காதல் கனவே தள்ளி
போகாதே போகாதே..
ஆச மறச்சு நீ
ஒளியாதே ஓடாதே
கனியே உன்னை
காண காத்துருக்கேன்
அடியேய் வழி
நானும் பாத்துருக்கேன்..
தேனாழியில் நீராடுதே மனமே..
பூவாலியில் நீ
தூக்கவா தினமே
செதறாம சிறுமொழி பேசும்
சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி
பதிச்சாலே பரவசமானேன் சுகமா
சிருநூலாய் துணியில் இருந்து
தனியாக விலகி நின்னு
மனமெங்கும் எலகிப்போச்சு மெதுவா
இறகாலே படகா நீந்தி
காத்தில் நானும் மிதந்தேனே
கடிவாள குதிரையாக
எனதாய் நீயும் இழுத்தாயே
மாறாதே மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே
காதல் கனவே…
பருவத்தில் பனியோ செஞ்சேன்
பதுங்காம மெதுவா மிஞ்சேன்
புதுவேகம் எடுத்தே நடந்தேன் தனியே
உருவத்த நிழலா பிடிச்சேன்
உறவாக கனவுல பதிச்சேன்
உனக்காக நிசமா துடிச்சேன் மானே
இரவோடு பகலாய் சேர
மாலை தேடி இருந்தேனே
கண்ணாடி தொட்டில்மீனாய்
நானும் உன்னை பார்த்தேனே