Hi friends....
Good Evening.... Oru kutty teaser oda vanthu iruken... Yarum tension aagathenga nalaiku morning 8 or 9ku mudhal update poturuven dears...
Ipa intha teaser ah enjoy pannunga pa...
அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள்...
இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை... அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் உணர்ந்தாள்...
அவளை நோக்கி அழுத்தமான காலடியுடன் வந்தவன் கண்களில் வழிந்த கோபமும், இறுகிய முகமும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்ச்சித்துக் கொண்டு இருந்த கைமுஷ்டியும் பார்க்க அவளுக்கு இதுவரை அவனை கண்டோ, அல்லது அவனுடன் சண்டையிடும் போதோ வராத பயம் இப்பொழுது அவனுடயை இந்த தோற்றத்தில் வந்தது....
காலையில் இருந்து கோபத்தின் பிடியில் சிக்கி இருந்தவன் இப்பொழுது அவளிடம் அதை அடக்க வழித்தெரியாமல் காட்ட நேர்ந்தது....
அவள் அருகில் வந்தவன் பற்களை கடித்து , "யாரு டி அவன்... இந்த நேரத்துல ரோட்டுல அவன் உன் கையை பிடிக்குறான் நீயும் சும்மா இருக்க நல்லா நா..." அவன் பேசி முடியும் முன் அவனை கையுயர்த்தி தடுத்தவள்...
நிமிர்ந்து அவனை ஒரு உணர்ச்சி அற்ற பார்வையை பார்த்தவள், அவனது விழியை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தாள்...
அவளது நேர்க்கொண்ட பார்வையில் ஒரு நிமிர்வு இருக்க... உறுதியான குரலில்," அவங்க பெயர் கண்ணன்..." அவளது வாக்கியத்தில் முகம் சுளித்தான் அவளது மன்னவன்...
'கட்டுன புருஷன் எனக்கு என்னைக்காச்சும் மரியாதை குடுத்து இருக்காளா... எப்பவும் அனிமல்ஸ் பெயர் தான்... கன்டவனுக்கு மட்டும் மரியாதை தரா பாரு... திமிரு டி...'மனதில் அவளை திட்டியவன் மேலே சொல் என்பது போல் பார்த்து வைத்தான்...
அவனது முக சுளிப்பு அவள் மனதை ரணமாக்கி வலிக்க செய்த போதும் மேலே தொடர்ந்தாள்,"காலேஜில என்னோட சீனியர்... படிக்கும் போதே என்கிட்ட பிரப்போஸ் பண்ணினாங்க... நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் ...அதுக்கு அப்புறம் இங்க ஆஃபிஸ்ல தான் மீட் பண்ணினோம்... இன்னைக்கு ஈவினிங் திரும்பவும் லவ் பண்ணுறதாகவும், எனக்காக காத்து இருக்குற தாகவும் சொன்னாங்க நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்... உடனே கையை பிடிச்சு கெஞ்சுனாங்க... அப்புறம் தான் உங்களுக்கு தெரியுமே...." என்று முழுவதும் சொல்லி முடிக்கும் போது அவள் குரலில் நக்கல் வழிந்ததோ என்னவோ...
Good Evening.... Oru kutty teaser oda vanthu iruken... Yarum tension aagathenga nalaiku morning 8 or 9ku mudhal update poturuven dears...
Ipa intha teaser ah enjoy pannunga pa...
அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள்...
இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை... அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் உணர்ந்தாள்...
அவளை நோக்கி அழுத்தமான காலடியுடன் வந்தவன் கண்களில் வழிந்த கோபமும், இறுகிய முகமும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்ச்சித்துக் கொண்டு இருந்த கைமுஷ்டியும் பார்க்க அவளுக்கு இதுவரை அவனை கண்டோ, அல்லது அவனுடன் சண்டையிடும் போதோ வராத பயம் இப்பொழுது அவனுடயை இந்த தோற்றத்தில் வந்தது....
காலையில் இருந்து கோபத்தின் பிடியில் சிக்கி இருந்தவன் இப்பொழுது அவளிடம் அதை அடக்க வழித்தெரியாமல் காட்ட நேர்ந்தது....
அவள் அருகில் வந்தவன் பற்களை கடித்து , "யாரு டி அவன்... இந்த நேரத்துல ரோட்டுல அவன் உன் கையை பிடிக்குறான் நீயும் சும்மா இருக்க நல்லா நா..." அவன் பேசி முடியும் முன் அவனை கையுயர்த்தி தடுத்தவள்...
நிமிர்ந்து அவனை ஒரு உணர்ச்சி அற்ற பார்வையை பார்த்தவள், அவனது விழியை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தாள்...
அவளது நேர்க்கொண்ட பார்வையில் ஒரு நிமிர்வு இருக்க... உறுதியான குரலில்," அவங்க பெயர் கண்ணன்..." அவளது வாக்கியத்தில் முகம் சுளித்தான் அவளது மன்னவன்...
'கட்டுன புருஷன் எனக்கு என்னைக்காச்சும் மரியாதை குடுத்து இருக்காளா... எப்பவும் அனிமல்ஸ் பெயர் தான்... கன்டவனுக்கு மட்டும் மரியாதை தரா பாரு... திமிரு டி...'மனதில் அவளை திட்டியவன் மேலே சொல் என்பது போல் பார்த்து வைத்தான்...
அவனது முக சுளிப்பு அவள் மனதை ரணமாக்கி வலிக்க செய்த போதும் மேலே தொடர்ந்தாள்,"காலேஜில என்னோட சீனியர்... படிக்கும் போதே என்கிட்ட பிரப்போஸ் பண்ணினாங்க... நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் ...அதுக்கு அப்புறம் இங்க ஆஃபிஸ்ல தான் மீட் பண்ணினோம்... இன்னைக்கு ஈவினிங் திரும்பவும் லவ் பண்ணுறதாகவும், எனக்காக காத்து இருக்குற தாகவும் சொன்னாங்க நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்... உடனே கையை பிடிச்சு கெஞ்சுனாங்க... அப்புறம் தான் உங்களுக்கு தெரியுமே...." என்று முழுவதும் சொல்லி முடிக்கும் போது அவள் குரலில் நக்கல் வழிந்ததோ என்னவோ...