தன் ஆத்திரத்தை அடக்க துப்பில்லை அவளை மட்டும் நல்லா அடக்கறான்.
அவ தம்பி இடத்துல இவனோட மாமா இருந்தால் இப்படி அவரை வெளிய போக சொல்லி இருப்பானா? வயசுல சின்னவனா இருந்தாலும் ரகு மட்டும் தானே இப்ப திருவுக்காக, பிறந்த வீட்டு மனுஷனா பேச முடியும். அதெல்லாம் இந்த மடையனுக்கு புரியாதா?
இவனை மாதிரி செல்லமா வளர்ந்த ஒத்த குரங்கையெல்லாம் கட்டினா இப்படித்தான் அவஸ்தை படணும். அவனுங்களுக்கு உடன் பிறப்போட அருமை, உரிமை, தன் உடன் பிறப்பின் கஷ்டத்தை பார்த்து அவர்களுக்கு ஏற்படும் துடிப்பு எதுவுமே புரியாது. எனக்கு மட்டும் தான் எதுலயும் முதல் உரிமை என்கிற possessiveness தான் ஜாஸ்தியா இருக்கும்.
தூக்கம் வரலைன்னா மறுபடியும் factory - க்கே போய் வேலை பாரு. உன்னை அவ சாப்பிட தான் வர சொன்னா, தூங்க இல்லை.