நேசம் மறவா நெஞ்சம்-17Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
ஒரு 200 பணம் வேணும்னாக்கூட..... அம்மாட்டத்தானே கேப்போம்...... இவரு இப்புடி பொசுக்குன்னு 5000 ரூபாய குடுத்துருக்காரு..... ஆனா இவுக தம்பிக ரெண்டுபேரும் அண்ணன் சரியான கஞ்சம்.......காசே குடுக்கமாட்டாருன்னு சொன்னாங்க..... ஒரு வேள நம்மளக்கு டெஸ்ட் வைக்குறாரோ....... இருக்கும் அன்னைக்கு ராத்திரியே....எங்கிட்ட ஒன்னும் எதிர் பார்க்க கூடாதுன்னுதானே சொன்னாரு.....அப்ப இது நமக்கு கண்டிப்பா டெஸ்ட்டா தான் இருக்கும்........... என்று நினைத்தபடி...... காசை பீரோவிற்குள் வைக்கச் சென்றவள்..... வேணாம் அம்மாட்டயே குடுத்துருவோம்...... ஒரு கவரில் அந்த காசையும் அவளுடைய போனையும் ஒரு கவரில் போட்டு அவளுடைய அம்மாவிடம் கொடுத்தவள்.......



“அம்மா இத வச்சுக்கங்க...... நான் ஊருக்கு போகையில வாங்கிக்குறேன்..........”



“ஏதுடி………. இவ்வளவு காசு...........”



“அது அவுகதாம்மா.....என்னோட செலவுக்கு குடுத்துருக்காங்க...........”என்று கூறிச் சென்றாள்

காந்திமதியும் சகுந்தலாவும்..... ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள்.......” பரவால்லத்தே..... மாப்புள்ள செலவுக்கெல்லாம் பணம் கொடுக்குறாருன்னா நம்மக்கிட்ட காசு கேக்க கூடாதுன்னு தானே ......கொடுக்குறாரு.....அப்ப நம்ம கயலையும் நல்லா பாத்துக்குவாருன்னு நினைக்கிறேன்......”



“எனக்கு தெரியும் சகுந்தலா....... நம்ம கயலோட ......சின்னப்புள்ள குணத்துக்கு இந்த பையன்தான் பொருத்தமா இருப்பான்னு....... அவுக குடும்பத்தையே இந்தபுள்ளதான் வழி நடத்துது........நல்ல பொருப்பான்னா புள்ளதாத்தா.......நம்மபுள்ள ஏதாவது தத்துபித்துன்னு உளறாம இருக்கனும்...... ஊருக்கு போறதுக்குள்ள நல்ல புத்திமதியா.....நம்மபுள்ளைக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுத்தா.....”.

“சரித்தே......”



அங்கு கயல் ஊருக்கு செல்லவும்........ வீட்டில் ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்தது....சாவித்திரிக்கு .வீட்டில் இருந்த நாட்களில் கயல் அவர் பின்னாலேயே.....சுற்றிக் கொண்டிருப்பாள்....... அவர் என்ன வேலை செய்தாலும் அதை பிடிங்கி அவள் செய்வாள்.... வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் மாற்றி வைத்து வீட்டையே அழகாக்கி இருந்தாள்.......சமையலிலும் வகைவகையாக சமைத்து அசத்துவாள்........ தன்கூடவே ஏதாவது ........பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்...... இருப்பாள்....... அவள் வந்தபிறகுதான் வீட்டிற்கு தனி அழகே வந்ததுபோல இருந்தது..............



அப்போதுதான் வீட்டுக்குள் வந்த கண்ணன்.....”.என்னம்மா....... இப்புடி வந்து வாசல்ல உட்காந்துருக்கீங்க.........”



“அது ஒன்னுமில்லப்பா......... என் மருமக......... ஊருக்கு போனவுடனே ........வீடு என்னமோ மாதிரி இருக்குப்பா.......அந்த பொண்ணுவந்து பத்து நாளு இருக்குமா......மான்குட்டி மாதுரி துள்ளிக்கிட்டு இந்த வீட்டுக்கும் கொல்லைப்புறத்துள்ள இருக்குற அந்த கன்னுக்குட்டிக்கிட்டயும் ஒரு நாளைக்கு நூறு தவணையாவது.......போவா வருவா....... ம்ம்ம்.......... இப்ப வீடே கப்புசுப்புன்னு இருக்குப்பா........ என்ன இருந்தாலும் வீட்டுக்கு ஒரு பொம்பளப் புள்ள...... வேணும்பா........அப்பதான் அந்த வீடு மகாலெட்சுமி குடிகொண்ட வீடு மாதிரி இருக்கும்........ எனக்குத்தான் அந்த குடுப்பினை இல்லப்பா........ ஆனா........ உனக்காச்சும் ஒரு மக பொறக்கனும்........அந்த புள்ள இந்த வீடு பூராவும் துள்ளி ஒடுறத.. என்கண்ணோட பாத்துட்டன்னா..............அப்புறம்.........நான் செத்தாலும் மோட்சம்பா.........”



“ஏம்மா........ இப்புடியெல்லாம்.....பேசுறீங்க.......... நீங்க இன்னும் நூறு வருசம் நல்லா இருப்பீங்கம்மா....... முத்துவோட...... புள்ளயையும் தூக்கி கொஞ்சுவீங்க பாருங்க......”



“எனக்கு அம்புட்டு பேராசையெல்லாம் கிடையாதுப்பா........உன்னோட புள்ளய கண்ணார பாத்தாலே போதும்பா............”

தனக்கு ஒரு பெண்பிள்ளயா.............நினச்சுப்பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு........... அதுவும் கயலுமாதிரி இருந்தா நல்லாயிருக்குமுள்ள.......ம்ம்ம் இவ எப்ப என்னைய மனசார ஏத்துக்குவா............ அம்மாவாச்சும் மனசுல நினைச்சத வெளியில சொல்லிட்டாங்க... நாம போயி யாருகிட்ட சொல்லுறது......... என்று நினைத்தவன் அவளிடம் போனாவது பேசுவோம்........ போன் முழு ரிங்....... போய் கட்டானது..........கயல்தான் போனை சைலன்டில் போட்டு தன் அம்மாவிடம் கொடுத்து விட்டாளே..........



அடுத்தடுத்த நாட்களில் கயல் கண்ணனை மறந்து தன் குடும்பத்தாரோடும் அமுதாவோடும் பொழுதைப் போக்க......கண்ணனோ போன் செய்து போன் செய்து வெறுத்துப் போயிருந்தான்...........தினமும் காந்திமதி சாவித்திரிக்கு போன் செய்து விசாரிக்கும் போது கயலும் அப்பத்தாவின் போனிலேயே மாமியாருக்கும் முத்து ராமுவுக்கும் பேசியிருந்தாள்........தினமும் இரவு கண்ணன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்போது......கயலை பற்றி ஏதாவது பேசுவார்......முத்துவும் ராமனுமே........ அண்ணி.........இப்புடி சொன்னாங்க.... அப்புடி சொன்னாங்க........ என்று போனில் பேசியதை பற்றி .........சொல்வார்கள்.........

கண்ணனுக்கு ......ச்சே என்று வெறுப்பாக இருந்தது............ அப்ப இவ நம்ம நம்பர் வந்தா மட்டும் எடுக்கமாட்டாபோல.... ஆனா மத்தவங்ககிட்ட மட்டும் பேசுறா........ என்னைய வச்சுதானே.....அத்தே.......கொழுந்தனுங்க....... எல்லாம்........நான் வேணாமாம்..... ஆனா இவுக மட்டும் வேணுமாம்.............இருக்கு அவளுக்கு........இன்னும் ரெண்டு குடுக்கனும்...... (என்னப்பா......கண்ணா....அடியா......இல்ல ........முத்தமா......)எப்புடியும் நாளைக்கு நீ இங்க வந்து தானே ஆகனும்........பாவம் படிக்குற புள்ளன்னு பாத்தா........இருக்குடி உனக்கு.......என்று கயல் போன் எடுக்காததால் .....மனதுக்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான்.........



.ஆடி 18 ம் தேதியும் வர....கண்ணன் குடும்பத்தினரோடு வந்திருந்தான்..... வந்ததிலிருந்து கண்ணன் ஒரு வார்த்தைக்கூட கயலிடம் பேசவில்லை.......சகுந்தலா காப்பியை கயலிடம் குடுத்துவிட.......கண்ணனோ காப்பியை வாங்காமல்..........அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..............

“அன்னைக்கு ஊருக்கு போகயில உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன்............”



கயல் ஒருநிமிடம் யோசித்தவள்

“நீங்க என்ன சொன்னீங்க........முத்தம்தானே குடுத்துட்டு போனிங்க..........”



இவர்களையே கவனித்துக் கொண்டிருந்த ........தாமரையும் மல்லிகாவும் சிரிக்க ஆரம்பிக்க..........



கடுப்பில் இருந்த கண்ணன்........போச்சு.... என் மானமே போச்சு........என்று நினைத்து.... அவளை அங்கிருந்த ரூமுக்குள் அழைத்துச் சென்றவன்.... கோபத்துடன் “ஏண்டி.....நான் ஊருக்கு போனவுடனே போன் பண்ணுறேன்னு சொன்னேன்ல........”.



“ஆமா.....சொன்னீங்க.......ஆனா நீங்கதான் போனே பேசலயே..........”

“உன்னோட போன் எங்க.......அத எடு...........”.

போனா.......அது அம்மாட்டல்ல இருக்கு....... என்று சென்று வாங்கிவந்தவள்......அதை ஆன்பண்ணி பார்க்க.......150 மிஸ்டுகால்கள்......வந்திருந்தன..........

“ஏங்க உங்க போன்ல பேலன்ஸ்..... இல்லயா......வெறும் மிஸ்டுகாலா குடுத்திருக்கீங்க...........”

.” ம்ம்ம்ம் என்தலை எழுத்து......நீயெல்லாம் காலேஜ்க்கு போறேன்னு வெளியில சொல்லிராத.........போன் ரிங்முழுசா போய் கட்டானாலும் மிஸ்டு காலுன்னு தானே வரும்........”



“அதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க......... என்னோட போன் எடுக்கலனா....... எங்க வீட்டுல வேற யாருக்காச்சும் போன் பேச வேண்டியதுதானே.........இதுக்கெல்லாம் கோபமா......... ஆனா,இது வேற........உங்களுக்கு ஏன்மேல என்ன கோபம்னு நான் கண்டுப்புடிச்சுட்டேன்.........”



“இந்தாங்க......”.

“இது என்ன.......”.



“நீங்க என்னோட செலவுக்கு குடுத்த காசு........”.



“அத உன்னோட செலவுக்கு தானே குடுத்தேன்...........”

“இத எப்புடி செலவழிக்காம வச்சிருக்கேன் டெஸ்ட் பண்ணத்தானே...........குடுத்தீங்க........ எப்புடி...............நான் டெஸ்டில பாஸ்பண்ணிட்டேனா................”



இவளை என்னதான் செய்யுறது..........................அப்போது அருணா வந்து “அக்கா…… மாமா……. உங்கள எல்லாரும் கூப்புடுறாங்க........... அப்புறம் வந்து தனியா பேசிக்குங்குவீங்களாம்.......”என்று சொல்லிவிட்டு ஒட...........



இருவரும் வெளியே வந்தபோது.........சுதாவும் கடுப்புடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள்................



இனி...............................................?
தொடரும்.....
nice
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்........ அடுத்த பதிவு...... போட்டுட்டேன்பா...... போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி...... இது என்னோட முதல் கதைங்குறதால படிக்கிறவங்க ஏதாவது கருத்து பதிவு செய்ங்க ப்ளீஸ்..... .நீங்க கமெண்ட்ஸ் போட்டாத்தான் நான் கதை நல்லா எழுதுறேனா இல்லையான்னு...எனக்கே.....தெரியவரும்......கமெண்ட்ஸ் போட மறக்காதீங்க.......ப்ரண்ட்ஸ்.

....
கயலுக்கு மொட்டும் அவளோட
புருஷன் அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சுசுசுசுசு
ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்தான்=ல
அதுவும் பேமிலி பேக்கு, பெருசு
நீங்க எனக்கு ஒரு குச்சி ஐஸாவது
வாங்கி கொடுத்தீங்களாப்பா,
பிரியா டியர்?
உங்க பேச்சு கா
ஒரு குச்சி ஐஸ் கூட வாங்கித்
தராத இவியளுக்கு நாமோ
எதுக்கு கமெண்ட்ஸ் போடணும்,
பிரியா டியர்?
இதுக்கு ஒரு நல்ல ஞாயத்தை
நீங்களே சொல்லுங்க, பிரியா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top