ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-5

Advertisement

அத்தியாயம் 5

ஹர்ஷினியின் மரியாதை இல்லாத பேச்சில் கோபமாக கார்த்திக் வீட்டிற்குள் வர...
அவனின் அப்பத்தா பூமணியோ.... கனியைப் பார்த்து...
"என்னடி போன ஜென்மத்தில எனக்கு மாமியாரா இருந்த புள்ள தான்... இந்த ஜென்மத்துல உன்னோட சோக்காலி புள்ளையா..." என்று கேட்டு சிரிக்க ....


கனி அப்பாவியாக அவளின் அப்பத்தாவை பார்த்தாள். இருவருக்கும் நடுவில் பலியாடாக நின்றது அவள் தான்.... எப்பொழுதும்போல் பூமணி அப்பத்தா அவளைத் திட்ட ஹர்ஷினி பொங்கி விட்டாள்....

"ஹலோ கிழவி... உனக்கு மாமியாரு நானா... அவ்வளவு அதர பழசாவா நான் இருக்கேன்" என்று கேட்டுவிட்டு அவள் கண்களை சுருக்கி நகத்தை கடிக்க...

அவளைப் பார்த்து கேலியாக சிரித்தவர்....
"எந்த சீமை சிறுக்கி டி அப்படி சொன்னா... பேசுற பேச்செல்லாம் என் மாமியார் கணக்கா தான் இருக்கு... ஆனா நீ என் மாமியாரை விட மூத்தார் கணக்கால இருக்கே... என் மாமியார் 80 வயசுலயும் வெடுக்கு வெடுக்குன்னு இடுப்பை ஆட்டிகிட்டு ஐஸ்வர்யாராய் கணக்கா அங்கன இங்கன நடக்கும் அம்புட்டு இளசு... அதுமட்டுமா கண்டாங்கி சேலை கட்டி கரீனா சோப்ரா கணக்கால என் மாமியார் இருக்கும்... நீ என்னதான் ஆம்பள பேண்ட் சட்டை போட்டாலும் என் மாமியார் பக்கத்துல நிக்க முடியாதுடியே" என்று மேலும் ஹர்ஷினியை வம்பு இழுக்க....


"சூப்பர் பாட்டி சூப்பர் ... என்னால பண்ண முடியாதத நீங்க பண்ணிட்டீங்க..." என்று ஹர்ஷினியின் மனசாட்சி பாட்டி கூட டூயட் ஆட...

"கிரேட் கிரேட் ...இன்சல்ட் ஹர்ஷி இந்த கிழவிய சும்மா விடக்கூடாது" என்று பொங்கிய ஹர்ஷினி...

"இது ஆம்பள பேண்ட் சட்டை மாதிரி இருக்கா... இது குர்தி இது ஜெக்கின்ஸ்..."
என்று மூக்கு விடைக்க முறைத்துக் கொண்டே சொல்ல...


" நீ என்னதான் சொன்னாலும் இது ஆம்பள பையன் பேண்ட் கணக்கா தானே இருக்கு....
கனிய பாரு அழகா அடக்க ஒடுக்கமா தாவணி சட்டை போட்டு இருக்கா... நீயோ கையில்லாத ஒரு மேல் சட்டை போட்டுட்டு... கீழ ஆம்பள கணக்கா குழாய் துணிய மாட்டிக்கிட்டு நிக்குற" என்று மேலும் மேலும் பூமணி பாட்டி ஹர்ஷினியை வம்பிழுக்க....


"ஹேய் கிழவி என்ன ஓவரா பேசுற... பின் விளைவுகள் மோசமா இருக்கும்... பாத்துக்கோ" என்று ஹர்ஷினி பதிலுக்கு எகிரி கொண்டு நிற்க....

கார்த்திக் அவளின் சூட்கேஸை இழுத்துக்கொண்டு நடுக்கூடத்தில் பொத்தென்று போட்டான்.

மூவரும் அதிர்ச்சியுடன் திரும்ப... கார்த்திக் கடுமையான கோபத்துடன் ஹர்ஷினியிடம்...
"இந்த வீட்டில இருக்கிறதா இருந்தா... அப்பத்தா கிட்ட ஒழுங்கா மரியாதையா பேசு ... இல்லனா பெட்டி படிக்க தூக்கிட்டு உன் ஊருக்கே போய்டு... இங்க இருந்துட்டு உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு திரிஞ்ச வகுந்துடுவேன் வகுந்து... "
என்று கடுப்புடன் எச்சரித்துவிட்டு அவனது அறைக்குள் சென்று மறைந்தான்.


தன் அண்ணனின் இத்தகைய கோபத்தை எதிர்பார்க்காத கனி தன் தோழி பாவம் எவ்வளவு வருத்த படுவாள்... என்று நினைத்து கண்கள் கலங்க ஹர்ஷினியை பார்க்க.. அவளோ அசால்டாக அப்பத்தாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"ஏய் கிழவி உன் பேரன் கிட்ட சொல்லி வை.... தேவையில்லாம என்கிட்ட வம்புக்கு வந்தா ..அவ்வளவு தான் வகுந்துடுவேன் வகுந்து..." என்று அவனைப்போலவே தெனாவெட்டாக பேச பூமணி பாட்டி சிரித்துவிட்டார்.

அவருக்கும் பேரனின் கோபத்தைக் பார்த்து சற்று திகைப்பு தான்.... வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பெண் கலகலவென்று பதிலுக்கு பதில் பேசவும் அவருக்கும் வழக்காட ஒருத்தி கிடைத்த விட்டாள் என்று சந்தோஷமாகத்தான் அவளிடம் வம்பு செய்தார்.

ஆனால் தனது பேரனின் திடீர் கோபத்தில் திகைத்து இந்தப் பெண் வருத்தப்படுவாளோ? அழுதுவிடுவாளோ? எல்லாம் தன்னால்தான் என்று அவளை பரிதாபமாக பார்க்க.... அவளோ தெனாவெட்டாக பேசவும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை அவரால்....

அவரின் சிரிப்பைப் பார்த்து மேலும் கோபம் வந்தது ...இரு இரு உன்ன அப்புறம் வச்சுக்கிறேன் என்று உதட்டை சுளித்து கீழே அனாதையாக விழுந்து கிடந்த தனது சூட்கேசை எடுத்தவள்... அப்பொழுதுதான் கவனித்தாள்... தன் சின்ன அண்ணன் போன வருட பிறந்த நாளுக்காக ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வாங்கித் தந்திருந்த சின்சான் கீ செயின் அறுந்து விழுந்து வெறும் வளைய கம்பி மட்டும்தான் தொங்கிக் கொண்டிருந்தது.

"டேய் தண்டபாணி...."என்று பல்லைக் கடித்து....

" இந்த ஹர்ஷினி கிட்டயே வேலைய காட்டுறியா...?"என்று உள்ளுக்குள் கொதித்தவள்...

அறுந்து இருக்கும் சின்-சான் பொம்மை கண்டிப்பாக வெளியே தான் விழுந்துகிடக்கும் என்று நினைத்து வேகமாக வெளி வாசலை நோக்கி ஓடினாள்....

கனியும் என்னமோ ஏதோ என்று வெளியே ஓடி வர.... வெளி வாசலில் காருக்கு மிக அருகில் விழுந்துகிடந்த சின் சான் பொம்மையை கையில் எடுத்தவள் "என் தல சின்சான் பொம்மைய அத்துப் போட்டியா.... கொய்யால இந்த ஹர்ஷினி யாருன்னு இங்கிருந்து போறதுக்குள்ள உனக்கு காட்டுறேன் டா..."
என்று வீர சபதம் எடுத்தவள் கனியை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள்.


ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டே ஹர்ஷினியின் பின்னால் சென்ற கனியை எதிர் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு ஜோடி கண்கள்......

ஹர்ஷாதித்தியன் உள்ளுக்குள் கனி எவ்வளவு வளர்ந்து விட்டாள் என்று வியப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க ...அவனின் பின்னால் வந்து நின்ற அவனின் அக்காவின் ஐந்து வயது புதல்வி அருணா அவனின் சட்டையை பிடித்து இழுத்து "மாமா சாக்லெட்" என்று கேட்டது.

தன் யோசனையில் இருந்து வெளியே வந்தவன்... "இருடா குட்டி எடுத்து தரேன்" என்று வீட்டிற்குள் நுழைந்தான்....

இங்கோ அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் முகம் கை கால் கழுவி இலகுவான இரவு உடையான ...ஒரு டீ சர்ட் மற்றும் பட்டியாலா சகிதம் வெளியே வந்தாள் ஹர்ஷினி.

சுகன்யாவின் தாய் தந்தை இருவரும் நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு வெளியூர் சென்றிருந்தனர்.... சுகன்யாவின் தங்கை கல்லூரியின் சுற்றுலாவிற்கு சென்றுள்ளதால் அவளும் வீட்டில் இல்லை....

அதனால் சுகன்யா தான் இரவு உணவை சமைத்து எடுத்து வைத்திருந்தாள். அவர்கள் வீடு போல் டைனிங் டேபிள் எல்லாம் அங்கு இல்லை. இலகுவான ஒரு நீண்ட பாய் ஒன்று விரிக்கப்பட்டிருக்க.... சமைத்த உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுகன்யா.

ஹர்ஷினி அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வந்து அமர ....சற்று நேரத்தில் அவள் அருகில் வந்து அமர்ந்தார் பூமணி அப்பத்தா...

ஹர்ஷினி அவரை முறைத்துக்கொண்டே அவர்களுக்கு எதிரே அதேபோல் விரிக்கப்பட்டிருந்த நீண்ட பாயில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளின் சிறுபிள்ளைத்தனமான கோபம் கூட அங்கிருந்து இருவரையும் ஈர்ப்பதாகவே இருந்தது ஒருவனைத் தவிர....

கார்த்திக் அப்பொழுதுதான் சாப்பிட வெளியே வந்தவன் தன் அப்பத்தா ஹர்ஷினியின் அருகே அமர்ந்ததையும் அவள் அங்கிருந்து உடனே நகர்ந்து அமர்ந்ததையும் பார்த்து தேவையில்லாமல் அவள் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டான்.

கோபத்தை அடக்கிக் கொண்டு கார்த்திக் அமைதியாக வந்து தன் அப்பத்தாவின் அருகே அமர.... சுகன்யா மூவருக்கும் பரிமாறிவிட்டு ஹர்ஷினியின் அருகே அமர்ந்து உணவு உண்டாள்.

சாதா இட்லி மற்றும் சட்னி தான்.... ஆனால் அதிலும் எத்தனை சுவை!!! தக்காளி சட்னி அவ்வளவு பிடித்திருந்தது ஹர்ஷினிக்கு.... இரண்டு இட்லியை சட்னியில் மூழ்க விட்டு அவள் சப்புக்கொட்டி சாப்பிடுவதைப் பார்த்து..... மற்றவர்களுக்கு கூட எப்பொழுதும் சாப்பிடுவதுதான் என்றாலும் அதன் சுவை அதிகம் ஆனது போல் ஒரு பிரம்மை....

"அடியேய் சுகா செமையா சமைக்கிற டி ....இப்படி சமைச்சா நானே உன்ன எங்க வீட்டுக்கு பார்சல் பண்ணி தூக்கிட்டு போயிருவேன்"என்று பாராட்ட ....

தோழியின் மனம் திறந்த பாராட்டில் சுகன்யாவின் முகம் மலர்ந்தது.

"என்ன விட என் அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க ஹர்ஷி... அதுவும் அம்மா வைக்கிற பிரியாணியும் கறி குழம்பும் அப்படி ஒரு ருசி" என்று மகிழ்ச்சியாக சொன்னாள் சுகன்யா.

"அப்படியா செம செம அவங்க வந்ததும் மொத வேலையா அத செஞ்சு கேக்கணும்" என்று உரிமையாக சொன்னாள் ஹர்ஷினி.

"அதெல்லாம் இருக்கட்டும் நீ சமைப்பியா பொண்ணு" என்று பூமணி அப்பாத்தா இடையில் புகுந்து ஹர்ஷினி இடம் கேட்க....

"என்னாது மீ சமைக்கிறதா... நான் சமைச்சு சாப்பிடுறவங்க டெட்பாடி தான் .... நெக்ஸ்ட் மீ மீன்பாடி வண்டியில ஜெயிலுக்கு கோயிங்... அப்பா அம்மா கம்மிங் ....அம்மா துரத்தி துரத்தி தொடப்ப கட்டயால அடிச்சுபையிங்... மீ அடி வாங்கிட்டு கத்திபையிங்.... மை எனிமிஸ் எல்லாம் சிரிச்சிபையிங்...." என்று தன் மனக்கண்ணில் கற்பனை செய்து பார்த்த ஹர்ஷினியின் முகம் வேப்பெண்ணையை குடித்தது போல் மாறியது.

ஓவர் இமேஜனேஷன் ஹர்ஷி என்று
தலையை குலுக்கி கொண்டவள்... தன் எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்க்க.....
அவன் வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்குவது போல் தெரிந்தது.


தனக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாது.... சாப்பிட மட்டும்தான் தெரியும் என்பது உண்மை என்றாலும் ... தன்னை பார்த்து சிரிப்பவன் முன் எப்படி சொல்வது என்று உள்ளுக்குள் குமைந்தவள்....
விக்கல் வருவது போல் தண்ணீர் குடித்துவிட்டு அப்பத்தாவிடம் பேச்சை மாற்றினாள்.....


அதை கார்த்திக் கவனித்தாலும் கவனிக்காதது போல் சாப்பிட்டுவிட்டு நகர்ந்தான்.

இங்கு ஹர்ஷா வீட்டில் அவன் சாப்பிட அமர அவனை சுற்றி சூழ்ந்த அமர்ந்த அவனின் அக்காமார்கள் அவன் மறுக்க மறுக்க தட்டை நிரப்பிக் கொண்டே இருக்க.... அழகேசன் வெறும் தட்டை உர்ரென்று பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அப்பொழுதுதான் அவனை கவனித்த ஹர்ஷா அவனை சுட்டிக்காட்ட அவனின் அக்கா கோமதி அழகேசனை பார்த்து "சாரி தம்பி உன்ன கவனிக்கல...." என்று ஹி ஹி அசடு வழிய சிரித்துக்கொண்டே அவனுக்கும் உணவு பரிமாற....
"ஆனா ஒன்னு இவன் மட்டும் வந்துட்டானா வேற யாரையும் உங்களுக்கு கண்ணுக்கு தெரியாதுக்கா.... "என்று உரிமையாக கோபித்துக்கொண்டு சாப்பிட்டான் அழகேசன்.


தங்கள் மகனை வெகு நாட்கள் கழித்து பார்த்தால் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி இருந்தனர் அவனின் பெற்றோர்கள்.....

ஜானகிராமன் கௌசல்யா இருவருக்கும் நான்கு குழந்தை செல்வங்கள்..... முதல் இரண்டும் பெண் குழந்தைகளாக பிறந்தனர் கோமதி... பூரணி இருவருக்கும் உள்ளூரிலேயே நல்ல குணமான மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்து குழந்தைகள் இருந்தன அடுத்தது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என இரண்டு குழந்தைகள்... ஹர்ஷா மற்றும் ஹர்ஷவர்தினி...

ஹர்ஷா என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரியம் அதிகம்... முக்கியமாக அவனின் அக்கா இருவருக்கும் அவன் தான் முதல் குழந்தை... வீட்டின் ஒரே ஆண் வாரிசு முடிசூடா இளவரசனைப் போல ஊருக்குள் வலம் வந்தவன்..... மூன்று வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்ததோ வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றவன் இன்றுதான் வந்திருக்கிறான் ...

மூன்று வருடங்களுக்கு இடையில் வீட்டினர் உடன் தொலைபேசி தொடர்புகள் மட்டுமே வைத்திருந்தான். ஒருவரைக்கூட சந்திக்க வரவும் இல்லை.... சந்திக்க விடவும் இல்லை.....

மறுநாள் புத்துணர்ச்சியுடன் விடிய.... தலையணையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து படுத்திருந்த ஹர்ஷினியை தட்டி எழுப்பினாள் சுகன்யா....

"அம்மா ப்ளீஸ்மா ....கொஞ்சநேரம்" என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள் அவள்....

"அடியே ஹர்ஷி நான் அம்மா இல்ல நான் சுகன்யா... நீதானே காலையில கோலம் போடுறத பார்க்கனும்னு சொன்ன..." என்று மீண்டும் தட்டி எழுப்ப ....

கொட்டாவி விட்டவாறே எழுந்து அமர்ந்து... தலையைச் சொரிந்த ஹர்ஷினி கண்களைக் கசக்கிக்கொண்டே கடிகாரத்தில் மணியை பார்த்து வாயைப் பிளந்தாள்....

"பாவி மிட் நைட்ல எழுப்பிவிட்டு என்னாடி பண்ற நீ.... போடி அங்கிட்டு" என்று மீண்டும் சரிந்து படுக்கப் போக....
"ஆல்ரெடி லேட் எப்பவும் நாலு மணிக்கு எழுந்துடுவேன்.... நேத்து நைட் உன்கூட பேசிட்டு தூங்க லேட்... சோ இன்னைக்கு அஞ்சு மணி ஆகிட்டு..... சீக்கிரம் எழும்பு" என்று அறையை விட்டு வெளியே வந்த சுகன்யா முற்றத்தில் இருந்த கிணற்றில் நீர் இறைக்க ஆரம்பிக்க.... அப்பொழுதுதான் முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்த ஹர்ஷினி இருண்டு கிடந்த வானத்தை அண்ணாந்து பார்த்து....
" இந்த நைட் டைம் யாராவது கோலம் போடுவாங்களா.... சன் லைட் தெரிஞ்ச அப்புறம் கோலம் போடலாமே சுகா" என்று கொட்டாவி விட்டு கொண்டே கேட்க....


"அப்படி இல்ல ஹர்ஷி காலையில சூரியன் வர்றதுக்கு முன்னாடியே வெளி வாசல் தெளிச்சு கோலம் போட்டு இருக்கணும்.... அதே மாதிரி சாயங்காலம் சூரியன் மேற்கே மறைந்த அடுத்த நிமிஷம் திரும்பவும் வெளி வாசல் தெளிச்சு கோலம் போடணும்..." என்று சொல்லிக்கொண்டே கதவை திறந்து விளக்கமாறு ஒன்றை தூக்கிக்கொண்டு வெளியே சென்றாள்....

"நீ சொல்ற விஷயம்லா எனக்கு தெரியாது பா... எனக்கு தூக்கம் தூக்கமா வருது ....கோலம் போடும்போது கரெக்டா கூப்பிடு சுகா" என்று சொன்ன ஹர்ஷினியின்
கண்களில் இன்னும் தூக்கம் மீதி இருக்க திண்ணையில் அமர்ந்து குட்டித்தூக்கம் போட ஆரம்பித்தாள்...


வாசல் தெளித்து விட்டு...
கோலப் பொடி டப்பாவை தூக்கிக்கொண்டு வந்த சுகன்யா ... தோளில் தட்டி கூப்பிட...
கண்விழித்தாள் ஹர்ஷினி...


சுகன்யா அழகாக ரங்கோலி கோலம் ஒன்றை போட்டு.... கலர் கொடுக்க... தூக்கம் பறந்து போய் அதை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷினிக்கு.... தானும் கலர் பொடியை தூவ ஆசை வர.... சுகன்யாவிடம் இருந்து கேட்டு வாங்கி எங்கே போடவேண்டும் என்று கேட்டுவிட்டு திட்டு திட்டாக கலர் பொடியை கொட்ட... சுகன்யா அவளின் தலையில் தட்டி ,
"அடியே ஹர்ஷி கலர் பொடியை தூவனும் இப்படி திட்டு திட்டா கொட்டக்கூடாது...." என்றவள் எப்படி போட வேண்டும் என்ற சொல்லிக் கொடுத்தாள்.


"சரிடி சரிடி ...."என்றவள் சிறிது நேரத்திலேயே எல்லா கலர் பொடியையும் சுகன்யா சொன்ன இடத்தில் அழகாக நிரப்பினாள்.
சுகன்யா அதற்கு வெள்ளை நிற பொடியால் அவுட்லைன் போட அழகான கோலம் ரெடி....


கோலம் போட்டு முடித்ததும்.... முற்றத்தில் இருந்து நகர்ந்து... கைவிரல்களை கேமரா போல் வைத்து போக்கஸ் செய்தவள்... "ஆனா ஒன்னு சுகா.... எங்க வீட்ல சாமி ரூம் முன்னாடி மட்டும்தான் கோலம் போட்டு இருக்கும் அதுவும் பெயிண்ட்ல .....ஹம்ம்...
ஆனா இங்க இதெல்லாம் டிஃபரண்டா இருக்கு .... படத்துலதான் இத மாதிரி பாத்துருக்கேன்.... இப்பதான் நேர்ல பாக்குறேன்...உண்மையில
நம்ம கையால கோலம் போட்டா எவ்வளவு சந்தோஷமா இருக்கு சுகா.... அதுவும் காலையிலேயே இவ்வளவு கலர்ஸ் பார்க்கும்போது மனசுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருக்கு ....இப்பவே சூப்பரா ஒரு சாங் போட்டு குத்தாட்டம் போடணும் போல இருக்கு..." தலையையும் கைகளையும் அப்படி இப்படி அசைத்து நின்ற இடத்திலேயே ஆடிக்கொண்டு கத்தி சொல்ல....


அக்கம்பக்கத்து வீடுகளில் வெளியே நின்ற நபர்களும் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்களும் எட்டி பார்ப்பது போல் தெரிந்தது.... ஏன் எதிர்த்த வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா அம்மா கௌசல்யா கூட அவளைத்தான் விநோதமாகப் பார்த்தார்.

"அச்சோ மானத்த வாங்குறாளே..." என்று தலையில் அடித்துக்கொண்ட சுகன்யா....

"என்னோட ஃப்ரண்ட் தான் ஊருக்கு புதுசு...." என்று பொதுவாக சொல்லி சமாளித்து விட்டு...
ஹர்ஷினியின் கைகளைப்பிடித்து இழுத்துக்கொண்டு நகர பார்க்க,


சரியாக அப்பொழுது அவர்கள் தெரு அம்மன் கோவிலில் ஆடி மாதம் என்பதால் காலை நேர பூஜைக்கு அம்மன் தயாராக இருப்பதை காட்டும் அடையாளமாக.... எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரலில் அம்மன் பாடல் ஒன்று ஒலிக்க ஆரம்பித்தது.


"அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதினில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா...."



பாடலைக் கேட்டதும் ஹர்ஷினியின் முகம் மலர்ந்தது...


"ஹேய் சுகா கோவில் போவமா ப்ளீஸ்டி..." என்று ஹர்ஷினி கேட்க....
"உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் பக்தி இல்லையே ஹர்ஷி..." என்று சுகன்யா அவளை சந்தேகமாக பார்த்தாள்....
"ஈஈஈஈ.... கோவில் பிரசாதம் எல்லாம் ரொம்ப டேஸ்டா இருக்கும்டி அதான்..." என்று பல்லைக் காட்டினாள் ஹர்ஷினி.
"உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது" என்று சிரித்த சுகன்யா.... "நைட் பூஜைக்கு போகலாம் ஹர்ஷி.... வீட்ல வேலை இருக்கும் அம்மா வேற இல்ல... நான் தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்...." என்றாள்.
"ஏய் சுகா காலையில பூஜைக்கே போவோம் டி நைட் ஆனா டயர்ட் ஆயிடுவேன் .... ப்ளீஸ் எனக்காக..." என்று பாவமாக கேட்டாள் ஹர்ஷினி.



"இப்பவேயா அண்ணா என்ன சொல்லு ன்னு தெரியல ...."
என்று தயங்கியவாறு சுகன்யா சொல்ல....


"அந்த கேன கிட்ட எதுக்கு கேட்கணும்" என்று மனதுக்குள் சலித்துக் கொண்டவள்....

"கோவில் போயிட்டு வந்ததும் நானே தண்டபாணி கிட்ட சொல்லிக்கிறேன்... என் செல்லம்ல... இப்போ கோவிலுக்கு கிளம்புவோம் டி..." என்று தோழியின் தாடையை பிடித்து ஆட்டி தாஜா செய்தாள்.


அதற்குமேல் மறுக்க மனம் வராமல் சுகன்யா சரி என்று தலையசைக்க "ஹேய் ஜாலி" என்று அங்கேயே துள்ளி குதித்து சிரித்தாள் ஹர்ஷினி.


அவ்வளவு நேரம் அவள் அடித்த லூட்டிகளை எதிர் வீட்டு மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷா....
" இந்த ராட்சசி கனிய போட்டு என்ன இம்ச பண்றாளோ? பாவம் கனி... எப்படி தான் சமாளிக்க சமாளிக்கப் போறாளோ... " என்று சிரித்துக் கொண்டே உள்ளறைக்குள் சென்றான்....



அங்கு அவனின் தங்கை ஹர்ஷவர்தினி கண்ணீர் வழிய கோபத்துடன் அவனுக்காக காத்திருந்தாள்...

ஹர்ஷினி சுகன்யா இருவரும் குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்பினர்.... பூமணி அப்பத்தாவும் எழுந்திருக்க... அவரும் அவர்களுடன் துணைக்கு வருவதாக கிளம்பினார்....

செல்வதற்கு முன்பு தன்னியல்பான குறும்புத்தனம் தலைதூக்க....
ஹர்ஷினி யாருக்கும் தெரியாமல் கார்த்திக் அறையின் வெளி கதவை தாழிட்டு விட்டாள்....



"எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட சின்-சான் கீ செயின் அறுத்து போட்டு இருப்பான்.... புல்டோசர்.... நா இங்க இருந்து போற வர உனக்கு டெய்லி பனிஷ்மென்ட் இருக்கு டா...இன்னைக்கு கோட்டா இது.... நாங்க வர்ற வரை ரூமுக்குள்ளேயே என்ஜாய் பண்ணு மவனே" என்று மனதிற்குள் அவனுக்கு வங்களம் காட்டிவிட்டு கோவிலுக்கு கிளம்பி விட்டாள்.


சிறிய கோவில் தான்... கோவிலின் முன் அரசமரம் அதனடியில் சிறிய பிள்ளையார் சிலை.... பெண்கள் சிலர் அரச மரத்தை சுற்றி கொண்டிருந்தனர்....

காலையிலேயே வீசும் அரசமர காற்றை சுவாசித்தால் பெண்களின் கர்ப்பப்பை பலப்படும் என்பது அக்கிராமத்தினரின் நம்பிக்கை.... பிள்ளை வரம் வேண்டும் பெண்கள் தவறாமல் காலையில் வந்து அரசமரத்தை சுற்றி சாமி கும்பிடுவார்கள்.

ஹர்ஷினி சுகன்யா இருவரும் பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு அரசமரத்தை சுற்ற பூமணி அப்பத்தா அவர் வயதில் இருந்த ஒருவருடன் வெளியவே அமர்ந்துவிட்டார்.

சுற்றி முடித்தவர்கள்
பயபக்தியுடன் மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு தலையில் கொட்டி கொண்டு கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர்...


அன்று காலை நேர பூஜைக்கு பாயாசம் வழங்கப்பட... சிறிய பாக்கு மட்டையில் அதை வாங்கிக்கொண்டு கோயிலின் எதிரே இருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்தனர்.

சில பெண்கள் தங்கள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க.... சிறிது நேரத்திலேயே எல்லா குழந்தைகளையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டாள் ஹர்ஷினி.....

பள்ளி தேர்வு முடிந்து விடுமுறை விட்டிருந்த சமயம் என்பதால் சிறுவர் சிறுமிகளிடம் இனி அவர்கள் விளையாடும் நேரம் எல்லாம் தன்னையும் அவர்களுடன் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள சொல்லி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்....

இன்னும் இவள் திருந்தவில்லை என்று....சுகன்யாவிற்கு சிரிப்புதான் வந்தது....

குழந்தைகள் அங்கிருந்து சென்றதும்... சுகன்யாவின் பக்கம் திரும்பிய ஹர்ஷினி மெதுவான குரலில், "சுகா இந்த ஊர்ல ஆதித்தியான்னு யாராவது இருக்காங்களா?" என்று சீரியசாக கேட்க...

இல்லையே என்று மறுப்பாக தலையசைத்த சுகன்யா... "அது சரி நீ எதுக்கு அத கேக்குற?" என்று மறு கேள்வி கேட்டாள்.


"அது ஒரு பெரிய விஷயம் சுகா அத அப்புறம் சொல்றேன்...." என்று பேச்சை மாற்றிய ஹர்ஷினி...

"ப்ச்ச்.... இன்னும் பத்து நாள்ல அந்த ஆதித்யாவை எப்படி கண்டு பிடிக்கிறது?விசாரிச்ச வரைக்கும் இந்த ஊரு தானே அந்த ஊர்.... அச்சோ தன்வீர் அங்கிள் கிட்ட வேற நான் கண்டுபிடிக்கிறேன்னு பில்டப் விட்டுட்டு வந்துட்டேனே பாவம் எனக்காக காத்திட்டு இருப்பார்"
என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்...



ஹர்ஷினி சுகன்யா பூமணி அப்பத்தா மூவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது கார்த்திக் ரூமின் மரத்தினாலான கதவு இரண்டாகப் பிளந்து உடைந்து கிடந்தது.....

"ஆத்தா மகமாயி கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள இப்படி ஒரு அபசகுணமா.... கதவு இப்படி உடைஞ்சு கிடக்கே"
என்று பூமணி அப்பத்தா பதறினார்.


சுகன்யா பயத்துடன் நின்று கொண்டிருக்க....
அவளின் அருகில் நின்ற ஹர்ஷினியோ....


உடைந்து கிடந்த அறைக்கதவை விழிகள் தெறித்து விழுந்துவிடும்போல் பார்த்து ....


"ஆத்தீஈஈஈஈஈஈஈஈ...
கதவுக்கே இந்த நிலைமைனா... அத பூட்டிட்டு போன எனக்கு?..." என்று மனதிற்குள் அலறினாள்....


தொடரும்....

ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி...:love:

போன பதிவில் ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்......:):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வைஷ்ணவி_ஸ்ரீ டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வெளியில தாழ்ப்பாள் போட்டதுக்கு கதவையே கார்த்திக் உடைச்சிட்டான்
நீ காலிதான் மவளே ஹர்ஷினி
ஹா ஹா ஹா
அப்போ ஹர்ஷாதித்தயனுக்கு சுகன்யாதான் ஜோடியா?
ஹர்ஷினி கார்த்திக்கின் ஜோடியா?
எதிர் வீட்டிலேயே ஆதித்தியா இருக்கிறான்னு ஹர்ஷினிக்கு தெரியலையே
அதுசரி
ஹர்ஷவர்த்தினி எதுக்கு அழுவுறாள்?
 
Last edited:

Shaloostephen

Active Member
Mandaya pavikanum Harshi, Harsha athiyanthan than nee thedi vantha mandayan.Aama nee yaen intha karthik mandaiku mani yadika vachuttu irruka.Vaishu dr super.
 

laksh14

Well-Known Member
ha
அத்தியாயம் 5

ஹர்ஷினியின் மரியாதை இல்லாத பேச்சில் கோபமாக கார்த்திக் வீட்டிற்குள் வர...
அவனின் அப்பத்தா பூமணியோ.... கனியைப் பார்த்து...
"என்னடி போன ஜென்மத்தில எனக்கு மாமியாரா இருந்த புள்ள தான்... இந்த ஜென்மத்துல உன்னோட சோக்காலி புள்ளையா..." என்று கேட்டு சிரிக்க ....


கனி அப்பாவியாக அவளின் அப்பத்தாவை பார்த்தாள். இருவருக்கும் நடுவில் பலியாடாக நின்றது அவள் தான்.... எப்பொழுதும்போல் பூமணி அப்பத்தா அவளைத் திட்ட ஹர்ஷினி பொங்கி விட்டாள்....

"ஹலோ கிழவி... உனக்கு மாமியாரு நானா... அவ்வளவு அதர பழசாவா நான் இருக்கேன்" என்று கேட்டுவிட்டு அவள் கண்களை சுருக்கி நகத்தை கடிக்க...

அவளைப் பார்த்து கேலியாக சிரித்தவர்....
"எந்த சீமை சிறுக்கி டி அப்படி சொன்னா... பேசுற பேச்செல்லாம் என் மாமியார் கணக்கா தான் இருக்கு... ஆனா நீ என் மாமியாரை விட மூத்தார் கணக்கால இருக்கே... என் மாமியார் 80 வயசுலயும் வெடுக்கு வெடுக்குன்னு இடுப்பை ஆட்டிகிட்டு ஐஸ்வர்யாராய் கணக்கா அங்கன இங்கன நடக்கும் அம்புட்டு இளசு... அதுமட்டுமா கண்டாங்கி சேலை கட்டி கரீனா சோப்ரா கணக்கால என் மாமியார் இருக்கும்... நீ என்னதான் ஆம்பள பேண்ட் சட்டை போட்டாலும் என் மாமியார் பக்கத்துல நிக்க முடியாதுடியே" என்று மேலும் ஹர்ஷினியை வம்பு இழுக்க....


"சூப்பர் பாட்டி சூப்பர் ... என்னால பண்ண முடியாதத நீங்க பண்ணிட்டீங்க..." என்று ஹர்ஷினியின் மனசாட்சி பாட்டி கூட டூயட் ஆட...

"கிரேட் கிரேட் ...இன்சல்ட் ஹர்ஷி இந்த கிழவிய சும்மா விடக்கூடாது" என்று பொங்கிய ஹர்ஷினி...

"இது ஆம்பள பேண்ட் சட்டை மாதிரி இருக்கா... இது குர்தி இது ஜெக்கின்ஸ்..."
என்று மூக்கு விடைக்க முறைத்துக் கொண்டே சொல்ல...


" நீ என்னதான் சொன்னாலும் இது ஆம்பள பையன் பேண்ட் கணக்கா தானே இருக்கு....
கனிய பாரு அழகா அடக்க ஒடுக்கமா தாவணி சட்டை போட்டு இருக்கா... நீயோ கையில்லாத ஒரு மேல் சட்டை போட்டுட்டு... கீழ ஆம்பள கணக்கா குழாய் துணிய மாட்டிக்கிட்டு நிக்குற" என்று மேலும் மேலும் பூமணி பாட்டி ஹர்ஷினியை வம்பிழுக்க....


"ஹேய் கிழவி என்ன ஓவரா பேசுற... பின் விளைவுகள் மோசமா இருக்கும்... பாத்துக்கோ" என்று ஹர்ஷினி பதிலுக்கு எகிரி கொண்டு நிற்க....

கார்த்திக் அவளின் சூட்கேஸை இழுத்துக்கொண்டு நடுக்கூடத்தில் பொத்தென்று போட்டான்.

மூவரும் அதிர்ச்சியுடன் திரும்ப... கார்த்திக் கடுமையான கோபத்துடன் ஹர்ஷினியிடம்...
"இந்த வீட்டில இருக்கிறதா இருந்தா... அப்பத்தா கிட்ட ஒழுங்கா மரியாதையா பேசு ... இல்லனா பெட்டி படிக்க தூக்கிட்டு உன் ஊருக்கே போய்டு... இங்க இருந்துட்டு உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு திரிஞ்ச வகுந்துடுவேன் வகுந்து... "
என்று கடுப்புடன் எச்சரித்துவிட்டு அவனது அறைக்குள் சென்று மறைந்தான்.


தன் அண்ணனின் இத்தகைய கோபத்தை எதிர்பார்க்காத கனி தன் தோழி பாவம் எவ்வளவு வருத்த படுவாள்... என்று நினைத்து கண்கள் கலங்க ஹர்ஷினியை பார்க்க.. அவளோ அசால்டாக அப்பத்தாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"ஏய் கிழவி உன் பேரன் கிட்ட சொல்லி வை.... தேவையில்லாம என்கிட்ட வம்புக்கு வந்தா ..அவ்வளவு தான் வகுந்துடுவேன் வகுந்து..." என்று அவனைப்போலவே தெனாவெட்டாக பேச பூமணி பாட்டி சிரித்துவிட்டார்.

அவருக்கும் பேரனின் கோபத்தைக் பார்த்து சற்று திகைப்பு தான்.... வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பெண் கலகலவென்று பதிலுக்கு பதில் பேசவும் அவருக்கும் வழக்காட ஒருத்தி கிடைத்த விட்டாள் என்று சந்தோஷமாகத்தான் அவளிடம் வம்பு செய்தார்.

ஆனால் தனது பேரனின் திடீர் கோபத்தில் திகைத்து இந்தப் பெண் வருத்தப்படுவாளோ? அழுதுவிடுவாளோ? எல்லாம் தன்னால்தான் என்று அவளை பரிதாபமாக பார்க்க.... அவளோ தெனாவெட்டாக பேசவும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை அவரால்....

அவரின் சிரிப்பைப் பார்த்து மேலும் கோபம் வந்தது ...இரு இரு உன்ன அப்புறம் வச்சுக்கிறேன் என்று உதட்டை சுளித்து கீழே அனாதையாக விழுந்து கிடந்த தனது சூட்கேசை எடுத்தவள்... அப்பொழுதுதான் கவனித்தாள்... தன் சின்ன அண்ணன் போன வருட பிறந்த நாளுக்காக ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வாங்கித் தந்திருந்த சின்சான் கீ செயின் அறுந்து விழுந்து வெறும் வளைய கம்பி மட்டும்தான் தொங்கிக் கொண்டிருந்தது.

"டேய் தண்டபாணி...."என்று பல்லைக் கடித்து....

" இந்த ஹர்ஷினி கிட்டயே வேலைய காட்டுறியா...?"என்று உள்ளுக்குள் கொதித்தவள்...

அறுந்து இருக்கும் சின்-சான் பொம்மை கண்டிப்பாக வெளியே தான் விழுந்துகிடக்கும் என்று நினைத்து வேகமாக வெளி வாசலை நோக்கி ஓடினாள்....

கனியும் என்னமோ ஏதோ என்று வெளியே ஓடி வர.... வெளி வாசலில் காருக்கு மிக அருகில் விழுந்துகிடந்த சின் சான் பொம்மையை கையில் எடுத்தவள் "என் தல சின்சான் பொம்மைய அத்துப் போட்டியா.... கொய்யால இந்த ஹர்ஷினி யாருன்னு இங்கிருந்து போறதுக்குள்ள உனக்கு காட்டுறேன் டா..."
என்று வீர சபதம் எடுத்தவள் கனியை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள்.


ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டே ஹர்ஷினியின் பின்னால் சென்ற கனியை எதிர் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு ஜோடி கண்கள்......

ஹர்ஷாதித்தியன் உள்ளுக்குள் கனி எவ்வளவு வளர்ந்து விட்டாள் என்று வியப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க ...அவனின் பின்னால் வந்து நின்ற அவனின் அக்காவின் ஐந்து வயது புதல்வி அருணா அவனின் சட்டையை பிடித்து இழுத்து "மாமா சாக்லெட்" என்று கேட்டது.

தன் யோசனையில் இருந்து வெளியே வந்தவன்... "இருடா குட்டி எடுத்து தரேன்" என்று வீட்டிற்குள் நுழைந்தான்....

இங்கோ அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் முகம் கை கால் கழுவி இலகுவான இரவு உடையான ...ஒரு டீ சர்ட் மற்றும் பட்டியாலா சகிதம் வெளியே வந்தாள் ஹர்ஷினி.

சுகன்யாவின் தாய் தந்தை இருவரும் நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு வெளியூர் சென்றிருந்தனர்.... சுகன்யாவின் தங்கை கல்லூரியின் சுற்றுலாவிற்கு சென்றுள்ளதால் அவளும் வீட்டில் இல்லை....

அதனால் சுகன்யா தான் இரவு உணவை சமைத்து எடுத்து வைத்திருந்தாள். அவர்கள் வீடு போல் டைனிங் டேபிள் எல்லாம் அங்கு இல்லை. இலகுவான ஒரு நீண்ட பாய் ஒன்று விரிக்கப்பட்டிருக்க.... சமைத்த உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுகன்யா.

ஹர்ஷினி அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வந்து அமர ....சற்று நேரத்தில் அவள் அருகில் வந்து அமர்ந்தார் பூமணி அப்பத்தா...

ஹர்ஷினி அவரை முறைத்துக்கொண்டே அவர்களுக்கு எதிரே அதேபோல் விரிக்கப்பட்டிருந்த நீண்ட பாயில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளின் சிறுபிள்ளைத்தனமான கோபம் கூட அங்கிருந்து இருவரையும் ஈர்ப்பதாகவே இருந்தது ஒருவனைத் தவிர....

கார்த்திக் அப்பொழுதுதான் சாப்பிட வெளியே வந்தவன் தன் அப்பத்தா ஹர்ஷினியின் அருகே அமர்ந்ததையும் அவள் அங்கிருந்து உடனே நகர்ந்து அமர்ந்ததையும் பார்த்து தேவையில்லாமல் அவள் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டான்.

கோபத்தை அடக்கிக் கொண்டு கார்த்திக் அமைதியாக வந்து தன் அப்பத்தாவின் அருகே அமர.... சுகன்யா மூவருக்கும் பரிமாறிவிட்டு ஹர்ஷினியின் அருகே அமர்ந்து உணவு உண்டாள்.

சாதா இட்லி மற்றும் சட்னி தான்.... ஆனால் அதிலும் எத்தனை சுவை!!! தக்காளி சட்னி அவ்வளவு பிடித்திருந்தது ஹர்ஷினிக்கு.... இரண்டு இட்லியை சட்னியில் மூழ்க விட்டு அவள் சப்புக்கொட்டி சாப்பிடுவதைப் பார்த்து..... மற்றவர்களுக்கு கூட எப்பொழுதும் சாப்பிடுவதுதான் என்றாலும் அதன் சுவை அதிகம் ஆனது போல் ஒரு பிரம்மை....

"அடியேய் சுகா செமையா சமைக்கிற டி ....இப்படி சமைச்சா நானே உன்ன எங்க வீட்டுக்கு பார்சல் பண்ணி தூக்கிட்டு போயிருவேன்"என்று பாராட்ட ....

தோழியின் மனம் திறந்த பாராட்டில் சுகன்யாவின் முகம் மலர்ந்தது.

"என்ன விட என் அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க ஹர்ஷி... அதுவும் அம்மா வைக்கிற பிரியாணியும் கறி குழம்பும் அப்படி ஒரு ருசி" என்று மகிழ்ச்சியாக சொன்னாள் சுகன்யா.

"அப்படியா செம செம அவங்க வந்ததும் மொத வேலையா அத செஞ்சு கேக்கணும்" என்று உரிமையாக சொன்னாள் ஹர்ஷினி.

"அதெல்லாம் இருக்கட்டும் நீ சமைப்பியா பொண்ணு" என்று பூமணி அப்பாத்தா இடையில் புகுந்து ஹர்ஷினி இடம் கேட்க....

"என்னாது மீ சமைக்கிறதா... நான் சமைச்சு சாப்பிடுறவங்க டெட்பாடி தான் .... நெக்ஸ்ட் மீ மீன்பாடி வண்டியில ஜெயிலுக்கு கோயிங்... அப்பா அம்மா கம்மிங் ....அம்மா துரத்தி துரத்தி தொடப்ப கட்டயால அடிச்சுபையிங்... மீ அடி வாங்கிட்டு கத்திபையிங்.... மை எனிமிஸ் எல்லாம் சிரிச்சிபையிங்...." என்று தன் மனக்கண்ணில் கற்பனை செய்து பார்த்த ஹர்ஷினியின் முகம் வேப்பெண்ணையை குடித்தது போல் மாறியது.

ஓவர் இமேஜனேஷன் ஹர்ஷி என்று
தலையை குலுக்கி கொண்டவள்... தன் எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்க்க.....
அவன் வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்குவது போல் தெரிந்தது.


தனக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாது.... சாப்பிட மட்டும்தான் தெரியும் என்பது உண்மை என்றாலும் ... தன்னை பார்த்து சிரிப்பவன் முன் எப்படி சொல்வது என்று உள்ளுக்குள் குமைந்தவள்....
விக்கல் வருவது போல் தண்ணீர் குடித்துவிட்டு அப்பத்தாவிடம் பேச்சை மாற்றினாள்.....


அதை கார்த்திக் கவனித்தாலும் கவனிக்காதது போல் சாப்பிட்டுவிட்டு நகர்ந்தான்.

இங்கு ஹர்ஷா வீட்டில் அவன் சாப்பிட அமர அவனை சுற்றி சூழ்ந்த அமர்ந்த அவனின் அக்காமார்கள் அவன் மறுக்க மறுக்க தட்டை நிரப்பிக் கொண்டே இருக்க.... அழகேசன் வெறும் தட்டை உர்ரென்று பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அப்பொழுதுதான் அவனை கவனித்த ஹர்ஷா அவனை சுட்டிக்காட்ட அவனின் அக்கா கோமதி அழகேசனை பார்த்து "சாரி தம்பி உன்ன கவனிக்கல...." என்று ஹி ஹி அசடு வழிய சிரித்துக்கொண்டே அவனுக்கும் உணவு பரிமாற....
"ஆனா ஒன்னு இவன் மட்டும் வந்துட்டானா வேற யாரையும் உங்களுக்கு கண்ணுக்கு தெரியாதுக்கா.... "என்று உரிமையாக கோபித்துக்கொண்டு சாப்பிட்டான் அழகேசன்.


தங்கள் மகனை வெகு நாட்கள் கழித்து பார்த்தால் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி இருந்தனர் அவனின் பெற்றோர்கள்.....

ஜானகிராமன் கௌசல்யா இருவருக்கும் நான்கு குழந்தை செல்வங்கள்..... முதல் இரண்டும் பெண் குழந்தைகளாக பிறந்தனர் கோமதி... பூரணி இருவருக்கும் உள்ளூரிலேயே நல்ல குணமான மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்து குழந்தைகள் இருந்தன அடுத்தது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என இரண்டு குழந்தைகள்... ஹர்ஷா மற்றும் ஹர்ஷவர்தினி...

ஹர்ஷா என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரியம் அதிகம்... முக்கியமாக அவனின் அக்கா இருவருக்கும் அவன் தான் முதல் குழந்தை... வீட்டின் ஒரே ஆண் வாரிசு முடிசூடா இளவரசனைப் போல ஊருக்குள் வலம் வந்தவன்..... மூன்று வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்ததோ வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றவன் இன்றுதான் வந்திருக்கிறான் ...

மூன்று வருடங்களுக்கு இடையில் வீட்டினர் உடன் தொலைபேசி தொடர்புகள் மட்டுமே வைத்திருந்தான். ஒருவரைக்கூட சந்திக்க வரவும் இல்லை.... சந்திக்க விடவும் இல்லை.....

மறுநாள் புத்துணர்ச்சியுடன் விடிய.... தலையணையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து படுத்திருந்த ஹர்ஷினியை தட்டி எழுப்பினாள் சுகன்யா....

"அம்மா ப்ளீஸ்மா ....கொஞ்சநேரம்" என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள் அவள்....

"அடியே ஹர்ஷி நான் அம்மா இல்ல நான் சுகன்யா... நீதானே காலையில கோலம் போடுறத பார்க்கனும்னு சொன்ன..." என்று மீண்டும் தட்டி எழுப்ப ....

கொட்டாவி விட்டவாறே எழுந்து அமர்ந்து... தலையைச் சொரிந்த ஹர்ஷினி கண்களைக் கசக்கிக்கொண்டே கடிகாரத்தில் மணியை பார்த்து வாயைப் பிளந்தாள்....

"பாவி மிட் நைட்ல எழுப்பிவிட்டு என்னாடி பண்ற நீ.... போடி அங்கிட்டு" என்று மீண்டும் சரிந்து படுக்கப் போக....
"ஆல்ரெடி லேட் எப்பவும் நாலு மணிக்கு எழுந்துடுவேன்.... நேத்து நைட் உன்கூட பேசிட்டு தூங்க லேட்... சோ இன்னைக்கு அஞ்சு மணி ஆகிட்டு..... சீக்கிரம் எழும்பு" என்று அறையை விட்டு வெளியே வந்த சுகன்யா முற்றத்தில் இருந்த கிணற்றில் நீர் இறைக்க ஆரம்பிக்க.... அப்பொழுதுதான் முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்த ஹர்ஷினி இருண்டு கிடந்த வானத்தை அண்ணாந்து பார்த்து....
" இந்த நைட் டைம் யாராவது கோலம் போடுவாங்களா.... சன் லைட் தெரிஞ்ச அப்புறம் கோலம் போடலாமே சுகா" என்று கொட்டாவி விட்டு கொண்டே கேட்க....


"அப்படி இல்ல ஹர்ஷி காலையில சூரியன் வர்றதுக்கு முன்னாடியே வெளி வாசல் தெளிச்சு கோலம் போட்டு இருக்கணும்.... அதே மாதிரி சாயங்காலம் சூரியன் மேற்கே மறைந்த அடுத்த நிமிஷம் திரும்பவும் வெளி வாசல் தெளிச்சு கோலம் போடணும்..." என்று சொல்லிக்கொண்டே கதவை திறந்து விளக்கமாறு ஒன்றை தூக்கிக்கொண்டு வெளியே சென்றாள்....

"நீ சொல்ற விஷயம்லா எனக்கு தெரியாது பா... எனக்கு தூக்கம் தூக்கமா வருது ....கோலம் போடும்போது கரெக்டா கூப்பிடு சுகா" என்று சொன்ன ஹர்ஷினியின்
கண்களில் இன்னும் தூக்கம் மீதி இருக்க திண்ணையில் அமர்ந்து குட்டித்தூக்கம் போட ஆரம்பித்தாள்...


வாசல் தெளித்து விட்டு...
கோலப் பொடி டப்பாவை தூக்கிக்கொண்டு வந்த சுகன்யா ... தோளில் தட்டி கூப்பிட...
கண்விழித்தாள் ஹர்ஷினி...


சுகன்யா அழகாக ரங்கோலி கோலம் ஒன்றை போட்டு.... கலர் கொடுக்க... தூக்கம் பறந்து போய் அதை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷினிக்கு.... தானும் கலர் பொடியை தூவ ஆசை வர.... சுகன்யாவிடம் இருந்து கேட்டு வாங்கி எங்கே போடவேண்டும் என்று கேட்டுவிட்டு திட்டு திட்டாக கலர் பொடியை கொட்ட... சுகன்யா அவளின் தலையில் தட்டி ,
"அடியே ஹர்ஷி கலர் பொடியை தூவனும் இப்படி திட்டு திட்டா கொட்டக்கூடாது...." என்றவள் எப்படி போட வேண்டும் என்ற சொல்லிக் கொடுத்தாள்.


"சரிடி சரிடி ...."என்றவள் சிறிது நேரத்திலேயே எல்லா கலர் பொடியையும் சுகன்யா சொன்ன இடத்தில் அழகாக நிரப்பினாள்.
சுகன்யா அதற்கு வெள்ளை நிற பொடியால் அவுட்லைன் போட அழகான கோலம் ரெடி....


கோலம் போட்டு முடித்ததும்.... முற்றத்தில் இருந்து நகர்ந்து... கைவிரல்களை கேமரா போல் வைத்து போக்கஸ் செய்தவள்... "ஆனா ஒன்னு சுகா.... எங்க வீட்ல சாமி ரூம் முன்னாடி மட்டும்தான் கோலம் போட்டு இருக்கும் அதுவும் பெயிண்ட்ல .....ஹம்ம்...
ஆனா இங்க இதெல்லாம் டிஃபரண்டா இருக்கு .... படத்துலதான் இத மாதிரி பாத்துருக்கேன்.... இப்பதான் நேர்ல பாக்குறேன்...உண்மையில
நம்ம கையால கோலம் போட்டா எவ்வளவு சந்தோஷமா இருக்கு சுகா.... அதுவும் காலையிலேயே இவ்வளவு கலர்ஸ் பார்க்கும்போது மனசுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருக்கு ....இப்பவே சூப்பரா ஒரு சாங் போட்டு குத்தாட்டம் போடணும் போல இருக்கு..." தலையையும் கைகளையும் அப்படி இப்படி அசைத்து நின்ற இடத்திலேயே ஆடிக்கொண்டு கத்தி சொல்ல....


அக்கம்பக்கத்து வீடுகளில் வெளியே நின்ற நபர்களும் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்களும் எட்டி பார்ப்பது போல் தெரிந்தது.... ஏன் எதிர்த்த வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா அம்மா கௌசல்யா கூட அவளைத்தான் விநோதமாகப் பார்த்தார்.

"அச்சோ மானத்த வாங்குறாளே..." என்று தலையில் அடித்துக்கொண்ட சுகன்யா....

"என்னோட ஃப்ரண்ட் தான் ஊருக்கு புதுசு...." என்று பொதுவாக சொல்லி சமாளித்து விட்டு...
ஹர்ஷினியின் கைகளைப்பிடித்து இழுத்துக்கொண்டு நகர பார்க்க,


சரியாக அப்பொழுது அவர்கள் தெரு அம்மன் கோவிலில் ஆடி மாதம் என்பதால் காலை நேர பூஜைக்கு அம்மன் தயாராக இருப்பதை காட்டும் அடையாளமாக.... எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரலில் அம்மன் பாடல் ஒன்று ஒலிக்க ஆரம்பித்தது.


"அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதினில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா...."



பாடலைக் கேட்டதும் ஹர்ஷினியின் முகம் மலர்ந்தது...


"ஹேய் சுகா கோவில் போவமா ப்ளீஸ்டி..." என்று ஹர்ஷினி கேட்க....
"உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் பக்தி இல்லையே ஹர்ஷி..." என்று சுகன்யா அவளை சந்தேகமாக பார்த்தாள்....
"ஈஈஈஈ.... கோவில் பிரசாதம் எல்லாம் ரொம்ப டேஸ்டா இருக்கும்டி அதான்..." என்று பல்லைக் காட்டினாள் ஹர்ஷினி.
"உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது" என்று சிரித்த சுகன்யா.... "நைட் பூஜைக்கு போகலாம் ஹர்ஷி.... வீட்ல வேலை இருக்கும் அம்மா வேற இல்ல... நான் தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்...." என்றாள்.
"ஏய் சுகா காலையில பூஜைக்கே போவோம் டி நைட் ஆனா டயர்ட் ஆயிடுவேன் .... ப்ளீஸ் எனக்காக..." என்று பாவமாக கேட்டாள் ஹர்ஷினி.



"இப்பவேயா அண்ணா என்ன சொல்லு ன்னு தெரியல ...."
என்று தயங்கியவாறு சுகன்யா சொல்ல....


"அந்த கேன கிட்ட எதுக்கு கேட்கணும்" என்று மனதுக்குள் சலித்துக் கொண்டவள்....

"கோவில் போயிட்டு வந்ததும் நானே தண்டபாணி கிட்ட சொல்லிக்கிறேன்... என் செல்லம்ல... இப்போ கோவிலுக்கு கிளம்புவோம் டி..." என்று தோழியின் தாடையை பிடித்து ஆட்டி தாஜா செய்தாள்.


அதற்குமேல் மறுக்க மனம் வராமல் சுகன்யா சரி என்று தலையசைக்க "ஹேய் ஜாலி" என்று அங்கேயே துள்ளி குதித்து சிரித்தாள் ஹர்ஷினி.


அவ்வளவு நேரம் அவள் அடித்த லூட்டிகளை எதிர் வீட்டு மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷா....
" இந்த ராட்சசி கனிய போட்டு என்ன இம்ச பண்றாளோ? பாவம் கனி... எப்படி தான் சமாளிக்க சமாளிக்கப் போறாளோ... " என்று சிரித்துக் கொண்டே உள்ளறைக்குள் சென்றான்....



அங்கு அவனின் தங்கை ஹர்ஷவர்தினி கண்ணீர் வழிய கோபத்துடன் அவனுக்காக காத்திருந்தாள்...

ஹர்ஷினி சுகன்யா இருவரும் குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்பினர்.... பூமணி அப்பத்தாவும் எழுந்திருக்க... அவரும் அவர்களுடன் துணைக்கு வருவதாக கிளம்பினார்....

செல்வதற்கு முன்பு தன்னியல்பான குறும்புத்தனம் தலைதூக்க....
ஹர்ஷினி யாருக்கும் தெரியாமல் கார்த்திக் அறையின் வெளி கதவை தாழிட்டு விட்டாள்....



"எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட சின்-சான் கீ செயின் அறுத்து போட்டு இருப்பான்.... புல்டோசர்.... நா இங்க இருந்து போற வர உனக்கு டெய்லி பனிஷ்மென்ட் இருக்கு டா...இன்னைக்கு கோட்டா இது.... நாங்க வர்ற வரை ரூமுக்குள்ளேயே என்ஜாய் பண்ணு மவனே" என்று மனதிற்குள் அவனுக்கு வங்களம் காட்டிவிட்டு கோவிலுக்கு கிளம்பி விட்டாள்.


சிறிய கோவில் தான்... கோவிலின் முன் அரசமரம் அதனடியில் சிறிய பிள்ளையார் சிலை.... பெண்கள் சிலர் அரச மரத்தை சுற்றி கொண்டிருந்தனர்....

காலையிலேயே வீசும் அரசமர காற்றை சுவாசித்தால் பெண்களின் கர்ப்பப்பை பலப்படும் என்பது அக்கிராமத்தினரின் நம்பிக்கை.... பிள்ளை வரம் வேண்டும் பெண்கள் தவறாமல் காலையில் வந்து அரசமரத்தை சுற்றி சாமி கும்பிடுவார்கள்.

ஹர்ஷினி சுகன்யா இருவரும் பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு அரசமரத்தை சுற்ற பூமணி அப்பத்தா அவர் வயதில் இருந்த ஒருவருடன் வெளியவே அமர்ந்துவிட்டார்.

சுற்றி முடித்தவர்கள்
பயபக்தியுடன் மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு தலையில் கொட்டி கொண்டு கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர்...


அன்று காலை நேர பூஜைக்கு பாயாசம் வழங்கப்பட... சிறிய பாக்கு மட்டையில் அதை வாங்கிக்கொண்டு கோயிலின் எதிரே இருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்தனர்.

சில பெண்கள் தங்கள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க.... சிறிது நேரத்திலேயே எல்லா குழந்தைகளையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டாள் ஹர்ஷினி.....

பள்ளி தேர்வு முடிந்து விடுமுறை விட்டிருந்த சமயம் என்பதால் சிறுவர் சிறுமிகளிடம் இனி அவர்கள் விளையாடும் நேரம் எல்லாம் தன்னையும் அவர்களுடன் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள சொல்லி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்....

இன்னும் இவள் திருந்தவில்லை என்று....சுகன்யாவிற்கு சிரிப்புதான் வந்தது....

குழந்தைகள் அங்கிருந்து சென்றதும்... சுகன்யாவின் பக்கம் திரும்பிய ஹர்ஷினி மெதுவான குரலில், "சுகா இந்த ஊர்ல ஆதித்தியான்னு யாராவது இருக்காங்களா?" என்று சீரியசாக கேட்க...

இல்லையே என்று மறுப்பாக தலையசைத்த சுகன்யா... "அது சரி நீ எதுக்கு அத கேக்குற?" என்று மறு கேள்வி கேட்டாள்.


"அது ஒரு பெரிய விஷயம் சுகா அத அப்புறம் சொல்றேன்...." என்று பேச்சை மாற்றிய ஹர்ஷினி...

"ப்ச்ச்.... இன்னும் பத்து நாள்ல அந்த ஆதித்யாவை எப்படி கண்டு பிடிக்கிறது?விசாரிச்ச வரைக்கும் இந்த ஊரு தானே அந்த ஊர்.... அச்சோ தன்வீர் அங்கிள் கிட்ட வேற நான் கண்டுபிடிக்கிறேன்னு பில்டப் விட்டுட்டு வந்துட்டேனே பாவம் எனக்காக காத்திட்டு இருப்பார்"
என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்...



ஹர்ஷினி சுகன்யா பூமணி அப்பத்தா மூவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது கார்த்திக் ரூமின் மரத்தினாலான கதவு இரண்டாகப் பிளந்து உடைந்து கிடந்தது.....

"ஆத்தா மகமாயி கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள இப்படி ஒரு அபசகுணமா.... கதவு இப்படி உடைஞ்சு கிடக்கே"
என்று பூமணி அப்பத்தா பதறினார்.


சுகன்யா பயத்துடன் நின்று கொண்டிருக்க....
அவளின் அருகில் நின்ற ஹர்ஷினியோ....


உடைந்து கிடந்த அறைக்கதவை விழிகள் தெறித்து விழுந்துவிடும்போல் பார்த்து ....


"ஆத்தீஈஈஈஈஈஈஈஈ...
கதவுக்கே இந்த நிலைமைனா... அத பூட்டிட்டு போன எனக்கு?..." என்று மனதிற்குள் அலறினாள்....


தொடரும்....

ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி...:love:

போன பதிவில் ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்......:):)
haha superrrr epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top