கார்த்தி மஹாவை கேட்ட கேள்விகள் சரிதான். ஆனால் வார்த்தைகள் குமரனை காயப்படுத்தாமல் இருக்கட்டும். கட்டாய கல்யாணம் செய்தாலும் அவளுக்காக எவ்வளவு யோசிக்கிறான் ; செய்கிறான் . அவர்கள் இப்போது நல்ல புரிதலுடன் , நேசத்துடன் இருக்கிறார்கள். அது மாறக்கூடாது. ப்ரியா மாதிரி அரை குறை படிப்போடு நிறுத்தாமல் கார்த்திகா படித்து முடித்து நல்ல வேலையில் அமர வேண்டும். நிச்சயம் குமரன் அதை நடத்திக்காட்டுவான். அவளையும் குழந்தையையும் பூ போல தாங்குவான் . கண்ணுக்குள் வைத்து காப்பாற்றுவான் . இவர்களது தயவு தேவையே இல்லை.