ThangaMalar
Well-Known Member
Excellent meera..நீல விழியின் பார்வையிலே
அன்று மூழ்க துடித்த நான்
பார்வையின் காரணத்தை
உணர தவிக்கிறேன் இன்று
உன் மனம் அறியவில்லை
என் மனமும் புரியவில்லை
எதை தேட .. என்ன தேட
எதை உணர ... என்ன உணர
விழி தேடி மூழ்கிய நான்
விடை தேட துவங்கி
விட்டேன் இன்று
விடை தருவாய் என கேட்டேன்
நீ தேடு எனவுரைத்தாய்
தேடி தவித்திட்டேன்
தேடல் முடியவில்லை
கண் பார்த்து என்னை சேர்ந்தாய்
மண்பார்த்து நடக்கவில்லை நான்
உன் கண் பார்த்து பின் நடந்தேன்
பின் நடந்தவளின் மனம் உணரவில்லை நீ
பாதுகாக்க கணவன் வேண்டும்
பாவைக்கு நம்பிக்கை தரல் வேண்டும்
பாதுகாப்பின்மையின் உச்சத்தில் நான்
பாக்கி வாழ்வு வேண்டாம் சென்றேன்
அடையாளம் கொள்ள சென்றேன்
என் கண் மட்டும் பிடித்தது என்றாய்
பெண் பார்க்க பிடிக்கலையோ
அங்கேயும் யோசித்தேன்
பிடிக்க கூடாது என நினைத்தேன்
பிடித்ததா தெரியவில்லை ஆனால்
பிறர் பார்க்க பிடிக்கவில்லை
Marvellous...
கண் பிடித்ததோ..
பெண் பிடிக்கலையோ..
அருமை...