உதயா
Well-Known Member
நீங்கள் படிக்கிற அளவுக்கு நான் இந்த கதைய சீரியஸ் மோடுல படிக்கல இந்த கதையில் வருவது எல்லாம் ரியல் லைஃப்ல நடக்க சாத்தியம் இல்லை அதனால் இந்த கதை எனக்கு ஜஸ்ட் பன் தான்எழுதறப்பவே உங்களோட ஆதரவை (பிரவாகனுக்கு) எதிர்பார்த்து தான் எழுதினேன்.
எதுக்கும் இன்னொரு சந்தேகம் clear பண்ணுங்க.
ஒருவேளை இவன் அனுமானிச்ச படி அவங்க 10மணி வரைக்கும் தூங்காமல் காலையில் சீக்கிரமே எழுந்து இருந்தா, அதுக்கும் எப்படிடா 10நாள் கழிச்சு வந்த என் princess-ஐ, நடு ராத்திரி 2 மணிக்கு மேல தூங்கினவளை காலையில் 6மணிக்கே எழுப்பலாம்ன்னு கேட்டுருக்க மாட்டானே?
(அவனுக்கு அது எப்படி தெரியும்னு கேட்கறீங்களா? கேமரா வைக்காட்டியும், அவன் 10மணிக்கு மேல போக சொன்னா சமையகாரம்மா வீட்டுக்கு வந்த உடனே மிர்ணா சொன்னதை அவன் கிட்ட சொல்ல வேண்டி இருக்குமே. I mean report செய்தாகணுமே அவன்கிட்ட. அதுனால தான் சந்தேகம் )
அவன் பண்ணற வேலைக்கு அன்பரசி கூட அவனை காரித்துப்பிடுவாங்க. ஆனால் பாருங்க உங்களால மட்டும் தான் அவனோட "கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தை" புரிஞ்சுக்க முடியுது.
மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், மெடிக்கல் காலேஜ் எல்லாம் வச்சு நடத்துற ஒருத்தனுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கும். அவனை அவன் கிட்ட வேலை பார்க்குற பின்புலம் எதும் இல்லாத சாதாரண டாக்டர் எதிர்த்தா நிஜத்தில் கொன்னுட்டு கேஸே ஆகாமல் பண்ணிடுவாங்க . இப்படி கல்யாணம் எல்லாம் செய்ய மாட்டாங்க.இந்த கதை கற்பனைக்கு மட்டும் தான் சாத்தியம்.
இங்கு விஷ்ணு பிரவாவை எதிர்க்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் அவன் நல்லவன் லிஸ்ட்ல வந்துட்டான்.அவன் செய்யுற எல்லாமே சரி தான்.
ஒரு விருந்துக்கு வரல என்றதும் அவன் குடும்பம் மொத்தமும் எத்தனை கேள்வி கேட்காங்க . எல்லாருக்கும் பொறுமையா பதில் சொல்றான். அதே மாதிரி தான் மிருணா வீட்டில் இருந்து கேள்வி கேட்கிறான் அது மட்டும் ஏன் விஷ்ணுவுக்கு எரியுது .
விஷ்ணு குடும்பம் கேள்வி கேட்கிறதை மிருணா தப்பா நினைக்காத போது இவனுக்கு மட்டும் பிரவா பேசுறது தப்பா இருக்கு. அவன் குடும்பத்தை அவன் சமாளிக்கிற மாதிரி அவ அண்ணனை அவ சமாளிக்கட்டும் என்று சும்மா இருக்க வேண்டிய தானே..
பிரவா மிருணாவுக்கு சேர வேண்டிய சொத்தையும் தொழிலில் அவளுக்கான பங்கையும் தான் கொடுக்கிறான். அதை வாங்க கூடாது என்று சொல்ற அதிகாரம் விஷ்ணுக்கு கிடையாது. ஆனால் பொண்டாட்டி வாங்க கூடாது என்று சொல்றவன் அவன் குடும்பத்தையும் அதே மாதிரி அடக்கி வைக்கட்டும்.
சொத்துக்கு உரிமை உள்ள மிருணா இவன் உழைப்புல தான் வாழணும் ஆனால் உரிமை இல்லாத இவன் அப்பனும் அண்ணனும் பிரவா மூலம் வசதி வாய்ப்பை வாங்கி சொகுசா வாழலாம்.முதல்ல இவன் அப்பனும் அண்ணனும் பிரவா கூட பிஸ்னஸ் பண்ண கூடாது அவன் கிட்ட இருந்து எந்த பணமும் வாங்க விடாமல் செய்யட்டும். அதுக்கு பிறகு பிரவாகனுக்கு எதிரா பேசட்டும் அதுவரைக்கும் இவன் திருவாயை திறக்க கூடாது.
மலரை தவிர பிரவாகனை எதிர்த்து பேசுற யோக்கியதை யாருக்கும் இல்லை . அவ பேரை சொல்லி அவ குடும்பத்தில் யாரும் ஒரு ரூபாய் கூட பிரவாகன் கிட்ட லாபம் பார்க்கலை.
கீர்த்தி ஆயிரம் குறை சொல்றா ஆனால் அவ புகுந்த வீட்டு சொந்தம் அத்தனையும் பிரவா கிட்ட வாங்கி திங்குறதை தடுக்கல . மிருணாவும் அவ புகுந்த வீட்டை தடுக்க போறதில்லை. இவங்க எல்லாம் மலர் மாதிரி மாறட்டும். அப்புறம் கேள்வி கேட்கட்டும் .
ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். தன் புருஷன் பிரவாவோட ஹாஸ்பிட்டலை நிர்வாகம் பண்றதை அவன் பொண்டாட்டி மலர் தன்மானத்துக்கு இழுக்கா நினைக்காத போது விஷ்ணுவுக்கு மட்டும் ஏன் அவன் பொண்டாட்டியோட ஹாஸ்பிட்டல்ல நிர்வாகம் பண்றது தன்மான பிரச்சினையா தெரியுது .