நீ இருக்கும் நெஞ்சம் இது …18

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
கண்மணி குளித்துவிட்டு மெலிதான கரை வைத்த “மேஜெண்ட கலர் புடவையை” கட்டி முடிக்கவும். சிந்து வந்து வரவும், சரியாக இருந்தது.

உனக்கு “இந்த கலர் ரொம்ப நல்லா இருக்கு கண்மணி” என்று சொல்லிவிட்டு, வா ரெடி ஆகலாம், பயப்படாத “ரொம்ப ஓவரா மேக்கப் போட மாட்டேன், சும்மா லைட்டா டச்சப் தான்” என்று சொல்லிவிட்டு, கண்மணியே தயார்படுத்தி க முடித்துவிட்டு ,”கிருஷ்ணா பிளாட் தான் போ” என்று சொல்லிவிட்டு சிரிக்கவும்.

கண்மணிக்கு இருந்த குழப்பத்தில் அவள் எதுவும் சொல்லாமல் குனிந்து கொள்ள, பயம் என்று நினைத்துக்கொண்டு, பயப்படாத கண்மணி என் தம்பி ரொம்ப நல்லவன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள் .

அவள் பின்னோடு வந்த, யசோதா, கண்மணியை பார்த்து புன்னகைத்தார். எதையும் மனசுல நினைக்காத கண்மணி. எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம், எனக்கு என்னன்னு சரியா தெரியல, இப்போ நீ கிருஷ்ணாவையும், உன் வாழ்க்கையும் மட்டும் தான் மனசுல வச்சுக்கணும். மத்ததெல்லாம் நான் சரி பண்றேன் என்று சொல்லிவிட்டு. சிந்துவை அழைத்து, கிருஷ்ணா ரூமுக்கு அழைச்சிட்டு போ, என்று சொல்லி சென்றுவிட்டார்.

கிருஷ்ணா ரூமுக்கு வந்த கண்மணி முதலில் கேட்டது கிருஷ்ணாவின் செல் ரிங்டோன் இசைத்த இந்த பாடல்தான்

“மன மன மன மெண்டல் மனதில்

லக்க லக்க லக்க பொல்லா வயதில்

டக்க டக்க கொட்டும் இசையில

ஓ கே என் கண்மணி மடியில்” அவளை பார்த்துக்கொண்டே செல்போனை கட் செய்தவன் அவளை நோக்கி வரவும், கண்மணி சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள். என்ன கண்மணி “என்னை ஒட்டிகருத்துக்கு பதிலா, சுவரோடு சுவராக ஓட்டுகிற” என்று சொல்லவும், அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தவள், அப்படியே நின்றுவிட்டாள். என்ன கண்மணி? இன்னைக்கு ஃபுல்லா என்ன பாக்க முடிவு பண்ணிட்டியா.

எனக்கு மட்டும், அது மட்டும் பத்தாது கண்மணி, என்று சொல்லவும் என்ன பண்ண போறீங்க? என்று பயத்தோடு கேட்கவும். அங்க வந்து கட்டிலில் உட்கார்ந்தா “பிரக்டிகல் கிளாஸ்” எடுத்துடுவேன், என்று சொல்லவும் என்று “ஆ” என்று வாய் பிளந்து நின்றாள்.

இந்த “கேப்பை யூஸ் பண்ணி” அவளை இடுப்பில் கையை கொடுத்து, தூக்கி சென்று கட்டிலில் உட்கார வைத்தான். அவள் பயத்தை உணர்ந்தவன், கொஞ்சம் டைம் கொடுப்போம், என்று முடிவு செய்துவிட்டு ,அதேசமயம், அவனுக்கும் “சில கன்பூஷன் இருந்தது, அதை கிளியர் பண்ணிட்டு எந்த குழப்பமில்லாமல் வாழ்க்கையில் ஸ்டார்ட் பண்ணுவோம்” அவன் முடிவு எத்தனை நாள் என்று அவனுக்கே தெரியவில்லை. இன்னும் கண்மணி அதே போல் அப்படியே உட்கார்ந்து இருக்கவும

என்ன இவ “சிலை மாதிரி இருக்கா” இவ நம்பல பார்த்து, பார்த்தே “டெம்ப்ட்பண்ணிடுவா” போல கண்மணி, என்று அவள் தோளை தொடவும், சுயநினைவுக்கு வந்தவள். என்ன என்றாள்? உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லவும், அவள் முகம் குழப்பத்தை காட்டியது.

நீ மண்டபத்துல நடந்தத வச்சு அக்காவ தப்பா நினைக்காத கண்மணி. ப்ளீஸ் அவர் ரொம்ப நல்லவ, என்னனு தெரியல இப்ப இப்படி” பிஹேவ் பண்றா” நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன் கொஞ்சம் டைம் கொடு என்று சொல்லிவிட்டு அவள் கலங்கிய முகத்தை பார்த்தான்.

இப்படி பார்க்காத கண்மணி உனக்கு என்று சொல்லிவிட்டு, அவளை இறுக அணைத்துக் கொண்டான்.அவளிடமிருந்து எந்தவித பிரதிபலிப்பும் இல்லாமல் போகவே அவளை விட்டான்.

என் மேல கோவமா கண்மணி, என்று கேட்கவும் இல்லை என்று தலையாட்டினாள். அவளுடைய உணர்வுகளை புரிந்து கொண்டவன், அவளிடமிருந்து சிறிது தள்ளி உட்கார, அவன் கையை பிடித்துக் கொண்டவள், என் மேல கோபமா என்று கேட்கவும், எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்று கேட்கவும்.

அவனும், அவளிடம் இதைத்தான் கேட்க நினைத்தான். இப்பொழுது, அவள் கேட்கும் மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தான். இருந்தாலும் ,”ஒரு ஃபர்ஸ்ட் நைட்ல, ஒரு கிஸ் கூட வாங்காம போனா” வரலாறு நாளைக்கு நம்மள பத்தி என்ன பேசும் என்று நினைத்தவன்.

கண்மணி இடம், ஓகே கண்மணி, நீ சொன்ன மாதிரி டைம் எடுத்துக்கலாம. ஆனா, ஒன்னே ஒன்னு என்று கேட்கவும். என்ன என்றாள்? ஒரே ஒரு கிஸ் மட்டும் கொடுத்திருக்கிறேன், என்று சொல்லிவிட்டு “பச்சக் என்று லிப் லாக்” செய்துவிட்டான். அவளா, அவள் என்ன ஏது என்று உணரும் முன், இவன் முத்தம் கொடுத்து விட, சிறிது நேரம் கழித்து, விலகியவன் “தேங்க்ஸ் என்று கண்ணடித்துவிட்டு” அவள் ஏதும் கேட்பதற்கு முன் விலகி அமர்ந்து கொண்டான்.

அவளுக்கு வெட்கத்திலும், கூச்சத்திலும், அவன் முகத்தை பார்க்கவே முடியவில்லை. அவள் இயல்பாக மாற்ற, சரி கண்மணி, நான் கீழ படுத்துக்கிறேன், நீ மேல படுத்துக்கோ என்று சொல்லவும். என்னது என்று “அட நான் கட்டிலுக்கு மேலே சொன்ன மா. நீ என்ன நெனச்ச என்று கேட்கவும்? அவன் வேண்டுமென்றே பேசுகிறான், என்று புரிந்து கொண்டவள், அவனை முறைக்க , பரவால்ல பொண்டாட்டி நம்ப ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை என்று நினைத்துக்கொண்டு.

தலைகாணி, போர்வையோடு கீழே படுத்துக் கொண்டான், சரி கண்மணி, எப்படியும் எனக்கு தூக்கம் வர போறது இல்ல. அதுக்கு” நம்ம ரெண்டு பேரும், நம்ப ரெண்டு பேரும் என்று பதிலுக்கு,அவள் கேட்கவும்” கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு சொன்னேன்.

நீ வேற ஏதாவது தப்பா நினைச்சுக்காத, என்று சொல்லிவிட்டு கீழே படுத்துக் கொண்டான், மேலே படுத்து இருந்த கண்மணி என்று குரல் கொடுத்தான். கட்டிலில் கவிழ்ந்து படுத்து ,அவனை எட்டிப்பார்த்த, கண்மணி என்ன என்று கேட்டாள் ?...

உனக்கு பெண் குழந்தை பிடிக்குமா? ஆண் குழந்தை பிடிக்குமா? என்று கேட்க. அவன் சொல்லவும் “பேச்சு திசை மாறுவதை உணர்ந்தவள்” எனக்கு தூக்கம் வருது, என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.,

டேய் கிருஷ்ணா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, இருந்த மனநிலை என்ன ?இப்ப, இருக்க மனநிலை என்ன? விட்டா கொஞ்ச நேரம் கழிச்சி, நம்ப கட்டில் மேல ஏறி படுத்துவோம் போல இருக்கு. கிருஷ்ணா ஸ்டடி என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு தூங்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“மன மன மன மென்டல் மனதில்

லக்க லக்க லக்க பொல்லா வயதி

டக்க டக்க கொட்டும் இசையில்

ஓகே என் கண்மணி மடியில்” என்று அவன் செல்லில் வைத்த ரிங்டோன் இப்பொழுது சத்தமாக ஒலிக்க விட்டான்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top