என்னுள் சங்கீதமாய் நீ 7

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 7



என்னதான் தங்கள் “காதல் கை கூட வேண்டும்..” என்றாலும்… ஹர்ஷினியை “பார்க்காமல்.. பேசாமல்.. இருப்பது” நினைத்ததை விட மிகவும் கொடுமையாக தான் இருந்தது ஆகாஷிற்கு.

அதனாலே மிகவும் எதிர்பார்ப்போடே..! தான் பங்க்ஷன்க்கு வந்தான்.

ஆனால் இங்கோ ஹர்ஷினி அவனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக..? முழுவதுமாக அவனை “அவாய்ட் செய்து கொண்டிருந்தாள்”.

அதோடு அவள் “சம்பளம்…?” வேறு கேட்டது தெரிந்தவுடன் “இவள் தன்னை விட்டு விலகி செல்ல நினைக்கிறாளோ…?” என கட்டுக்கடங்கா கோவம் வேறு வந்து தொலைத்தது.

பங்க்ஷன் என்பதால் வேறு வழி இல்லாமல்…? தங்கள் பிரச்சனைகளை தள்ளி வைத்து விட்டு முடிந்தவரை இயல்பாகவே இருக்க செய்தான் ஜெய் ஆகாஷ்.

பங்க்ஷன் பாதியில் கிளம்ப நினைத்த ஹர்ஷினியும்.. “தாரணியின் வற்புறுத்தலால்..” பங்க்ஷன் முடியும் வரை அங்கே தான் இருந்தாள்.

அப்படியும் ஜெய் ஆகாஷின் பக்கம் திரும்பவே இல்ல.

பங்க்ஷன் முடியவும் எல்லோருக்கும் “ரிட்டர்ன் கிப்ட் கொடுக்க..” வேண்டும் என்பதால் பூர்வியை ஹர்ஷினியிடம் விட்டு சென்றாள் தாரணி.

ஹர்ஷினிக்கும் எல்லோரையும் போல் “குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்பதால் மகிழ்ச்சியுடனே பூர்வியை வைத்து கொண்டாள்.

வீட்டு ஆட்கள் தவிர “எல்லோரும் கிளம்பி விடவும்” தாரணி, விஜயா இருவரும் ஹர்ஷினி, பூர்வி இருக்குமிடம் வந்தனர்.

"தாரணி.. பூர்வியை பாரேன்….!நான் என்ன சொன்னாலும் சிரிக்குறா.." ஹர்ஷினி சிரிப்புடன் சொல்லவும்..

"குழந்தைன்னா இவ்வளவு ஆசை இருக்கிறவ.. கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கோ ஹர்ஷினி…”

உனக்கும் “26 வயசு…. ஆச்சுல்ல…? “

"உனக்கும்.. சின்னவ தானே தாரிணி….” உண்மையான பாசத்தோடயே கேட்டார் விஜயா.

ஏற்கனவே கொஞ்சம் மோசமான மனநிலையில் இருந்ததால்…. தீடிரென்று அவர் இப்படி கேட்கவும்….. ஹர்ஷினியின் “கண்களில் சட்டென்று கண்ணீர் துளிர்த்து விட்டது” . அதை மறைக்க வேகமாக கீழே குனிந்தவள் தாரணியின் கைய பிடிக்கவும்

தாராணியும் விஜயாவின் “தீடிர் கேள்வியால்” அதிர்ந்து இருந்தவள்…! ஹர்ஷினியின் பிடியில் அவளின் நிலைய புரிந்து “ம்மா உன்ன அப்பா கூப்பிடுறாரு நீ போ…” என வேகமாக அவரை அங்கிருந்து அனுப்பினாள் .

“நான் வரேன்….” இரும்மா விஜயா சொல்லி சென்றவுடன் “சாரி… சாரி…” என தாரணி பதட்டமாக சொல்லவும்….

"ஒன்னும் இல்ல விடு.. நீ பாரு…நான் இதோ வந்துடுறேன்" என பூர்வியை கொடுத்தவள்., பார்ட்டி ஹாலின் கடைசியில் ஒதுக்கு புறமாக இருக்கும் அலங்கார அறைக்குள் வேகமாக சென்றுவிட்டாள் .

என்னதான் “கோவமாக இருந்தாலும்….!” ஹர்ஷினியை பார்க்காமல் பார்த்து கொண்டிருந்த ஜெய் ஆகாஷ் அவளின் கண்ணீரை கண்டுவிட்டான் .

ஹர்ஷினி சென்றவுடன் வேகமாக தாரணியிடம் சென்று “என்ன நடந்தது?” என தெரிந்து கொண்டவனின் மனம் என்ன உணர்கிறது…? என்றே தெரியவில்லை.

“அண்ணா….?” தாரணி கூப்பிடவும் ஒண்ணுமில்ல விடு.

நீங்க எல்லாம் போய் சாப்புடுங்க… “நான் அவளை பாக்குறேன்…..!” தாரணி புரிந்து கொண்டு எல்லோரையும் சாப்பிட அழைத்து சென்றாள்.

ஜெய்… ஹர்ஷினி இருக்கும் ரூமிற்கு சென்று “கதவை லாக்” செய்யவும்… அந்த சத்தத்தில் பார்த்தவள்… “ஜெய் ஆகாஷ கண்டு முதலில் அதிர்ந்தாலும்…!” பின்பு வேறு பக்கமாக தன் முகத்தை திருப்பி கொண்டாள்.

அதுவரை “ஆகாஷின் அம்மா.. தன்னை இப்படி கேட்டு விட்டாரே….?" என வருத்தத்தில் இருந்தவள் ஜெய் பார்த்தவுடன் வருத்தம் போய் கோவம் வந்தது .

ஹர்ஷினி வீம்பாக தன்னை பார்க்காமல் முகம் திருப்பியபடியே நிற்கவும்…. அவளின் கலங்கிய முகத்தை பார்த்ததால் ஆகாஷ் பொறுமையாகவே… “இங்க பாரு ஹர்ஷினி….”

அவள் திரும்பாமல் நிற்கவும் “ஏய் என்ன பாருடி”

“ஓஹ் திரும்ப மாட்ட… அப்படித்தானே..?" என்ற படி அருகில் வந்து

அவளின் இரு கன்னத்தையும் பிடித்து திருப்பி தன் முகம் பார்க்க செய்தவாறே ”என்னடி அம்மா கேட்டதுக்கு வருத்தபட்ரியா?” ஆறுதலாகவே கேட்டான்.

ஹர்ஷினி “பதில் சொல்ல முடியாது போ…” என்பது போல் பார்த்து நிற்கவும்.., அவள் கன்னத்தை இறுக்கி பிடித்தவன் “பதில் சொல்லு…?”

அவன் கை இறுக்கத்தில் “கன்னம் வலித்தாலும்” காட்டி கொள்ளாமல் “வைராக்கியமாக….” உன் கேள்விக்கு பதில் சொல்லும் எண்ணம் இல்லை… என்பதை தன் “மௌனத்தில்” காட்டினாள் ஹர்ஷினி.



அதை புரிந்து கொண்டவன்… அவளின் கன்னத்தில் இருந்து கைய எடுத்து விட்டு நிதானமான குரலில்…, “ஓஹ் ஹோட்டல் மேடம் என்கிட்டே பேச மாட்டிங்க…?”

.............?

"உங்களக்கு தான் என்ன பாக்கவே பிடிக்கலையே…? அப்புறம் எங்கிருந்து பேசறது எல்லாம் ...!"

“நீ என்ன வேணும்ன்னா பேசிக்கோ…” என்பது போல் ஹர்ஷினி அழுத்தமாக நிற்கவும்…. ஆகாஷின் உள்ளுக்குள் எரிமலை வெடித்தது….,

"என்ன பார்க்க மாட்ட….? பேச மாட்ட…? அப்படித்தானே அப்போ ஓகே…"

.............?

"இன்னும் கொஞ்ச நேரத்துல…. சாப்பிட போன எல்லாரும் திங்ஸ் எடுக்க இந்த ரூம்க்கு தான் வரணும்….., என்னோட கேள்விக்கு பதில் வரலைன்னா…? நான் கண்டிப்பா இந்த டோர திறக்க மாட்டேன் மிஸ்.ஹர்ஷினி…” என மிக உறுதியான குரலில் சொல்லவும் …..,

அவன் கண்டிப்பாக செய்வான்…! என ஹர்ஷினிக்கு புரியாமல் இருக்குமா என்ன…?

“ஓஹ் என்ன மிரட்டுறீங்க…?”

வச்சுக்கோ...! நான் கேட்டதுக்கு பதில்…?

"பதில் தானே.. நான் எதுக்கு உங்கள பாக்கணும்…?”

அவளின் கேள்வியால் ஆத்திரமடைந்த ஜெய் “என்ன பேச்செல்லாம் வேற மாதிரி இருக்கு..”

என்ன பாக்க மாட்டியோ….? என்னடி திமிறா…?

நானும் வந்ததிலருந்து பாக்குறேன்…. மூஞ்ச திருப்பி கிட்டே இருக்க பிச்சுடுவேன்….

"எதுக்கு பாக்கணும்…? நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு…! நீங்க தானே ரெண்டு வரில பதில் அனுப்பினீங்க…" ஹர்ஷினியும் ஆத்திரமாக கேட்கவும்

"ஓஹ்.. அப்போ நமக்குள்ள எதுவும் கிடையாத அப்படித்தானே..?"

"நான் சொல்லல…… நீங்க தான் சொன்னீங்க…"

"நான் சொன்னவுட.. இதுதான் சான்ஸேன்னு என்ன விட்டாச்சு…” அதனால தான் என்கிட்டேய சம்பளம்…கேட்டிருக்க நீ….?”

ஹர்ஷினி புரியாமல் விழிக்கவும் “ஓஹ் அத கூட மறந்தாச்சு….” இல்ல

“எங்க குடும்பத்துக்கு…..” அழுத்தி சொன்னவன்… "இனிமேல் மேடம் ப்ரீயா எதுவும் செய்ய முடியாதுன்னு காசு கேட்டு இருந்தீங்களே…. இப்போ ஞாபகம் வந்துடுச்சா….?" நக்கலாக கேட்கவும்

அய்யோ “சும்மா கோவத்துல…கேட்டதை இந்த தாரணி சொல்லிட்டாளே..!" என மனதுக்குள் அதிர்ந்தவள். "இல்ல அது சும்மா….!"

"சும்மா எல்லாம் கிடையாது.. நீ உண்மையா தான் கேட்டிருக்க…”

"நான் கோவத்துல தான் கேட்டேனே…. தவிர உண்மையா எல்லாம் கேட்கல…."

"ஓஹ்.. அப்போ கோவத்துல என்ன வேணுமலாலும் கேட்டுடுவியா….?”

"ஜெய் நான் மீன் பண்ணில்லாம் கேட்கல……. கோவத்துல தான் கேட்டேன் சொல்லியும்…., இப்படி பேசினா எப்படி…?" கொஞ்சம் கோவமாகவே கேட்கவும்


"இல்ல ஹர்ஷினி.. நீ கேட்டது கரெக்ட் தான்…"

“எங்க குடும்பத்துக்கு… நீ ஏன் செய்யணும்…?” …… கோவத்தில் என்ன வேண்டுமானாலும் பேசிவிடுவதா…..?

இந்தா “என் கார்ட் வச்சுக்கோ…! எவ்வளவு வேணுமாலும் எடுத்துக்கோ…” ஹர்ஷினியின் கையில் ஜெய் கார்டை திணிக்கவும்

கோவத்தில தான் கேட்டேன் சொல்லியும்…. விடாம கார்ட் கொடுத்தா என்ன அர்த்தம்….?

“உங்க கார்ட் யாருக்கு வேணும்…?” ஆத்திரமடைந்த ஹர்ஷினி கார்டை உடைத்து விட்டாள்….!

“பளார்…!” சத்தத்துடன் தீடிரென்று தான் தரையில் விழவும்…! ஒரு நிமிடம் என்ன நடந்தது…? என்றே புரியவில்லை ஹர்ஷினிக்கு.

கன்னம் எறியவும் தான் ஆகாஷ் தன்னை அறைந்து விட்டது புரிந்து அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தால்…,

அடக்கப்பட்ட கோவத்தில்… கண் எல்லாம் சிவந்து…, தோள்கள் விறைக்க… தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து “ருத்ர மூர்த்தியாக…” நின்றிருந்தான் ஜெய் ஆகாஷ்.

அவனின் அதீத கோவத்தில்…. ஹர்ஷினிக்கு நெஞ்சு கூடே சில்லிட்டு போனது...

"என்னடி.. என்னோட கார்ட் யாருக்கு வேணுங்கிற…?”

என்ன.. புதுசா பண திமிர காட்றியோ.? தொலைச்சுடுவேன்…!

அப்படி என்ன கோவம்…? நான் பாக்கலைன்னா…? பேசலைன்னா…?

"ஏதோ ஒரு காரணத்துக்காக…? தான் நான் இப்படி பன்றேன்னு…. உனக்கு புரியாமலா இருக்கும்…? சொல்லுடி” கர்ஜிக்கவும்….

அதிர்ச்சி…, பயம்…., கோவம்…! எல்லாம் கலந்த உணர்வுடனே அவனை பார்த்தாள் ஹர்ஷினி.

"உனக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும்…. அப்படி இருந்தும் நீ… என்ன அவாய்ட் செய்ரன்னா….? உனக்கு நான் வேண்டாமா…..?

ஓஹ்… அன்னிக்கு உங்க தாத்தா உனக்கு ஏதோ மாப்பிள்ளை ரெடியா இருக்கான்…!” சொன்னாரே அவனை கல்யாணம் பண்ணிக்க போறியா..?

அதான் நான் வேண்டாம்ன்னு…. இப்படி எல்லாம் பண்றியா ...?

அப்படி மட்டும் இருந்துச்சு…. உன்ன இங்கேயே கொன்னு புதைச்சுருவேன் பாத்துக்கோ…." உச்ச கட்ட கோவத்தில் வெடித்து கொண்டிருந்தான் ஜெய் ஆகாஷ்.

"உன்னோட பிடிவாதத்தால…! தான் இந்த கஷ்டம் எல்லாம்…., அப்பவே நான் இந்த டான்ஸை விட்டு தொலையுறேன்… சொன்ன கேட்டியா...?"

"அண்ணா..? அண்ணா…? சீக்கிரம் கதவை திறங்க.. எல்லாரும் வராங்க.." கதவை தட்டிகொன்டே… தாரணி பதட்டமாக கூப்பிடவும்… “ச்சே.. உன்ன இறுடி வரேன்…" உறுமி விட்டு கதவை திறக்கவும்

அதீத அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த ஹர்ஷினி வேகமாக எழுந்து நின்றாள்.

உள்ளே வந்த தாரணி இருவரின் முகமும் சரியில்ல என்பதை புரிந்து கொண்டு “என்ன ஆச்சு….?” கேட்டபடி ஹர்ஷினியை பார்த்தவள் அய்யோ…! கன்னம் இப்படி வீங்கி இருக்கு…..! என்ன இது விரல் தடம்…?

“அண்ணா அடிச்சீங்களா…?” கோவமாக கேட்கவும்.. ஹர்ஷினி அவளின் கையை பிடித்து வேண்டாம்…. என்பது போல் தலையாட்டினாள்.

ஆகாஷ் எதையும் கண்டு கொள்ளாமல்…? "தாரணி எனக்கு இவ கிட்ட ஒரு 5 நிமிஷம் பேசணும்… அதுவரைக்கும் நீ எல்லாரயும் சமாளி."

தாரணி சொல்ல வருவதை கூட கேட்காமல்…. அவளை கை பிடித்து வெளியே விட்டு கதவை மூடியவன்…

கண்மூடி மூச்சை இழுத்து விட்டு… தன் கோவத்தை குறைக்க முயன்றவன்….! முடியாமல் போகவே ….? ஹர்ஷினியை தீவிரமாக பார்த்தவாறே…! "என்னால இந்த பிரஷர்…., கோவம்…, சண்டை…,

எல்லாத்தையும் விட… உன்ன விட்டு விலகி இருக்கறது… எல்லாம் இனிமேலும் தாங்க முடியும்ன்னு தோணல…!"

"அதனால.. ஒன்னு நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு….! இல்லாட்டி ஒரே ஒரு வழி தான்…"

அவளை நெருங்கி நின்று அவளின் கண்ணுக்குள் பார்த்தபடி…. “நாம சேர்த்து ஒரே வீட்ல வாழ ஆரம்பிக்கலாம்…..” ஜெய் ஆகாஷின் குரலில் தெரிந்தது எல்லாம் மிக மிக உறுதி மட்டுமே…

ஹர்ஷினி அதிர்ச்சியாகி பார்க்கவும்…!

என்ன இந்த நிலைமைக்கு… கொண்டு வந்து விட்டதும் நீ தான்..!

உனக்கு “ஒரு மாசம் தான் டைம்…”

கதவை திறக்கமுன்…. அப்புறம் “இந்த அடி உனக்கு தேவையான ஒன்னு தான்” என அவளின் வீங்கி இருந்த கன்னத்தை காட்டி ஒரு விரலால் வருடியவாறே

"முடியலடி…?" ஆவேசமாக அவளை இறுக்கமாக கட்டி பிடித்தவன் பின் அவளின் நெற்றியில் அழுத்தமாக தன் உதட்டை பொருத்தியவன்…! அங்கிருந்து சென்றே விட்டான்.

தாரணி உள்ளே வந்து ஏதோ கேட்கிறாள்…? என புரிந்தாலும்…

ஹர்ஷினியின் எண்ணம் முழுவதும் “ஆகாஷ் வீசி சென்ற விஷம் தோய்ந்த வார்த்தைகளிலும்…..! தங்கள் காதல் தாத்தாக்கு தெரியும்….?” என்பதிலே இருந்தது.


......................................................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 7 போஸ்ட் போட்டுட்டேன் . படிச்சி பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்கப்பா thank you ப்ரண்ட்ஸ்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட பையனும் ஹர்ஷினியும்
லவ்வான லவ்ஸ் பண்ணுறது இந்த
கூமுட்டை விஜயாவுக்கு தெரியாதா?

அடப் போடா ஜெய் ஆகாஷ்
உன்னோட தொங்கச்சி சும்மா
விளையாட்டுக்கு சொன்னதுக்கு
ஹர்ஷினிப் புள்ளையை அடிக்கிறே

ஆனாலும் ஜெய் ஆகாஷ் நெத்தியடியா பேசிட்டு ஒரு மாசம் கெடு கொடுத்துட்டுப் போயிட்டான்
இப்போ நீ என்ன பண்ணப் போறே,
ஹர்ஷினி?
 
Last edited:

Nithi Kanna

Well-Known Member
தன்னோட பையனும் ஹர்ஷினியும் லவ்வான லவ்ஸ் பண்ணுறது இந்த கூமுட்டை விஜயாவுக்கு தெரியாதா?
அடப் போடா ஜெய் ஆகாஷ்
உன்னோட தொங்கச்சி சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு ஹர்ஷினிப் புள்ளையை அடிக்கிறே

ஆனாலும் ஜெய் ஆகாஷ் நெத்தியடியா பேசிட்டு ஒரு மாசம் கெடு கொடுத்துட்டுப் போயிட்டான்
இப்போ நீ என்ன பண்ணப் போறே, ஹர்ஷினி?
(y)thank you banumma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top