precap படிச்சதுமே தெரிஞ்சது வலி சோகம் இருக்கும்னு..இருந்தும் அர்த்த ராத்திரியில் படிச்சது ஆர்வக்கோளாறு...படிச்சு விடிகாலை மூன்று ஆகியும் தூக்கம் வராமல் மனதிலும் மூளையிலும் ஓடியது வர்ஷ்..வர்ஷ்..வர்ஷ்...
ரிலாக்ஸ்க்கு கிண்டலாகcmt அடிச்சும்தூ ங்காமல்திரும்ப காலை ஐந்து மணிக்கு எழுந்து அதே ஓட்டம் தான்....
அதுக்கு காரணம் உங்க எழுத்து தான்..
வர்ஷ் ஓட சேர்த்து எங்களையும் தவிக்கவிட்டாச்சு...
அவள் ஏழையாக பிறந்து இருந்தால் கையில் பணமும் இருந்து இருக்காது போதையும் வந்து இருக்காது...இன்றைய பாதி தலைமுறை நிலை அப்படியே அப்பட்டமா காட்டி இருக்கீங்க மல்லி..
முன் கூட்டுகுடித்தனம் எல்லா குழந்தைக்களும் குடும்ப வாழ்க்கை,சமையல்,அன்பு,பாசம்,போராடும் வலிமை,உணர்வை வெளிபடுத்தும் தன்மை தெரிந்து கொண்டனர்..
இப்போது கல்யாணம் ஆனதுமே தனிக்குடுத்தனம், அவசர வாழ்க்கை,சூழ்நிலை,பெற்றோர் வேலைக்கு செல்லுதுதல்,பணம்,புகழ் பின்னால் ஓடுதல்....
குழந்தைகளிடம் ஏகப்பட்ட செல்லம்,கேட்பதை உடனே வாங்கி கொடுப்பது,தன் குழந்தைகள் செய்வது எல்லாம் சரியே என்ற மனம்...
அதன் விளைவு..குழந்தைகள் பிஞ்சில் பழுத்து நெட் வழியா எல்லாம் தெரிந்து ஓவர் matured,அதிக வாய் பேசுதல்,எதிர்த்து பேசுதல்,எல்லா தீய வழிக்கும் அடிக்கோல் நாட்டிவிடுகின்றனர்...துளி உதாரணம்..
அதுதான் வர்ஷ்..பணம் பணம் ஏகப்பட்ட பணம் போதைக்கு வித்திட்டு வளர்த்து மரமாக்கிவிட்டாள்....வேரோடு அழிக்க ஈஷ் மிக மிக பாடுபட வேண்டியிருக்கும்...அன்பு பாசத்திற்க்கு ஏங்கும் வர்ஷ் பணம் இருந்தும் மாடி வீட்டு ஏழை....
நிஜமாவே இன்றைய தலைமுறை பாவம் தான்!!!!!!!!
கர்விஷ்டன் ஈஸ்க்கு பணம் இருந்தால் உலகை வாங்கி ஆளலாம்...இப்போ வர்ஷ் ஓட அன்பை வாங்க முடியுமா இல்லை காதலை தான் வாங்க முடியுமா ???ஈஷை நினைத்தால் பாவமா இருக்கு..வர்ஷுவை நினைத்தால் அதைவிட பாவமா இருக்கு...
ஆழம் தெரியாமல் இரண்டு பெண்களின் மனதை புண் படுத்தி இருக்கான் ...பெண் மன ஆழத்தை யாராலும் அறிய முடியாது..அதிலும் ரெண்டு பேர்!!!!
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா...
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ