அப்பா பொண்ணு பாச தொல்லைங்க தாங்க முடியல
பொண்ணு நடிக்கிறா என்று தெரிஞ்ச பிறகாவது பொண்டாட்டி கிட்ட பேசிருக்கணும் அதையும் செய்யாமல் பொண்ணு கிட்ட பொண்டாட்டியை அலட்சிய படுத்தி பேசுறாரு. அவ அம்மா கண்டிப்புல உள்ள நியாயத்தை எடுத்து சொல்லாமல் இவ பண்ற தப்புக்கெல்லாம் சப்போர்ட் பண்றார் இப்படி செஞ்சா அவளுக்கு அம்மா கிட்ட எப்படி மரியாதை வரும் . அதான் அப்பா சப்போர்ட் இருக்குன்னு அம்மா சொல்றதை எல்லாம் அலட்சிய படுத்த தோணும் .
இந்த விஷயத்தில் அம்மாக்கள் எப்பவும் கிரேட் தன் புருஷன் கிட்ட தப்பே இருந்தா கூட பிள்ளைங்க கிட்ட அவரை விட்டு கொடுக்க மாட்டாங்க ஏன்னா அப்பா மேல் இருக்க மதிப்பு மரியாதை குறைய கூடாதுன்னு அவர் உங்கள் நல்லதுக்கு தான் செய்வார் ன்னு பிள்ளைங்களை தான் சமாதான படுத்துவாங்க ஆனால் அப்பாக்கள் எல்லாம் உங்க அம்மாக்கு என்ன தெரியும் உனக்கு அப்பா இருக்கேன் என்று அம்மாக்கு எதிராகவே பேச வேண்டியது
இப்போ கூட அவர் பொண்ணு சொன்னதுக்காக தான் பொண்டாட்டி கிட்ட பேசுவாறாம்
அபய் அம்மா அபின்னு சொன்னதும் இவன் திருத்தினானே ஒரு வேளை அபய் அபி ட்வின்ஸா இல்ல அபி ன்னு கூப்பிடுறது பொண்ணு பெயர் மாதிரி இருக்குன்னு தடுத்தானா
சிவகாமி கட்டப்பா கவலை படாதீங்க உங்களை காப்பாற்ற தேவசேனா மரம் மரமா ஏறி குச்சி பொறுக்கிகிட்டு இருக்கா மொத்த குச்சியும் பொறுக்குனதும் வந்து காப்பாத்துவா
அந்த பேய் வீட்டுக்கும் அபய் பேமிலிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போலயே அபயோட அப்பாவோ இல்லை அவனுக்கு வேண்டிய யாரும் அந்த வீட்டில் இறந்து இருப்பாங்களோ அதை கண்டு பிடிக்க தான் வந்திருக்கானா
பேய்க்கதை என்கிறதால கதையில் வர லவ்வர்ஸ் கூட பேய் பிசாசு காட்டேறி ன்னு தான் கொஞ்சுவாங்க போல
சசி பின்னாடி உண்மையிலே பேய் நிக்குதா இல்லை சும்மா புருஷனை பயங்காட்டுறாளா
@உதயா
சரியா சொன்னீங்க சிஸ்.. மனைவியை விட்டு கொடுக்காமல் மகளை தாங்கும் அப்பாக்கள் இருந்தாலும் நீங்கள் கூறும் அப்பாக்கள் அதிகம் தான்..
அபய் & அபி இருவர் தான் ஆனால் டிவின்ஸ் இல்லை சிஸ்..
ஹா ஹா.. எஸ் வருவா.. கவலைப்படாதீங்க
அபய் குடும்பத்தில் யாரும் இறக்கவில்லை.. ஆனா அந்த பேய் வீட்டு மர்மத்தை கண்டு பிடிக்க தான் அவன் வந்து இருக்கிறான்.
ஹா ஹா.. என்ன செய்ய! பேய்னு அவளை திட்டிட்டான், அதை அவளும் கேட்டுட்டா.. சமாளிக்கனுமே! அதான்
-கோம்ஸ்.