ஏம்மா ஜமுனா உன் புருஷன் கையை ஒரு ortho டாக்டர் கிட்ட காட்ட வேண்டாமா? உன் கட்டிப்பிடி வைத்தியமே போதுமா?
யுவராஜ் உங்கூட வாழ்ந்த காலத்துல பல நாள் long distance relationship தான். உடனே குழந்தை. இந்த காலக்கட்டத்தில்
அவன் உன்னை புரிஞ்சுச்சுக்கிற அளவுக்கு எங்க நிதானத்துல இருந்தான்? கேசவன் உண்டுபண்ணிய பிரச்சனையால ஒன்னு tension - ஆ இருப்பான். இல்லைனா உங்கப்பா பேச்சால கோவத்துல இருப்பான். இதெல்லாத்தையும் குறைக்க உன்னோட மோகத்தில் கரைஞ்சான். காலம் கடந்துன்னாலும் இப்பத்தான் அதெல்லாம் பற்றி யோசிக்கிறான். அதனால அவனுக்கு நீ சொல்லாமலே தானா புரியலையென்று வருத்தப்படாம வெளிப்படையாக நீ எதிர்பார்த்ததை - எதிர்பார்ப்பதை புரியவை. அவனுக்குத் தேவை உனது நிரந்தர அரவணைப்பு. நீ இப்படி தற்காலிகமா கொடுக்குற ஆறுதல் குருடனுக்கு ஒரு நாள் மட்டும் கண்பார்வை வந்தால் எப்பிடி ஏக்கம் கூடுமோ அது போலத்தான்.