அதிகார விளக்கம் :-
அவனுக்கும் அவளுக்கும் உண்டான காதல் வளர்ந்த கதை கூறுவது. அவளது காதல் குறிப்பை அவன் அறிந்து கொள்ளுதலை விளக்குவது. தலைமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, உள்ளம் கலந்து, உறவு மலர்வதைச் சொல்வது. அவர்களின் காதலுணர்ச்சி, பண்பியல் முதலியவற்றைப் புலப்படுத்துகின்றது. இருஉள்ளமும் ஒன்றுபடுதல் வற்புறுத்தப்படுகிறது.
நோய் உண்டாக்கவும் அதை தீர்க்கும் மருந்தாகவும் உள்ள இவளின் கண் மறைமுக நோக்கத்திற்கு சரிபாதியல்ல அதைவிட அதிகமானது. காதல் பயிர் வளக்கும் அவள் பார்வை நான் வானம் பார்க்கையில் என்மேலும் அவளை பார்க்கையில் மண் மேலும் இருக்கும். ஒரு கண் இமைத்து அவள் காதலை உணர்த்தினாள். அவளது சொல் உறவற்றதாக இருந்தாலும் என்னை விலகாமல் இருந்தது. விலகாத சொல்லும் விலகும் பார்வையும் புதிய குறிப்பாக இருந்தது. ஏதுமற்ற பொதுப்பார்வை காதலர் கண்ணுக்கு உண்டு. கண்ணும் கண்ணும் கலந்தால் வார்த்தைகள் பயன் அற்றுப் போகின்றது.