நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-28
சூட்டிங்... ஆரம்பித்த நாளிலிருந்து வாசு சுதாவை அவள் தாய் வீட்டில் விட்டுருந்தான்... காலையில் ஒன்பது மணிக்குதான் சூட்டிங் ஆரம்பிப்பதால் சுதா வாசுவுக்கு சமைத்துவிட்டுதான் தன் தாய் வீட்டிற்கு வருவாள்... இரவு வந்து வாசு வீட்டிற்கு கூட்டிச் செல்வான்..... வாசுவின் அப்பா அந்த தோப்போடு சில வயல்களையும் வாசுவுக்கு பிரித்து கொடுத்தார்.... முதல் இரண்டு நாள் சூட்டிங்கை பார்த்தவனுக்கு அது பிடிக்காமல் போகவும்.... அவன் வயலை போய் பார்த்து அடுத்து என்ன செய்யலாம்.....என்ற யோசனையில் இருந்தான்.... கண்ணன் விவசாய கல்லூரியில் படித்திருந்ததால் அவனிடம் உதவி கேட்கலாமா.... என்று யோசித்துக் கொண்டிருந்தான்.....
கண்ணனிடம் நேரில் பேசலாம் என்று நினைத்தவன்.... அன்று காலை கிளம்பிக் கொண்டிருக்க சுதா... இன்று தான் வீட்டிலேயே இருப்பதாக சொன்னாள்...... சூட்டிங் ஒரு வாரம் தங்களுடைய தோப்பில் நடந்தும் நாம ஒரு தரம்கூட பாக்காம இருக்க கூடாது என்று நினைத்தவள்.... அன்று வீட்டிலேயே இருந்தாள்.... வாசுவும் தான் சீக்கிரமே வீட்டுக்கு வருவதாக சொல்லியிருந்தான்...... சூட்டிங் ஆரம்பிக்கவும் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.... அது ஒரு கிராமத்து கதை... புதுமுகங்களை வைத்து எடுத்தார்கள்.... அந்த நடிகை ஒரு காட்சி எடுக்கவே பலமுறை நடிக்க வேண்டியதிருந்ததால் சுதாவுக்கே அலுத்து விட்டது......டைரக்டர்.... கண்ணனின் நண்பன் என்பதால் சுதாவை மரியாதையாகவே நடத்தினான்.... தயாரிப்பாளர் அங்கேயே ஒரு சேரில் அமர்ந்து கொண்டு..... படப்பிடிப்பை பார்த்தபடி சுதாவை எவ்வாறு வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்து கொண்டிருந்தார்.... அவருக்கு வயது 50 க்கு மேல் இருக்கும்...... இந்த பெண்........ டைரக்டர்க்கு வேண்டிய பொண்ணா இருக்காளே.... இவள என்ன சொல்லி நம்ம வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்து கொண்டிருந்தார்..... அவர் அந்த ஊரை சுற்றி பார்க்க போகும் போது வினோத்தும் நைசாக பேசி நட்பு கொண்டிருந்தான்.... அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் சுதா மேல் அவருக்கு ஆசை இருப்பதை கண்டு கொண்டான்.....
வாசுவும் கண்ணனை பார்த்து உதவி கேட்கவும்... கண்ணன் வாசுவை விவசாய அலுவலகத்துக்கு அழைத்து வந்து வேண்டிய உதவியை செய்து கொடுத்தான்.... இருவரும் நல்ல நட்புறவை வளர்த்துக் கொண்டிருந்தனர்.... நாட்கள் அதன் போக்கில் செல்ல..... அன்று மாலை வீட்டிற்கு தேவையான சில பொருட்களை எடுப்பதற்காக கண்ணன் தன் கடைக்கு கயலை கூட்டிச் செல்ல வந்தான்.......
சாவித்திரிதான் கயலை வெளியே அனுப்பி வைத்தார்....” ஏத்தா வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்காம கொஞ்சம் வெளிய போயிட்டு வாத்தா...”.
“இல்லத்த மழை வரமாதிரி இருக்கு..... இன்னொரு நாளைக்கு போறேன்த்த....”
கண்ணனோ...”. அதென்ன இன்னொரு நாளைக்கு இப்ப வா... வெளியில போயிட்டு வருவோம்...”
“ஏங்க இனிமே போய் டிரஸ் மாத்தனும்... எனக்கு புடிச்ச சீரியல் வேற முக்கியமான இடத்துல தொடரும்னு போட்டுட்டான்..... அத வேற பாக்கனும்ங்க....”
“அடிப்பாவி... புருசனோட வெளிய வர்றதவிட உனக்கு நாடகம் முக்கியமா போச்சா...வாடி” என்றபடி அவளை மாடிக்கு கூட்டிச் சென்றவன்...
“.இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ கிளம்பனும் புரியுதா...”.
“ம்ம்ம்.....” அவள் முனுமுனுத்தபடி கிளம்ப ஆரம்பிக்க....
“அங்க என்ன சத்தம்.....”
“ம்ம்ம்... ஒன்னுமில்லங்க...கிளம்புறேன்...” கைக்கு கிடைத்த ஒரு சுடிதாரை போட்டு கிளம்பியவளை..பின் இருந்து அணைத்தவன்...”நாம ஊருல இருந்து வந்து ஒரு வாரம் ஆச்சு..... நீ என்னடி என்னைய கண்டுக்காம திரியுற.......மச்சான மறந்துட்டியா.....”
“என்னங்க இப்புடி சொல்றிக.... பாவம் அத்த வழுக்கி விழுந்து நடக்க முடியாம செரமபட்டாங்கன்னு தானே கீழேயே இருந்து உதவி பண்ணுனேன்......”
“உதவி பண்ணுனது சரிதாண்டி அதுக்காக மச்சான கவனிக்கவே இல்லையே....” என்றபடி அவள் பின் கழுத்தில் முகம் புதைத்தான்.......
அவள் மேலிலிருந்து பவுடர் மனத்தோடு மஞ்சள் மனமும் தூக்கியது.......” நானும் இதே பவுடர தானே போடுறேன்.... ஆனா உன்கிட்ட மட்டும் தனி வாசம் வருதுடி.... அப்புடியே ஆள தூக்குது.....”.அவள் பின் கழுத்தில் இருந்து அவள் முன்புறமாக சென்றவன்... அவள் முன் கழுத்தில் முகத்தை புதைத்தான்.... முத்தமிட்டுக் கொண்டே மெதுவாக கிழே வரவும்....
“ஐய்யய்யோ... அடுப்புல பாலை வச்சேங்க... அடுப்ப ஆப்பண்ணேண்னு தெரியலயே.... விடுங்க..... போய் பாத்திட்டு வந்திருரேன்.....”
“ஏய்.... இம்சை கொஞ்சம் பேசாம இருடி..... ஊருல போய் ஒரு வாரம் இருந்த..... உன்னைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்தேன்... அம்மா கீழ விழுந்து ஒரு வாரமா நடக்க ரொம்ப செரம படுறாங்கன்னு.... மேலையே வராம கீழேயே இருக்க.... படுக்க கூட மேல வரல..... பகல்லயாச்சும் மேல வருவன்னு பாத்தா காலேஜ்...டியூசன்... நீ பாட்டுக்கு உன் வேலையை பாத்துக்கிட்டு திரிஞ்சா..... மனுசன் என்னதான்டி பண்ணுறது............ ஏய் மச்சான் பாவம்டி......... அப்பப்ப கொஞ்சம் கவனி....... இப்ப வெளியில போறோம் அதுக்காகதான் நானே ராமன கடையில வச்சிட்டு அஞ்சு மணிக்கே வந்திருக்கேன்....”
“அம்மாட்ட சொல்லிட்டேன் டியூசனுக்கு லீவுவிடச் சொல்லி.... இது என்ன டிரஸ்.... நல்லாவே இல்லை மரியாதையா .... இந்தா இந்த சேலையக் கட்டுற.... “என்றவன் ஒரு சேலையை கொடுக்க.....
“இதுவா... இது எனக்கு ரொம்ப பளிச்சுன்னு தெரியுமேங்க....”.
“பயவால்ல இதயே கட்டு......நாம சினிமாவுக்கு போயிட்டு லேட்டாத்தான் வருவோம்........ சீக்கிரம் கிளம்பு......”
“ஏங்க மழைவரமாதிரி இருண்டுகிட்டு வருது..... இன்னொரு நாளைக்கு போனா என்னங்க.....”
“வரவர... சொல்றதயே கேக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா......”
“அப்புடியெல்லாம் ஒன்னும் இல்லங்க.... ந்தா...கிளம்புறேன்.....” இருவரும் கிளம்ப வர வானமும் மழை வர தயாராக இருந்தது....
அத்தியாயம்-28
சூட்டிங்... ஆரம்பித்த நாளிலிருந்து வாசு சுதாவை அவள் தாய் வீட்டில் விட்டுருந்தான்... காலையில் ஒன்பது மணிக்குதான் சூட்டிங் ஆரம்பிப்பதால் சுதா வாசுவுக்கு சமைத்துவிட்டுதான் தன் தாய் வீட்டிற்கு வருவாள்... இரவு வந்து வாசு வீட்டிற்கு கூட்டிச் செல்வான்..... வாசுவின் அப்பா அந்த தோப்போடு சில வயல்களையும் வாசுவுக்கு பிரித்து கொடுத்தார்.... முதல் இரண்டு நாள் சூட்டிங்கை பார்த்தவனுக்கு அது பிடிக்காமல் போகவும்.... அவன் வயலை போய் பார்த்து அடுத்து என்ன செய்யலாம்.....என்ற யோசனையில் இருந்தான்.... கண்ணன் விவசாய கல்லூரியில் படித்திருந்ததால் அவனிடம் உதவி கேட்கலாமா.... என்று யோசித்துக் கொண்டிருந்தான்.....
கண்ணனிடம் நேரில் பேசலாம் என்று நினைத்தவன்.... அன்று காலை கிளம்பிக் கொண்டிருக்க சுதா... இன்று தான் வீட்டிலேயே இருப்பதாக சொன்னாள்...... சூட்டிங் ஒரு வாரம் தங்களுடைய தோப்பில் நடந்தும் நாம ஒரு தரம்கூட பாக்காம இருக்க கூடாது என்று நினைத்தவள்.... அன்று வீட்டிலேயே இருந்தாள்.... வாசுவும் தான் சீக்கிரமே வீட்டுக்கு வருவதாக சொல்லியிருந்தான்...... சூட்டிங் ஆரம்பிக்கவும் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.... அது ஒரு கிராமத்து கதை... புதுமுகங்களை வைத்து எடுத்தார்கள்.... அந்த நடிகை ஒரு காட்சி எடுக்கவே பலமுறை நடிக்க வேண்டியதிருந்ததால் சுதாவுக்கே அலுத்து விட்டது......டைரக்டர்.... கண்ணனின் நண்பன் என்பதால் சுதாவை மரியாதையாகவே நடத்தினான்.... தயாரிப்பாளர் அங்கேயே ஒரு சேரில் அமர்ந்து கொண்டு..... படப்பிடிப்பை பார்த்தபடி சுதாவை எவ்வாறு வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்து கொண்டிருந்தார்.... அவருக்கு வயது 50 க்கு மேல் இருக்கும்...... இந்த பெண்........ டைரக்டர்க்கு வேண்டிய பொண்ணா இருக்காளே.... இவள என்ன சொல்லி நம்ம வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்து கொண்டிருந்தார்..... அவர் அந்த ஊரை சுற்றி பார்க்க போகும் போது வினோத்தும் நைசாக பேசி நட்பு கொண்டிருந்தான்.... அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் சுதா மேல் அவருக்கு ஆசை இருப்பதை கண்டு கொண்டான்.....
வாசுவும் கண்ணனை பார்த்து உதவி கேட்கவும்... கண்ணன் வாசுவை விவசாய அலுவலகத்துக்கு அழைத்து வந்து வேண்டிய உதவியை செய்து கொடுத்தான்.... இருவரும் நல்ல நட்புறவை வளர்த்துக் கொண்டிருந்தனர்.... நாட்கள் அதன் போக்கில் செல்ல..... அன்று மாலை வீட்டிற்கு தேவையான சில பொருட்களை எடுப்பதற்காக கண்ணன் தன் கடைக்கு கயலை கூட்டிச் செல்ல வந்தான்.......
சாவித்திரிதான் கயலை வெளியே அனுப்பி வைத்தார்....” ஏத்தா வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்காம கொஞ்சம் வெளிய போயிட்டு வாத்தா...”.
“இல்லத்த மழை வரமாதிரி இருக்கு..... இன்னொரு நாளைக்கு போறேன்த்த....”
கண்ணனோ...”. அதென்ன இன்னொரு நாளைக்கு இப்ப வா... வெளியில போயிட்டு வருவோம்...”
“ஏங்க இனிமே போய் டிரஸ் மாத்தனும்... எனக்கு புடிச்ச சீரியல் வேற முக்கியமான இடத்துல தொடரும்னு போட்டுட்டான்..... அத வேற பாக்கனும்ங்க....”
“அடிப்பாவி... புருசனோட வெளிய வர்றதவிட உனக்கு நாடகம் முக்கியமா போச்சா...வாடி” என்றபடி அவளை மாடிக்கு கூட்டிச் சென்றவன்...
“.இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ கிளம்பனும் புரியுதா...”.
“ம்ம்ம்.....” அவள் முனுமுனுத்தபடி கிளம்ப ஆரம்பிக்க....
“அங்க என்ன சத்தம்.....”
“ம்ம்ம்... ஒன்னுமில்லங்க...கிளம்புறேன்...” கைக்கு கிடைத்த ஒரு சுடிதாரை போட்டு கிளம்பியவளை..பின் இருந்து அணைத்தவன்...”நாம ஊருல இருந்து வந்து ஒரு வாரம் ஆச்சு..... நீ என்னடி என்னைய கண்டுக்காம திரியுற.......மச்சான மறந்துட்டியா.....”
“என்னங்க இப்புடி சொல்றிக.... பாவம் அத்த வழுக்கி விழுந்து நடக்க முடியாம செரமபட்டாங்கன்னு தானே கீழேயே இருந்து உதவி பண்ணுனேன்......”
“உதவி பண்ணுனது சரிதாண்டி அதுக்காக மச்சான கவனிக்கவே இல்லையே....” என்றபடி அவள் பின் கழுத்தில் முகம் புதைத்தான்.......
அவள் மேலிலிருந்து பவுடர் மனத்தோடு மஞ்சள் மனமும் தூக்கியது.......” நானும் இதே பவுடர தானே போடுறேன்.... ஆனா உன்கிட்ட மட்டும் தனி வாசம் வருதுடி.... அப்புடியே ஆள தூக்குது.....”.அவள் பின் கழுத்தில் இருந்து அவள் முன்புறமாக சென்றவன்... அவள் முன் கழுத்தில் முகத்தை புதைத்தான்.... முத்தமிட்டுக் கொண்டே மெதுவாக கிழே வரவும்....
“ஐய்யய்யோ... அடுப்புல பாலை வச்சேங்க... அடுப்ப ஆப்பண்ணேண்னு தெரியலயே.... விடுங்க..... போய் பாத்திட்டு வந்திருரேன்.....”
“ஏய்.... இம்சை கொஞ்சம் பேசாம இருடி..... ஊருல போய் ஒரு வாரம் இருந்த..... உன்னைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்தேன்... அம்மா கீழ விழுந்து ஒரு வாரமா நடக்க ரொம்ப செரம படுறாங்கன்னு.... மேலையே வராம கீழேயே இருக்க.... படுக்க கூட மேல வரல..... பகல்லயாச்சும் மேல வருவன்னு பாத்தா காலேஜ்...டியூசன்... நீ பாட்டுக்கு உன் வேலையை பாத்துக்கிட்டு திரிஞ்சா..... மனுசன் என்னதான்டி பண்ணுறது............ ஏய் மச்சான் பாவம்டி......... அப்பப்ப கொஞ்சம் கவனி....... இப்ப வெளியில போறோம் அதுக்காகதான் நானே ராமன கடையில வச்சிட்டு அஞ்சு மணிக்கே வந்திருக்கேன்....”
“அம்மாட்ட சொல்லிட்டேன் டியூசனுக்கு லீவுவிடச் சொல்லி.... இது என்ன டிரஸ்.... நல்லாவே இல்லை மரியாதையா .... இந்தா இந்த சேலையக் கட்டுற.... “என்றவன் ஒரு சேலையை கொடுக்க.....
“இதுவா... இது எனக்கு ரொம்ப பளிச்சுன்னு தெரியுமேங்க....”.
“பயவால்ல இதயே கட்டு......நாம சினிமாவுக்கு போயிட்டு லேட்டாத்தான் வருவோம்........ சீக்கிரம் கிளம்பு......”
“ஏங்க மழைவரமாதிரி இருண்டுகிட்டு வருது..... இன்னொரு நாளைக்கு போனா என்னங்க.....”
“வரவர... சொல்றதயே கேக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா......”
“அப்புடியெல்லாம் ஒன்னும் இல்லங்க.... ந்தா...கிளம்புறேன்.....” இருவரும் கிளம்ப வர வானமும் மழை வர தயாராக இருந்தது....
Last edited: