதுக்கும் பாட்டி கிட்ட கேட்டுக்கோங்க.....

ரவி பாரு எவ்ளோ பேர் இருந்தாலும் உன்னை மட்டும் தான் தேடுறா......
இனியாச்சும் அவளா வரணும்னு வெயிட் பண்ணாமல் நானிருக்கேன் உனக்குன்னு காட்டு......

ஏம்மா கிழவி உன் பொண்ணோட வாழ்க்கை இங்கே தான்........ இப்போ இல்லைனாலும் பிற்காலத்தில் ஷர்மி சந்தோஷ் உதவி தேவைப்படும்.......
சும்மா சீண்டிகிட்டே இருந்தால் அது இல்லாமலே போய்டும்.......
உங்க பொண்ணுக்கு பிள்ளையும் இல்லை........ சோ நீங்க சொன்னதில் எந்த நல்லதும் இல்லை......
என்ன இருந்தாலும் அது ஷர்மி சந்தோஷ்க்கு தான்....... அதை நியாபகம் வச்சுக்கோங்க.......

எங்கய்யா மாப்பிள்ளை :unsure::unsure::unsure: தோசைல பிசியோ :p:p:p
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மல்லி:love::love::love:.ரவி சொன்னதை போலவே கேசவன் வாழ்க்கை பற்றி கூறி மறுப்பதும்,மற்ற பெண்களுக்கு கொடுத்ததை விட வசதியான வீட்டில் கொடுக்க முடியாது என சீதா சொல்ல,தங்கை வசதியாக வாழ்ந்தால் நாங்க பொறாமை படுவோமா என பெண்கள் சண்டை போட்டு வாயை அடைத்து விட்டனர்:D:D:D.

மாமனார்,மாமியார் பெண் கல்யாணத்தில் கலந்து கொள்ள நினைத்தால் வா,இல்லை வீட்டிலேயே இருந்து விடு என்று சொல்லி விட்டனர்:rolleyes::rolleyes:.
கணவரும்,மகனும் பேசாமல் இருக்க,பெண்களுக்கு ஷர்மி, சீதாவின் பேச்சால் வீட்டை விட்டு சென்றது, ஹாஸ்பிடலில் சேர்த்தது தெரிய வர பேயோட்டி விட சீதா வாயை மூடும் நிலைo_Oo_Oo_O.

தனியே இருப்பதாக தோன்றுகிறது என்று சொன்ன சந்தோஷ்,சகலைகளுடன் ரகளை செய்திருக்க... கூட்டு குடும்பத்தில் இருந்த ரவி,மனைவியுடன் நெருங்காமல் ஒட்டாத நிலையில் தனியே:(:(:(

கேசவன் பெண்ணுக்கு பெரிதாக செய்வார்னு தெரியும்,ஆனால் இப்படி நவரத்தினங்களால் வளையல் போட்டு அசத்துவார்னு நெனைக்கலை:giggle::giggle::giggle:.அவர் பொண்ணுக்கு செய்யறதை பார்த்து விசாலி அம்மா புலம்புது:mad::mad:.என்ன பேசுனாலும் இது வாய் அடங்க மாட்டேங்குது:oops::oops:

வளைகாப்புக்கு தான் கண்ணு படும்னு எதுவும் செய்யலை,ஷர்மி இப்போ சாப்பாட்டை வச்சுட்டு தேடறா,அவளுக்கு சம்பிரதாயத்துக்கு ரெண்டு வாய் கொடுத்துட்டு இவனே எல்லாம் சாப்பிட்டா அப்போ கண்ணுபடாதா:unsure::unsure::unsure::unsure:.
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் மல்லி:giggle::giggle::giggle::giggle:.
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்........

தொழிலில் உள்ள வேகம்..... வீட்டின் விஷேஷங்களிலும் நடத்தி காட்டிய ரவி....
தங்கை நிச்சயதார்த்தம்..20 நாளில் கல்யாணம்....
வளைகாப்பு....
சாப்பாட்டு இடத்தில் கணவனை தேடிய ஷர்மி....
நல்லா இருக்கு.....

நன்றி dear MM mam.....

வாழ்க வளமுடன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்ப்பாப்ப்பா
கடலில் அலை ஓய்ந்தாலும் இந்த ரவீந்திரன் ஷர்மிளா புருஷன் பொண்டாட்டி சண்டை ஓயாது போலிருக்கே

ஏதோ இப்போதைக்கு குழந்தை வந்து சண்டை நிறுத்தமாகிருக்கு
ரவி ஷர்மியின் குழந்தை புண்ணியம் கட்டிக்கொண்டது

அரே பாப்ரே
பொண்ணு வளைகாப்புக்கு ஒன்பது வகையான நவரத்தினத்திலும் வளையல்கள் போட்டு அசத்திப்புட்டீங்களே கேசவ்வ்வ்வ்

ஹா ஹா ஹா
சீதாவின் ஆஃப் பண்ணி மூலையில் உட்கார வைச்சது சூப்பர்
பையன் பொண்ணு கணவர் பேசாமல் ஒதுக்கியாச்சு
மற்ற பொண்ணுங்க லெப்ட் and ரைட் கொடுத்தாச்சு
பல்லு பிடுங்கின சீதாவை மாமனார் மாமியார் அரட்டி மிரட்டியது சூப்பரோ சூப்பர்
ஹா ஹா ஹா

ஈச்ச முள்ளால் வாயை இறுக தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் தடவவில்லையேன்னு ஒருத்தி சொன்னாளாம்
அந்த மாதிரி எத்தனை செருப்படி கொடுத்தாலும் விசாலியின் அம்மா அடங்க மாட்டேங்கிறாளே

சூப்பர்
இப்போவாவது அம்மாவை விசாலி அடக்கினாளே

ஹா ஹா ஹா
குழந்தைகள் எப்பொழுதும் குழந்தைகள்தான்
"அத்தை உங்களை தேடுறாங்கன்னு சீதா பாட்டி சொல்லி விட்டாங்க"

பலே பலே
கௌஷிக்கு 25 பவுன் நகை போட்டது யாரு?
கேசவ்வ்வ்வ்வ்வ்வா?
இதுக்கு சீதாஆஆஆஆ ஒண்ணும் சொல்லவில்லையா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top