Kaathal Sindhum Thooral - Precap 11

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஒருவேளை மகள் தாங்கள் நினைத்தது போல் இல்லையோ என்றுகூட தோன்ற செய்தது கண்மணியின் முகத்தினில் இருந்த உறுதி.

“என்னம்மா சொல்லு...” என்று சடகோபன் சொல்லவும்,

கண்ணனோ, “ப்பா நான் சொல்றேன்...” என்று ஆரம்பிக்க,

“அண்ணா....” என்றழைத்து அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

“நான் பேச போறது என் கல்யாணம் பத்தி...” என்றுசொல்ல, அவ்வளோதான் கண்ணனும் வாயடைத்துப் போனான்..

கண்மணியா இது??
------------------------------------------
“போதும்டா.... ரொம்ப சந்தோசமா இருக்கு..” என்று அழுதுகொண்டே பேச,
“ம்மா ப்ளீஸ்...” என்றாள் கண்மணியும்..


அத்தனை நேரம் அமைதியாய் இருந்த சடகோபன், “கண்மணி..” என்றழைக்க, அவளோ வேகமாய் தன் அப்பாவினை பார்த்தாள்.

“உனக்கு இது தெரியுமா??” என்று கண்ணனை பார்த்து கேட்க, கண்ணனோ சொல்லாதே என்று தங்கையைப் பார்த்தான்..

அவன் பார்ப்பது புரிந்தும், கண்மணி “ம்ம்ம்...” என்றுமட்டும் சொல்ல,

“ஓஹோ...!!!” என்றவர் வேறெதுவும் சொல்லாது, எழுந்து அறைக்குள் சென்றுவிட, சியாமளாவோ இன்னும் அழுகையை கூட்டினார்.
-----------------------------------------------------


“எப்போவாது பொய் சொல்லலாம். அவசியத்துக்கு.. எப்பவுமே பொய் சொல்ல கூடாது....” என்றவளுக்கு உள்ளே, தான் செய்ததும் தவறுதானோ என்று உறுத்தல் இருந்தாலும்,

அதை வெளிக்காட்டாது “கொஞ்ச நேரம் கழிச்சு போய் பேசு... யோசிச்சு பேசு...” என்று சொல்லி எழ,

“நீ ஏன் அப்படி சொன்ன??” என்றான்.

‘எப்படி??’ என்று கண்மணி பார்க்க, “அதான் இந்த கல்யாணமே வேணாம் அப்படிங்கிற போல..” என்று கண்ணனும் பாயிண்டை பிடிக்க,

‘அது.....’ என்று தயங்கியவள், “தெரியலை.. தோணிச்சு.. சொல்லிட்டேன்..” என்றுவிட்டு அவளும் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்..
---------------------------------------------------


“வருண் பத்தி உனக்கு என்ன தெரியும்? ஒருவேளை அவருக்குமே இந்த ஏற்பாடு பிடிச்சிருந்தா?? அப்போ என்ன செய்வ?? இல்லை உங்க வீட்ல சொல்லிட்டா அப்போ??” என்று லேசாய் கண்மணியின் மனதில் பயத்தினை கலந்தான்..

ஏற்கனவே விஷயம் தெரிந்தும் கண்மணி மறைத்தாள் என்று அப்பாவும் அம்மாவும் கோபத்தில் இருக்க, இனி வருணிடம் பேசி அது வீட்டில் தெரிய வந்துவிட்டால் அவ்வளவு தான் சொல்ல வேண்டியதே இல்லையே..

“ம்ம்ம் அதுவும் சரிதான்...” என்றாள் மெதுவாய்..

“அதுதான் சரி.. எதையும் டக்குன்னு பண்ணிடாலம் தான் ஆனா அதோட விளைவுகள் நம்மனால தாங்க முடியலைன்னா கஷ்டமில்லையா???”
 

Joher

Well-Known Member
Ty sarayu......

கண்ணன் தீபா காதல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதா?????
கண்ஸ் கல்யாணம் பிடிக்கலைனு சொல்லிவிட்டாள்........ சந்தோசப்படவேண்டிய அதி ஏன் பயமுறுத்துறான்??????
எல்லாத்தையும் முடிச்சிட்டு விளைவுகள் பற்றி யோசிக்கிறீங்களா..........
எட்டு திசையிலிருந்து வரும் அம்புகளையும் தாங்க தயார்படுத்திக்கொள்ளுங்கள்........

அப்படியே அந்த epi-யம் கொடுத்திடலாமே.......... ஏன் இந்த suspense????????????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top