நீ இருக்கும் நெஞ்சம் இது

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே நல்லா இருக்கு, கிருஷ்ணா டியர்
ஸ்ரீ ராமகிருஷ்ணாதான் ஹீரோவா?
காலேஜ் புரொபஸரின் ஹீரோயினை சந்திக்க ஆவலாய் காத்திருக்கிறேன்
அப்புறம் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடைவெளி, கமா, கொட்டேஷன் லாம் கொடுங்க
அப்போத்தான் படிக்க நல்லாயிருக்கும், கிருஷ்ணா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
“என்ன தவம் செய்தனை யசோதா" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க "தாயே யசோதா" என்று இன்னொரு குரல் ஒலித்தது.
அந்த குரலுக்கு சொந்தக்காரன் ஸ்ரீ ராமகிருஷ்ணன் என்கின்ற கிருஷ்
அந்த குரலை கேட்டு யசோதா அலறியடித்துக் கொண்டு வந்தார்.

"என்னடா கண்ணா"
"என்ன ஆச்சு? "
"அம்மா உண்மைய சொல்லு எனக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணன் பெயர் வைத்ததற்கு காரணம் நீ யசோதா என்பதால்தானே".
"இல்லடா கண்ணா ஜோசியர் சொன்னார்"
"அதனால வெச்சேன்"
"சரி ரைட்டு விடு"
"எனக்கு பசிக்குது போய் டிபன் எடுத்து வைமா".
"அப்பா எங்கம்மா?"
"அப்பா வாக்கிங் போயிருக்காரு"
"இன்னிக்கு என்னம்மா டிபன்? "
"வெண்ணை போட்ட நான்"
"அம்மா நிறுத்து"
"நிறுத்திட்டேன்"
"என்னம்மா"
"நீதாண்டா பேச்சை நிறுத்த சொன்ன"
"அதுக்கு நான் பன்னீர் பட்டர் மசாலான்னு சொல்ல வேண்டியதுதானே? "
"அது என்ன வெண்ணை போட்ட நான் என கடுப்பேத்துகிறாய்".
அவன் முறைத்து பார்த்தான்.
"அம்மா என்ன கடுப்பு ஏத்த இதெல்லாம் சொல்ற"
"அப்படி இல்லடா கண்ணா" என்று சொல்லிவிட்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

இந்த அம்மா ஜகஜ்ஜால கில்லாடி.
"அப்பாக்கு"
"அப்பாக்கு என்னம்மா டிபன்?" "அவருக்கு சுகர் டா"
"சரி மா
போய் டிபன் எடுத்து வை"
"சரி வா ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்"
"அப்பா முடிச்சிட்டு வந்து சாப்பிடுவார்"
சாரி சாரி குடிப்பார்"
அம்மாவும் மகனும் சாப்பிட்டு கொண்டிருக்க வாக்கிங் சென்றிருந்த பிரபாகரன் வந்து கொண்டிருந்தார்
"யசோதா, யசோதா" என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தார்

"அம்மா உங்க லவ்வர் வந்துட்டார்
ஒரு வயசு பையன் முன்னாடி உங்க ரொமான்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்கு"
"என்னடா ரொமான்ஸ்ஸை கண்ட நீ" "சரி போ"
"எனக்கு காலேஜூக்கு லேட் ஆகுது"
"ஃபர்ஸ்ட் நீ கிளம்பு"
"நடத்துங்க"
"நடத்துங்க"
"போடா போய் பசங்களுக்கு ஒழுங்கா கிளாஸ் எடு"
சிரித்துக் கொண்டே நகர்ந்தான்.

அவன் வேறு யாருமல்ல.
அவன் சாதாரண காலேஜ் ஸ்டுடென்ட் அல்ல.
அவன் காலேஜ் புரபசர்
அதுவும் IIT புரபசர் “வாசுதேவ கிருஷ்ணன்“
வீட்டுக்கு மட்டுமே கிருஷ்ணன்.
வெளியே வெறும் ராம்.

அவன் பெயருக்கு ஏற்றாற்போல் கம்பீரமும், அறிவும், விவேகமும் கொண்டவன்.
உதாரணத்துக்கு தண்ணீரைப் போல.
தண்ணீர் எப்படி பாத்திரத்துக்கு ஏற்றாற் போல் வடிவத்தை மாற்றிக் கொள்கிறதோ அது போல் அவனும் இடத்திற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்வான்.

அம்மா அப்பாவிற்கு கிருஷ்.
காலேஜில் ராம்
அப்படி என்றால் ராம் என்றால் பிரசித்தி.

இவன் பாடம் எடுத்தால் மாணவர்களின் கவனம் முழுவதும் இவன் எடுக்கும் பாடத்தில் இருக்கும்.
மாணவர்களின் கவனத்தை சிதற விடாமல் அழகாக பாடம் நடத்துவது ஒரு கலை.
அந்தக் கலையில் கைவரப் பெற்றவன் நம் நாயகன்

"அம்மா அக்கா வாசுகி வரல"
"இல்லடா கண்ணா அடுத்த வாரம் வரேன் சொன்னா".
"சரிம்மா"
"பார்த்து போய்ட்டு வாடா கண்ணா" செல்லும் மகனையே பெருமை பொங்க பார்த்துக்கொண்டிருந்தார், யசோதா.

இப்படி வரணும்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top