அடேய் தேனு பெத்த தேனு, உங்கம்மா கருவாப்பிலை கொத்தாட்டம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு உன்னை பெத்து வளக்கறாங்க. அவங்களுக்காகவாவது ஒழுங்கா இரு.
தேவா சூப்பர் ரவுடின்னா அவ புருஷனும் சுமாரான ரவுடிதான். அதுவே உன் விஷயத்தில அவனோட வீரியம் கூட தான் இருக்கும். So அவளை திருத்தி பிரபாகாரனுக்கு ஒரு அமைதியான மகளா அவளை மாத்த நினைக்கிற mission-ஐ எல்லாம் விட்டுடு. அதெல்லாம் சேஷா பார்த்துப்பான்.
பிரபாகரன் செத்து போன மனைவியை நினைச்சு பிள்ளைகளை மாமியாரிடம் விட்டு வந்தது எத்தனை சமாதானம் சொன்னாலும் சரி ஆகாது. அதையெல்லாம் நியாயப்படுத்தி வீணா அவமானப்படாதப்பா தேனு. வேணும்னா நீ தான் அவரோட உண்மையான வாரிசுன்னு நிரூபிக்கும் வகையில் உன்னோட oneside love-ஐ நினைச்சுக்கிட்டே தனியாளாகவே வாழு. உன்னை சொல்லி குத்தமில்லை, உன்னை உசுப்பேத்தி விட்டுட்டு, தான் மட்டும் மனைவி மகன்னு இந்தியாவில வாழறான் பாரு ஒருத்தன், அவனை சொல்லணும்.
ஏம்மா தேவா, சின்ன வயசுல எல்லாமே தனியா செய்ய பழகிக்கிட்டேன்னு சொல்லி, உன் அத்தை கலையரசி தந்த support-ஐ மறந்து பேசறியே இது நியாயமா?
டேய் ஷேஷா, அது என்னடா உனக்கு foreign country-ல மட்டும் தான் romance யோகம் கைக்கூடுது? எப்பையாவது உன் வாயில் அம்ருன்னு வந்து உன் அம்மு உன் நாக்கை சுருட்டி இழுத்து பீடாவா மடிச்சுட்டா எப்படி இருக்கும்? கற்பனையே குளுகுளுன்னு இருக்கு. பார்ப்போம் அப்படி ஏதும் உனக்கு சேதாரம் தரும் scene வருதான்னு.