ஆரம்பமே அமர்க்களமா, சூப்பரா இருக்கு,
விஜி டியர்
ஹ்ம்ம்.................ராஜ ராஜேஷ்வரி, அழகானவளா
இருந்து என்னப் பிரயோஜனம்?
தாலி கட்டிய கணவனை முதல் இரவிலே விஷம்
கொடுத்து கொன்று விட்டாளே,
இது, இவளோட தனிப்பட்ட வேலையா?
இல்லை, இந்த ராஜியின் பின்னால் வேறு யாராவது
இருக்காங்களா?
அந்த டாக்டர் கேட்ட மாதிரி நிதினின் வீட்டில் முதல்
இரவு சடங்கை வைக்காமல்,
ராஜியின் வீட்டில் சடங்கு வைத்தது, நிதினை
கொல்வதற்கா?
நிதினின் தாயின் பெயர், ரஞ்சனியா?
இல்லை, காஞ்சனாவா?
ஐயோ பாவம், யாரோட மனதையும் புண்படப்
பேசக்கூடச் செய்யாத, நல்லவன் ஒருவனை, இந்த
ராஜி கொன்றுவிட்டாளே,
அடிப்பாவி, திருமணத்தில் விருப்பமா-ன்னு அன்போடு
கேட்ட கணவனை கொல்ல, எப்படித்தான் மனம்
வந்ததோ?
இதற்கு, திருமணத்துக்கு முன்னால் ஓடிப்போயிருக்கலாமே, அநியாயமாய், அடுத்தவளின் மகனைக் கொன்று
விட்டாளே,
ஐயோ, அந்தப் பால் செம்பையாவது தட்டி விட்டு
கீழே போட்டிருக்கலாமே
தூக்க மாத்திரையா?
இல்லை, விஷ மாத்திரை-ன்னு ராஜிக்கேத்
தெரியாதா?
கொலைக் குற்றத்துக்கு ராஜ ராஜேஷ்வரியை கைது
பண்ணாமக் கொஞ்சுவாங்களா?
இதிலும் மூன்று வருடக் காதலா?
இந்த ராஜி தெரிந்தே இந்தக் கொலையை
செய்தாளா?
சீக்கிரமா வந்து பதில் சொல்லுங்க, விஜி டியர்