பிள்ளைங்க கூடப் படுக்கிறது ஏன் கௌரிக்கு பிடிக்கவில்லை...முக்கால்வாசி நடுத்தர குடும்பங்களில் அப்படி தான் நடக்கிறது.
சாந்தி வந்தது தன்னிலை விளக்கம் தரவா இல்ல புதுப் பிரச்சனையை கொண்டு வந்திருக்காளா
நீங்க போன பதிவுலேயே நெருடலா இருக்குண்ணு எழுதியிருந்தீங்க..இந்தப் பதிவு படிச்ச பிறகு அது போயிடும்னு நினைச்சேன் ஆனா ஜாஸ்தியாயிடுச்சு போல..
யெஸ். நடுத்தர குடும்பங்களில் அப்படித் தான் நடக்குது..இங்கே கதையிலும் முதல்லே நாலு பேரும் ஒரே அறையிலே தான் தூங்கினாங்க..அப்புறம் தீபா மட்டும் தனியா படுக்க விருப்பம் தெரிவிச்சா..இது போல் குழந்தைங்க அவங்களா முயற்சி செய்யும் போது ஆதரவு கொடுக்கணும்..சிவாக்குப் பிடிக்கலைன்னாலும் கௌரி அதுக்கு ஆதரவு கொடுத்தா..தனியாப் படுத்துக்கிட்டது தீபாக்கு தைரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்திச்சு..அந்த மாற்றம் அவளுக்கு நல்லதா தான் இருந்திச்சு.. திரும்ப இவங்களோட படுக்கறது பின்னடவைன்னு கௌரி நினைக்கறா..அவ வேலைக்குப் போகறா..அந்த மாதிரி குடும்பங்கள்ளே எத்தனை சீக்கிரம் குழந்தைங்க தைரியமா, தனியா அவங்க வேலைகளைச் செய்ய கத்துக்கறாங்களோ அந்த அளவுக்கு கவலைக்கள் குறையும் அந்த அம்மாக்களுக்கு.அதே போல் பெரிய குழந்தையைப் பார்த்து தான் சின்ன குழந்தைங்க கத்துப்பாங்க..அதனாலே இப்போ தீபா செய்யறதைக் கொஞ்சம் வருஷம் கழிச்சு சூர்யா செய்வா...அதான் அவளுக்குப் பிடிக்கலை.
thanks for the comment..stay blessed..