E100 Sageetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Word struck Meeru....
Excellent description...
இதை வாசித்த பிறகு...
விஷ்வா வை பிடிக்காதுனு சொன்னவர்களுக்கு கூட அவனை பிடித்து போகும்.
அப்படி யாராவது இருக்காங்களா, என்ன..
நம்ம தல நடை என்ன.. உடை என்ன.. ஸ்டைல் என்ன.. பேச்சு என்ன.. திறமை என்ன.. பர்சானாலிட்டி என்ன..
Handsome hero ma...
 

murugesanlaxmi

Well-Known Member
அப்படி யாராவது இருக்காங்களா, என்ன..
நம்ம தல நடை என்ன.. உடை என்ன.. ஸ்டைல் என்ன.. பேச்சு என்ன.. திறமை என்ன.. பர்சானாலிட்டி என்ன..
Handsome hero ma...
ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படி யாராவது இருக்காங்களா, என்ன..
நம்ம தல நடை என்ன.. உடை என்ன.. ஸ்டைல் என்ன.. பேச்சு என்ன.. திறமை என்ன.. பர்சானாலிட்டி என்ன..
Handsome hero ma...
athu ellavatraiyum vida, Jagan pola aduthan kaasula deepavali kulikkama, aduthavan panathai, money thirmbakkodukkanum nu thannoda life ponaalum kavalaippadamal poradiya, thannaip pola piraraiyum ninaikkum MAAMANITHAN, enga Thala Viswesvaranukkaga, athanaal thaan, avanoda intha nalla manasukkutthaan, Eswarai, MASS Hero nnu sonnen, Thangamalar dear
 

rathippria

Well-Known Member
DEDICATED TO ALL MY FRIENDS AND THALA FANS
ESPECIALLY KETTU ELUTHA VAICHA @Manimegalai and @Sundaramuma



முத்தாக முதலாக
வந்த சொத்தே நீ தான்
வீட்டில் உள்ளோருக்கு
வித்தே நீ தான்
கத்து கத்தாக எழுதினாலும்
பத்தாது உன் குணம் சொல்ல
அலைந்து திரிந்தாலும்
அடுத்தொரு ஆளில்லை
அவனுடன் ஒப்பிட


ஒத்துக்கொள்வேன்
சில குறையுண்டு
பல நிறை காணும் போது
குறை காணாப்போவதியல்பே
குறையில்லா மனிதனில்லை இங்கு
நிறை காண மனிதனில்லை இன்று
நிறை இங்கே பகிர்ந்திடுவேன்


உன்னை சரியாக புரிந்தவர்
சாதாரணமானவன் என்பர்
தப்பாய் குறை காணுங்கால்
தலை கணம் கொண்டவனென்பர்
சுற்றத்தையே நினைத்து
சிக்கலாகிய தன் வாழ்வை
சற்றும் தளராமல்
சரி செய்த உன்னை
சரிகோணம் அறியாதோர்
சர்வாதிகாரி என்பர்


போட்ட நிதியெல்லாம்
போனதோ என்றெண்ணி
குருவியாய் சேர்த்த
காசு பணமெல்லாம்
கையில் வாராதோ என
கவலையுற்ற மக்களை
கன்றை சீராட்டும் பசு போலே
கணக்கு பார்த்து கொடுத்தவன்
என் தலைவன்


தங்கையின் வாழ்வுதனை
தனையனாய் காத்திட்டான்
தன்மானம் காக்க
தன்வாழ்வை தொலைத்திட்டான்
தடையறாது உழைத்திடும்
உழைப்பாளி என் தலைவன்


அண்ணியின் தங்கையை
கன்னியை கண்டு காதல்
உரைத்தாலும்
கைவிரல் படாமல்
கை கோர்த்து செல்லாமல்
கைபேசி அடித்தாலும்
கை கொண்டு எடுக்காமல்
மெய் கொண்டு கதைக்காமல்
காலநேரம் எல்லாமே கடமைக்கே
தந்தவனே


சௌகர்ய காதலாய் போன
சௌந்தர்ய பெண்ணை மறுத்த
சத்தியத்தை சங்கீதத்திடம்
சொன்ன திடம் அருமையடா
சங்கடம் கொண்டே
பெண்ணவள் நல்வாழ்வின்
பின்னரே உன் வாழ்வு என
முன்னரே நினைத்த என்
கண்ணனே உனையென் சொல்ல
குறையாகயிருந்த இதையும்
நிறையாக மாற்றிவிட்டாய்


விவாகரத்து கொடுத்த நேரம்
வீணான வாதமோ
வீண் பிடிவாதமா இன்றி
வீட்டை விட்டு செல்லாத
நிபந்தனை வைத்தாயே
வித்தகன் நீ வென்றாயே
விட்டு போவாளோ எனையெண்ணி
வித விதமாய் பயந்தேனே
விட்டு கொடுத்ததிலும்
மட்டுமல்ல
விட்டு பிடிப்பதிலும் சூரன் தானடா


ஆரம்பத்தில் வில்லனாய் வந்தாலும்
அவரச காலத்தில் இன்னுயிர் தந்து
அவள் உயிர் காத்ததால்
அன்பன் அவனையும்
அழகான உயரத்திலேற்றி
ஆச்சர்யம் கொடுத்தாயே


அண்ணன் அவனால்
அன்பு தங்கை வாழ்வு
மட்டுமல்ல
அழகான உன் வாழ்வில்
ஆரம்பித்த பிரச்னையை
அழகாய் சரி செய்து
அண்ணனையும் கவுரவித்து
ஆட்டத்தில் நுழைந்தாயே
அதிலும் ஜெயித்து விட்டாய்
அடுத்தது கபடியோ
அதை மட்டும் விடுவாயா


காதலும் குறைவில்லை
கரை இங்கில்லை
கறையுண்டு குறையுண்டு
கண்ணாடி கண்களுக்கு
காத்திருக்கும் பழி சொல்ல
கடைசியில் பொங்கியது
கரை காணா ஆழியாக
திரை நீக்கிய காட்சியாக
மறைபுகழ் பெற்றிடும்


மழை மகளின் மீதினிலே
மகா பெருங்கடலாய் நீயளித்த காதலை
மழை மகளும் பெற்றிங்கே
மழையாக நம்மீது பொழிந்ததனால்
மகிழ்வாய் நாம் நனைந்திடுவோம்
மழைமகளோடு நாமும்
மாக்கடலின் காதலிலே
மனநிறைவோடு நீந்திடுவோம்
Pinnita darlu;)
 

malar02

Well-Known Member
நூறு பக்கங்கள் தாண்டியும் நிழல் கதையை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை...ஏனெனில் மல்லி முடிச்சுட்டாங்க..சோ என்ஜாய் செய்துட்டு இருக்கேன்...அதைப்பற்றி அலசி ஆராய்வதில் பயனில்லை...
ஆனால் இந்த கவசம் என்ற வார்த்தை பற்றிய சில கருத்துகளை நிழலிலிருந்து சில நிஜத்தை மட்டும் கூற விழைகிறேன்..

இதை கிசுகிசு என்று நினைத்து தயவுசெய்து பிரபலங்களின் பெயர்கள் தெரிந்தது என்றால் யாரும் எவரும் கண்டறிந்த அவர்களின் பெயரை மட்டும் எங்கேயும் வெளிப்படுத்தாதிர்கள்...

என்தந்தை பிலிம் டிஸ்ட்ரிபியுடர்...என் அம்மா என்னையும் என் தம்பியையும் அந்த நிழலில் எங்கேயும் கொண்டு வரவில்லை...நான் ஆசிரியை..என் தம்பி எஞ்சினியர்...வீடு வெளியே ஆபிஸ்..ஓரு நாள் கல்லூரி செல்லும்போது கேட்டது..

சென்ற கதைகளில் பன் க்கு கிண்டல் செய்த பிரகஸ்பதியின் அல்லக்கை பேசுவது கேட்க நேர்ந்தது...அப்போது அந்த பன் அப்பா தயவுல நடிக்க வந்த புதுசு..
அப்போவே அந்த பன் பெண்களின் கல்லூரி வாசலில் அவனின் காரில் அவன் நண்பர்களுடன் இருந்து அன்று தேர்வு செய்த பெண் அவனோடு வரவேண்டுமாம்..அதற்கு அப்போதே ஒரு லட்சம் வரை தருவான்...அப்போது தங்கம் கிராம் 480 ரூபாய்..அந்த காரும் அவனும்!!!!...
சொல்ல முடியாது..இப்போதோ செம்மையாய் வளரந்ததால் அவன் ஈஸ் போல பல கோடி காரை வைச்சு மயக்கிட்டு தான் இருப்பான்..இன்னும் திருமணம் செய்யாமலே பல வதந்திகளில் அடிபடுகிறான்...
சாதாரணப் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சினிமா உலகத்தில் இருக்கும் வர்ஷ்க்கு என்ன பாதுகாப்பு???????
வெளிநாட்டில் ஈஸ் இல்லாதபோது இருந்தாள் தான்..ஆனால் அங்கே பெண்ணின் விருப்பம் இருந்தால்யொழிய யாரும் எதுவும் செய்வது இல்லை..அங்கே பெண்ணின் பாதுகாப்பு உண்டு...இங்கே குழந்தையில் இருந்து முதிர்ந்த பெண்ணிற்கு எங்கே இருக்கு பாதுகாப்பு?????அதிலும்
வர்ஷ் அழகான பெண்...


சோ..இந்த மோசமான சினிமா உலகத்திற்கு ஈஸ் தான் தலைகவசம் வர்ஷ்க்கு...

அடுத்து எனது திருமணத்தில் வந்த பிரபல டைரக்டர் ஓட கதை...
வீட்டை விட்டு ஓடி வந்து கரம் பிடித்த அவரின் காதல் மனைவியும் ஓரு நடிகை....அப்பப்பா..என்ன ஒரு காதல் ..அந்த முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட்வாங்கிட்டார்...இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ளும்வரை தான்...பின் அவர் நடித்த படத்தின் சின்ன பெண்ணிற்கு வீடு வாங்கி தருவதும் மனைவியை டிவோர்ஸ் செய்ததும்...இப்போ ரெண்டு பேரும் ரெண்டு புள்ளிகள் உடன்..
அட அந்த கதை ஊர் தெரிந்தது ஆச்சே...
அப்போது அந்த நடிகை சொல்லுவார் ...நள்ளிரவு பெரிய நடிகர்கள் அரசியல்வாதிகள் இன்னும் பலர் போன் செய்வர்..எடுக்கலேன்னா வீடு வாசலில் நேரடியா வருவார்...மிரட்டவும் செய்வர்...விஜயலட்சுமி ஜகன் கதை யாரை விட்டது காதல் படிக்கும் போதும் இது தான் நியாபகம் வந்தது...அந்த கதைகளில் தான் காதல் கல்யாணம்..நிஜத்தில்????

மல்லி சொன்னது போல் இந்த சினிமா போன்ற மாயயுலகத்தில் ஏமாற்று உலகத்தில் கால் பதித்த வர்ஷ்கு ஏமாற்றவும் மிரட்டவும் காரணிகளா இல்லை???
ஈஸ் மிக பாரம்பரிய மிக்கவன்...
வர்ஷ் தந்தை பல பெண்களிடம் மோசமாக நடந்தவர்..
அவளின் தாய் பிரபல தாதாவின் ஆசைநாயகி...


இது வெளியானால் ஈஸ் குடும்பம் அவன் பாரம்பரியம் அவன் பாக்கிரௌண்ட் என்ன ஆகும்???
ஈஷின் தாதா ஜாம்பவான் எல்லாம் இந்த மாய உலகத்தில் உண்டு..ஈஸ் எல்லாம் ஜுஜுபி இந்த மிரட்டல் உலகத்தில்!!!


அதனால் தான் அவளின் பெயரை எங்கும் வெளியிடாமல் ஒரு வாளின் உறைகவசமாக ஈஸ் நிற்கிறான்..
அடுத்த கவசங்களாக அங்கே முரளி பத்துவை நிற்க வைக்கிறான்.....
IPL வழியே இன்டெர்நேஷனல் பிகர் ஆகிறான்...


தையா தையா னு நம்ம தோழிகள் நிறைய கருத்துகள் சொல்லி இருக்காங்க முந்தைய பக்கங்களில்...தையா நடிகரின் மனைவி விமான நிலையத்தில் வர்ஷ் பயன்படுத்திய அதே மருந்து சாப்பிட்டதால் பிடிபட்டார்...இன்டெர்நேஷனல் பிகர் அதை மறைச்சுடார்..
கதையில் வர்ஷ் பப்ளிக் ளே போதை மருந்தின் வீரியத்தால் மயக்கத்தால் தன்னிலை அறியாமல் இருந்ததை யாரோ மீடியாவில் தெரிந்து இருந்தால்???அதை கொண்டு அவளை எதற்கும் என்னவும் செய்யலாம்...
ஊசி நுழையாத இடத்திலும் பணம் நுழையும்....வர்ஷா உடன் இணைப்பு பேச்சு மீடியாவில் வந்தும் கண்டு கொள்ளாத ஈஸ் ..சினிமாவில் பிரபலமாகும் வர்ஷின்
போதை பற்றி மீடியா அலசி ஆராய்து இருந்தால்??????இந்த டயானா கதை என்னவாச்சு???
இந்த படு மோசமான மீடியா உலகத்தில் ....ஈஸ் தான் வர்ஷ்கு இரும்புக்கவசம்....


இன்னும் நிறைய சினிமா கதைகள் பற்றி நேரடியா எனக்கு தெரியும்..சிலதை மட்டுமே கூறினேன்...


பூமிக்கு சூரியனின் கதிர்வீச்சுகள் நேரடியா விழுந்தால் பூமி சுருண்டுபோகும்...நமக்கு ஓசோன் லேயர் தான் பிரதான கவசம்...(இபோ ஓட்டை ஆனதை பற்றி சொல்லகூடாது..உதாரணதிற்கு தான் இது :D:p;))
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சில கோள்கள் இருந்தும் கவசமாக நம்மை பாதுகாக்கிறது...
வர்ஷ்க்கு ஈஸ் ஒரு ஓசோன் லேயர்(ஓசோன் ளே ஓட்டை போல இவனுக்கும் தவறு இருந்து இருக்கு:D:p;)) என்றால் அஸ்வின் முரளி பத்து பாதுகாக்கும் சில கோள்கள்....


உமா சுந்தரம் சொன்னது ஈஸ் வர்ஷ்க்கு கவசம் என்பது முற்றிலும்உண்மை...[/QUOT:)
:p:p:D:D
photo.jpg
 

Sasideera

Well-Known Member
ஹாய் சசி,

உங்கள் கவிதை அருமை. ஒரு எழுத்தாளரின் எல்லா கதை தலைப்பையும் வைத்து கவிதை எழுதுவது மிக மிக சுவாரசியமானது.

நான் என் அக்கா திருமண வாழ்த்து மடலை ரமணி அம்மா கதை தலைப்பை வைத்து எழுதினேன். பத்து பக்க கவிதை அவர்களுக்கு என் திருமண பரிசாக கொடுத்துள்ளேன். 12 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையில் எழுதியது.

உங்கள் கவிதை அன்றைய நினைவுகளை தூண்டுகின்றது.
மிக மிக அழகு.

உங்கள் கவிதை கருத்து


நன்றி நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top