நாள்பட்ட நோய்களுக்கான முதல் முத்திரை

Advertisement

Eswari kasi

Well-Known Member
நாள்பட்ட நோய்களுக்கான முதல் முத்திரை

உடல் என்பது ஓர் அற்புதமான இயந்திரம். ஒவ்வொரு செல்லின் உள்ளேயும் , ஒவ்வொரு வினாடியும் பலநூறு வேதியல் வினைகள் (Chemical Reactions) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு உள்உறுப்பும் இடைய றாது இயங்கிக் கொண்டிருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த இயக்கங்களும், வினைகளும் ஒரு கணம் கூட நில்லாது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

நாம் உண்ணும் உணவு பல்வேறு வேதியல் வினைகளுக்கு உட்பட்டு, செரிமானம் ஆகி, பின்னர் சக்தியாக மாற்றப்படுகிறது. நமது சுவாசம் என்ற செயலை எடுத்துக்கொண்டால் காற்றிலுள்ள பிராணவாயு உள்ளே இழுக்கப் பட்டு நூரையீரல் எனும் சிறு இரத்த நாளங்களின் வழியாக சென்றடைகிறது. பல வேதியல் வினைகளுக்கு இந்த பிராணவாயு ஒரு முக்கியத்தேவையாக உள்ளது.

எந்த ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போதும் அதிலிருந்து சில கழிவுப் பொருட்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது. அதுபோன்றே எந்த ஒரு இயக்கம் தொடர்ந்து நடைபெறும் போது சில கழிவுப் பொருட்கள் நிச்சயம் உருவாகும். தொழிற்சாலைகளில் இவ்வாறு மிஞ்சும் கழிவுப்பொருட்களை புகையாகவும், கழிவு நீராகவும் வெறியேறி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.

நமது உடலில் பல்வேறு உற்பத்திகளும் இயக்கங்களும் இடையறாது நடந்துகொண்டிருப்பதால் பல்வேறு வகையான கழிவுப் பொருட்களும் இடையறாது உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இவை நாம் வெளிவிடும் மூச்சுக்காற்று, வியர்வை, சிறுநீர், மலம், ஆகியவற்றின் வழியாக வெளியேறுகின்றன. உடலில் உருவாகும் மிக முக்கியமான கழிவுப்பொருட்கள் என கீழ்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.

* கரியமில வாயு (கார்பன்- டை - ஆக்சைடு)

* யூரியா, அம்மோனியா கிரியாட்டினின்

* உண்ட உணவில் செரிமானம் ஆகாத எச்சங்கள்

இவற்றுள் கரியமில வாயு நமது சுவாசத்தின் மூலம் வெளியேறுகிறது. யூரியா, அம்மோனியா, கிரியாட்டினின் போன்றவை சிறுநீரின் மூலமும், சிறிய அளவில் வியர்வையின் வழியாகவும் வெளியேறுகிறது. உண்ட உணவின் எச்சங்கள் மலம் வழியாக வெளியேறுகிறது.

இவை அனைத்தும் மனிதனின் உடலில் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களின் உடலிலும் ஆதிகாலம் தொட்டே நடந்துவரும் இயற்கையான நிகழ்வுதான்.

ஆனால் நாகரிகம் வளர வளர மனித உடலில் கழிவுப் பொருட்களின் தேக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

* உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்கள்

* உணவின் சுவையைக் கூட்டுவதற்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோ, குளுட்டின், சர்க்கரை, உப்பு போன்ற பொருட்களால் அதிக அளவில் கழிவுப் பொருட்கள் உடலில் உருவாகி, தங்குகின்றன.

* உணவுப் பண்டங்களில் உணவு கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் (pre- Servatives).

* காய்கற்கள், தானியங்கள், பழங்கள் ஆகியவற்றின் மேற்பகுதியில் தங்கி நிற்கும் பூச்சிதொல்லிகள், ரசாயன உரங்கள் ஆகிய வற்றின் எச்சங்கள்.
என பலவிதமான வேதிப் பொருட்களும் நமது நாகரீக உணவில் நாம் அறிந்தோ, அறியாமலோ கலந்து இருக்கிறது.

இவை தவிர நமது வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் காரணமாகவும் உடலில் பலவிதமான கழிவுகள் தங்கி விடுகின்றன.

* போதைப் பொருட்கள், புகையிலை, மது ஆகியவற்றைத் தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு அவற்றிலுள்ள பல நச்சுப் பொருட்களும் உடலில் சிறிது சிறிதாகச் சேர்ந்து தங்கி விடுகின்றன.

* நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், உண்ணும் உணவு என அனைத்துமே மாசு பட்டதாக மாறியுள்ளன. இந்த மாசுகளும் உடலில் தங்கிவிடுகின்றன.

* நாம் உட்கொள்ளும் மருந்துகள்கூட உடலில் பல வேதியல் மாற்றங்களை அடைந்து கழிவுப் பொருட்களை உருவாக்கும். அவற்றில் பெரும்பகுதி உடலால் வெளியேற்றப்பட்டுவிடுகிறது என்றாலும் கூட சிறிய அளவில் அந்த கழிவுப் பொருட்களும் உடலில் தங்கி நிற்கின்றன.

ஆங்கில மருந்துகளால் மட்டுமே இத்தகைய நிலை ஏற்படும் என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆயுர்வேத, சித்த மருந்துகளும் இதற்கு விதிவிலக்கல்ல! நாள்பட்ட நோய்களுக்கு தொடர்ந்து எந்த மருந்தை உண்டு வந்தாலும் அவற்றின் எச்சங்களும், கழிவுகளும் உடலில் தங்கிவிடுகின்றன.

இவ்வாறு உடலில் தங்கி நிற்கும் கழிவுப் பொருட்களே பல நோய்கள் உருவாகக் காரணமாகிவிடுகின்றன. இப்படி கழிவுப் பொருட்கள் உடலில் தேங்கிவிடுவதிலிருந்து எந்த மனிதனும் தப்பிவிட முடியாது.

உடல் நலத்தைப் பேணவோ அல்லது இருக்கும் நோய்களை அகற்றுவோ முத்திரைப் பயிற்சிகளைத் துவங்கும் முன்னர், எற்கெனவே உடலில் பல வருடங்களாக தேங்கி நிற்கும் கழிவுகளையும் நச்சுப் பொருட்களையும் முதலில் வெளியேற்றி யாக வேண்டும் அதற்கான ஓர் எளிய முத்திரையை இப்போது காணலாம்.

அழுக்கை அகற்ற பலவழிகள் உள்ளன. துணிகளில் உள்ள அழுக்கை நீரில் கழுவி அகற்றலாம். தூசி, தும்புகள் போன்ற அழுக்குகளை வாதி (காற்று) அகற்ற முடியும். கிராமப்புறங்களில் பாத்திரங்களில் இருக்கும் அழுக்கை அகற்ற உவர் மண் கொண்டு தேயப்பார்கள் (நிலம்) பஞ்சபூதங்களின் இந்த மூன்று பூதங்களாலும் அழுக்கை அகற்ற முடியும். ஆனால் நெருப்பு எனும் பஞ்ச பூதமே அழுக்குகளை அகற்றும் மிக சக்தி வாய்ந்த பூதமாகி நெருப்புக்கு எதிரெ எந்த அழுக்கும் தங்கி நிற்க முடியாது! முற்றிலுமாக எரித்து, அகற்றி, புடம் போட்டுவிடும்.

நமது உடலிலும், மனதிலும் தங்கியிருக்கும் அழுக்குகளை நெருப்பு எனும் பஞ்ச பூதத்தின் துணையோடு அகற்றுவதே இந்த தூய்மைப்படுத்தும் முத்திரையாகும்.

செய்முறை :

* பெருவிரலின் நூனிப் பகுதியால் மோதிர விரலின் கீழ் பகுதியை (மூன்றாவது கோடு இருக்குமிடம்) மெதுவாகத் தொடவும்.

* மெல்லிய அழுத்தம் போதும்.

* இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.

* சுவாசம் சீராக இருக்கட்டும்.

அமரும் முறை :

* வசதியாக தரையில் அமர்ந்து கால்களை குறுக்காக மடக்கிக் கொள்ளவும். முடிந்தவர்கள் பத்மானத்தில் அமர்ந்தும் செய்யலாம் .

* தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தும் செய்யலாம். பாதங்கள் இரண்டும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

* அமர்ந்து செய்ய முடியாத நோயாளிகள் கால்களை நீட்டி, மல்லாக்க படுத்துக்கொண்டும் செய்யலாம்.

எவ்வளவு நேரம்?

* ஒரு நாளில் 15 அல்லது 20 நிமிடங்கள் செய்யலாம் . உபவாசம் இருந்து உடலை தூய்மைப்படுத்தும் போது ஒரு நாளில் மூன்று முதல் நான்கு முறை 20 நிமிடங்கள் வீதம் செய்யலாம்.
IMG-20181119-WA0001.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top