sangesekar
Member
மேடம் எல்லாம் வேண்டாம் சங்கி. அன்சா போதும்.
ஐஸ்வர்யா அவனை காதலித்தாளா? நிச்சயம் தெரியாது. ஆனால், தனது கணவனாக மனதில் வரித்திருந்தால் என்பது 100% உண்மை. அதனால் தான் அவனது உதவிகளை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டாள். என்று நான் உன்னை காதலிக்கவில்லை என்று கூறினானோ அன்றே உனது உதவி தேவையில்லை என ஒதுங்கி சென்றுவிட்டாள். மூன்றாம் மனுஷியாய் அவள் இருந்திருந்தால் என்றோ அவனை மறந்தும் தொலைத்திருப்பாள். உறவுகாரியாக அதுவும் நெருங்கிய உறவுக்காரியாக அல்லவா போய்விட்டாள். அவனை பற்றிய சிறு சிறு செய்திகளும் அவள் செவிகளில் விழுந்து கொண்டேயிருக்கு. விளைவு குரங்கை நினையாமல் மருந்து குடிக்க நினைத்தவன் கதிதான் அவளுக்கும். கூடிய விரைவில் அவளும் தனக்கான துணையை கண்டுகொள்வாள்.
ஈஸ்வர் ஒரு பெண்ணை விரும்பினான் என்ற விஷயம் அவனையும் ஐஸ்வர்யாவையும் தவிர அறிந்த மற்றொரு நபர் ரஞ்சனி மட்டுமே. ஐஷ் சொல்லவில்லை என்றால் ரஞ்சிதான் கூறியிருக்க வேண்டும்.
மற்றும் ஒரு வாய்பாக (1000தில் ஒரு வாய்பாக) நம்ம சாரே கூட சண்டைபோடும் வேகத்தில் ரத்தக்காட்டேரி மாதிரி என் உயிரை குடிக்கிற உன்னை கட்னதுக்கு பதிலா அந்த பிசாசையே கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம் சொல்லியிருப்பானோ
ஈஸ்வரை பொறுத்த வரை ரயிலில் பயணம் செய்ய இருக்கையை முன்பதிவு செய்வது போல். தன் எதிர்கால வாழ்க்கைத்துணையாக காதல் என்ற பெயரை சொல்லி முன் பதிவு செய்யப்பட்ட ஒரு அழகிய உயிருள்ள பொம்மை அவ்வளவே. மற்றப்படி அவளிடம் பேசக்கூட ஐயாவுக்கு எரிச்சலாக இருக்கும்.
ரத்தக்காட்டேரி மாதிரி என் உயிரை குடிக்கிற உன்னை கட்னதுக்கு பதிலா அந்த பிசாசையே கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம் சொல்லியிருப்பானோ
ha ha ippadi solli irunthal aval kadiththathil thappae illai