பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

Advertisement

amuthasakthi

Well-Known Member
ஒரு ஆள் அப்படி ஒரு ஆள் இப்படினு மலர் பிரவா எதிரெதிர் குணங்களோட இருக்கதும் நன்மையா தான் இருக்கும் போல...நேர்மையான ஆபிஸர் மாதிரி ஆளுகளுக்கு மலர் மத்தவங்களுக்கு பிரவாவோட பாணில டீலிங்:D
ம்ருணா விஷ்ணுக்கு பேபி வரப்போகுதா...நாம எவ்வளவு தான் ப்ளான் பண்ணாலும் எப்பவுமே அலர்ட்டா இருக்க முடியாதே;)
 

Surya Palanivel

Well-Known Member
All பிரச்சனைஸ் over..

மலர்னால தான் பிரவானால தான் தனியா இல்லாம இப்ப proper maintenance (கூட்டு முயற்சி) னால நல்ல report..

விஷ்ணு தெளிவா சொல்லிட்டான், management வேணாம் னு....

அட விஷ்ணு - மிருணாக்கு ஜூனியர்...


அடுத்த epi happy happy epi..
 

Kumarsaranya

Active Member
ஒருவழியாக பிரச்சினைய எல்லாம் பிரவா சமாளிச்சுட்டான் மலர் அன்று மருந்த திருடி காப்பாற்றிய உதவி இன்று தக்க சமயத்தில ட்ரஸ்ட காப்பாத்தியிருக்கு
 

Novel-reader

Well-Known Member
விஷ்ணு தன்னோட நிதானத்தோட செயல்பட்டு college நிலைமையை கொஞ்சம் கட்டுக்குள்ள கொண்டு வந்துட்டான். அருமை.

அடேய் பிரவா, பார்த்தியா பால் காசு பாலுக்கு தண்ணி காசு தண்ணியோடங்கிற மாதிரியே உனக்கு நடக்குது. Media, committee members, அரசியல்- வாதிகள்ன்னு எத்தனை பேருக்கு நீ தண்டம் அழ வேண்டி இருக்கு.

மலருக்கு அடுத்தபடியா கமிட்டி தலைவர் தான் பிரவாகன் கண்ணுல விரலை விட்டு ஆட்டிவைக்கறார். Super.
Yet as usual பிரவாகன் சமாளிச்சுட்டான். முன்னாடி மாதிரி just Mr. பிரவாகனா மட்டும் இருந்திருந்தால் அவனோட பாணியில டக்குனு சமாளிச்சுருப்பான். இப்ப
Mr.அன்புமலர் ஆனதால கொஞ்சம் நேர்வழியில போக வேண்டியிருக்கு.
ஒரு மிகப்பெரிய நிர்வாகத்தோட தலைவரா அவன் மலரிடம் சொன்ன practicality விஷயம் மறுக்க முடியாத கசப்பான உண்மை. இருந்தாலும் அதோட பாதிப்பு அப்பாவிகளுக்கு ஏற்படாமல் அவனும் அவனை சார்ந்தவங்களும் பார்த்துக் கொண்டா தான் சேதுராமன் அய்யாவோட நல்லநோக்கம் உயிரோட இருக்கும். அது சவாலான விஷயம் தான். ஆனாலும் பிரவாகன்-மலரால சாத்தியப்படக்கூடிய விஷயம் தான்.

டேய் தமன், நீ tension-ல உளறரியா இல்லை மலருக்கு தெரியப்படுத்த தெரிஞ்சே உளறுறியா? அவளையே மிரட்டி தான் கல்யாணம் செஞ்சான். நீ அவளுக்கு எதிர இன்னொருத்தரை மிரட்டற plan பத்தி பேசற? எப்படியோ உன் கலகம் நல்லதுல தான் முடிஞ்சுது.

மலர் இறுதியாக அந்த அதிகாரி கிட்ட பேசறது அதற்கு அவரோட பதில் அதெல்லாமே அருமை. So மலர் மேல அவருக்கு இருக்கும் நம்பிக்கை தான் பணத்தை விடக் கூடுதலா இப்ப பிரவாகனக்கு உதவி இருக்கு.

என்னது மிர்ணா pregnant-ஆ? இதுக்கு தான் அப்பவே பிரவாகன் உருப்படியா யோசனை சொன்னான். ரெண்டு பேரும் தனியாக இருக்க வேண்டாம்ன்னு. விஷ்ணு தான் ஒத்துக்கலை.
பல நாள் பிரிஞ்சு இருந்து பார்த்த excitement-ல calculation miss ஆகிடுச்சு. So outdoor shooting -க்கு வந்து indoor game விளையாடி ஜெயிச்சாச்சு ரெண்டு பேரும்.

இந்த மிர்ணா இதுக்கு ஏன் அழறா? உன் அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லுமா போதும். உனக்கு பிள்ளை பொறந்து அதுக்கு நீங்க
"Happy Birthday"- கொண்டாடற வரை நீ வேலை செய்யற படத்தோட ஹீரோ /director /producer இப்படி எத்தனை பேரை வேண்டும்னாலும் அன்பு மருத்துவமனையின் ICU -வில வெச்சு கவனிச்சுடுவான். நீயும் பொறுமையா போய் உன் இலட்சியத்தை தொடரலாம். பிள்ளையை பார்க்க தான் pediatrician இருக்காரே. பத்தாத்ததுக்கு பிரவாகன் அனுப்பும் care -takers இருப்பாங்க? Then why worry?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top