கற்பூர முல்லை Episode 19

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 19
கற்பூர முல்லை Episode 19கோவிலில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது அவன் தன்னையே பார்ப்பதை அறிந்த தமிழ் பார்த்தது போதும் விஷயத்துக்கு வாருங்கள் என்று கூறினாள்.

அதற்கு அவன் ஏன் தமிழ் மனதில் இஷ்டம் இருந்தும் என்னை மறுக்கிறாய் என்று கேட்டான்... அதற்கு அவள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள்தான் வீண் கற்பனையை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினாள்....
ப்ளீஸ் தமிழ் என்னிடம் மறைக்காதே உண்மையை சொல் என்று கூறினான் அவன்..

ஒருவேளை என்னுடைய வேலை எதுவும் உனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு அவள் ஓ.... பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுவீர்களா என்று கேட்டாள். கண்டிப்பாக விட்டு விடுவேன். வேலையை விட்டுவிட்டு உங்கள் ஆபீஸ்லயே வேறு ஏதாவது வேலை இருந்தால் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று நகைச்சுவையாக சொன்னான்... உண்மையை சொல் தமிழ் அப்பொழுது வேலை தான் உனக்கு பிரச்சனையா என்று கேட்டான் அவன்.
உண்மையிலேயே அகிலனின் வேலையில் எல்லாம் எந்த விருப்பு வெறுப்பும் அவளுக்கு கிடையாது.. அதெல்லாம் இல்லை என்று கூறினாள் அவள்..
பிறகு என்னதான் உன் பிரச்சனை ப்ளீஸ் இப்பொழுதாவது தெளிவாக சொல். நாம் தனியாக தானே இருக்கிறோம் என்று கேட்டான் அவன். அவனை அப்படி பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது தன்னிடம் இவ்வளவு தூரம் கெஞ்சுகிறானே என்றும் இருந்தது...

இதற்கு மேலும் இவனிடம் மறைக்க முடியாது என்று உண்மையான காரணத்தை அவனிடம் கூறலானாள்.
நான் சிறு வயதிலேயே ஆசிரமத்தில் வளர்ந்தவள் . எனக்கு இன்று எந்த சொந்தமும் கிடையாது முதலில் இதை உங்கள் பெற்றோர்கள் ஒப்புக் கொள்வார்களா என்று கேட்டாள் .அதுபோக என்னை நீங்கள் கல்யாணம் செய்து கொண்டாலும் உங்களுக்கு என்று எந்த சொந்தமும் வரப்போவதில்லை.. எந்த ஒரு பெற்றோரும் தன் மகனுக்கு இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்க விரும்ப மாட்டார்கள்... சோ... என்னை மறந்து விடுவது தான் உங்களுக்கு நல்லது என்று கூறினாள்....

அப்போ..... இது மட்டும்தான் உன் பிரச்சினையா என்று கேட்டான் அகிலன்... அதற்கு அவள் இது என்னுடைய பிரச்சினை அல்ல என்னை கல்யாணம் செய்வதால் உங்களுக்கு வரும் பிரச்சனை என்று கூறினாள்....

சரி இதற்கு இப்பொழுதே ஒரு முடிவு கட்டுகிறேன் என்று கூறி தனது கைபேசியை எடுத்து தன் பெற்றோருக்கு தொடர்பு கொள்ள எத்தனித்தான்... அதற்குள் தமிழ் அவனை தடுத்து இது இவ்வளவு அவசரமாக பேச தீர்க்கப்பட வேண்டிய விஷயம் அல்ல என்று கூறினாள்.
சரி தமிழ் நான் இப்பொழுது எதுவும் பேசவில்லை ஆனால் இதில் என் பெற்றோர் சம்மதமும் முக்கியம்தான். அதுபோல அவர்களுக்கு இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. என்னுடைய விருப்பம்தான் அவர்கள் விருப்பமும் என்று கூறினான்... எது எப்படி இருந்தாலும் நீ தான் என் மனைவி அதை மாற்ற யாராலும் முடியாது என்று தீர்க்கமாக கூறினான்....
அதற்கு தமிழ் பதில் ஏதும் பேசவில்லை சரி நான் கிளம்புகிறேன் என்று கூறி கிளம்பினாள்..

இரு.... நானே உன்னை டிராப் செய்கிறேன் என்று கூறி அவளை ஆபீஸ் வரை கொண்டு வந்து விட்டு சென்றான்....

அன்று இரவு அகிலன் தமிழ் சொல்வதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்....அவள் சொல்வதும் ஒரு விதத்தில் சரியாகத்தான் தோன்றியது. சரி இதை பற்றி அம்மா அப்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நினைத்த மாத்திரத்திலேயே போனை எடுத்து பேசினான்....

ஆரம்பம் முதல் தற்போது வரை நடந்த அனைத்தையும் விவரித்தான்... அவன் நினைத்தது போலவே எங்களுக்கு இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை பெண் நல்ல பெண்ணாக இருந்தால் போதும் என்று கூறினார்கள்... அதேபோல நீ கண்டிப்பாக நல்ல பெண்ணைத்தான் தேர்வு செய்வாய்... எத்தனையோ வரன்கள் வந்தும் வேண்டாம் என்று மறுத்த நீ இன்று இந்த பெண்ணை தேர்வு செய்திருக்கிறாய் என்றால் நிச்சயம் அது நன்றாகத்தான் இருக்கும் என்று கூறினார்கள். அவனுக்கு அவர்கள் சொன்னது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது... அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணை நேரில் கூட்டிக்கொண்டு வர சொன்னார்கள். அதற்கு அவன் என் சம்மதத்தை தெரிவித்து விட்டேன் ஆனால் அவள் உங்கள் சம்மதத்தை கேட்டால் அவள் சம்மதம் தந்தவுடன் கட்டாயம் கூட்டி வருகிறேன் என்று கூறினான்... அவர்களும் அதற்கு சரி என்றார்கள்....

இப்பொழுது அகிலன் மனம் முழுதும் நிறைந்திருந்தது...
ஆனால் அதே நேரம் தமிழின் மனம் இவன் எந்த சொந்தபந்தமும் இல்லாமல் நம்மை கல்யாணம் பண்ணிக்கொண்டு கஷ்டப்படுவானோ என்று நினைத்திருந்தது...
அந்த இரவு நேரத்தில் இருவர் நிலையும் வேறாக இருந்தது...

மலரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top