பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் :17. அழுக்காறாமை, குறள் எண்: 166 & 167.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 166:- கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள் :- பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 167:- அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பொருள் :- பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

அழுக்காறாமை அதிகாரம் பொறாமைப்படாதிருத்தலைச் சொல்லுவது. பொறாமை என்பது மன அழுக்கு அதாவது ஒருவனது உள்ளத்திலுள்ள மாசு குறித்தது. பிறர்க்குக் கிடைக்கும் பேறு கண்டு தாங்கிக் கொள்ள முடியாமை அழுக்காறாகும். பொறாமைக்குணம், மற்றக் குற்றங்கள் நிகழ வழி வகுப்பதால், அது முற்றிலும் களையப்பட வேண்டிய ஒன்றாகும். அழுக்காறு உடையவனை அக்குணமே அழித்துவிடும். அவனுக்கு நல்வாழ்வு இருக்காது; அவனைவிட்டுச் செல்வம் விலகிச் செல்லும்; அவனது சுற்றமும் அவனின்று நீங்கும்; உணவும் உடையும் இல்லாமல் போவான்; பொறாமை அவனை இருட்டுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பன இவ்வதிகாரச் செய்யுள்கள் தரும் செய்தி. பொறாமைக்காரனும் நன்றாகத்தானே இருக்கிறான், பொறாமையில்லாதவன் தேய்ந்தும் போகிறானே அதற்கு என்ன செய்வது? இதற்கு வள்ளுவர் கூறும் பதில்: கூட்டிக்கழித்துப் பார்த்தால் பொறாமையுடையார் செல்வம் பெருக்கியதும் இல்லை; அழுக்காறு இல்லாதவர் வளர்ச்சியில் குன்றியதாகவும் இல்லை என்பது. மாந்தர் அழுக்காறு இல்லாத இயல்பை ஒழுக்க வழியாகக் கொள்ள வேண்டும் என்பது இவ்வதிகார அறிவுரை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top