என்னில் நிறைந்தவளே - 3

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 3

தேவி விழா முடிந்து வீட்டிற்கு வந்தாள், அவள் வருவதற்காகவே காத்திருந்த பாட்டியை பார்த்ததும் “எதுக்கு பாட்டி இவ்ளோ நேரம் தூங்காம இருக்கிங்க. இப்பதான் உடல் நிலை சரி இல்லாமல் நல்ல ஆகிருக்கு”

பாட்டி “அதை விடு விழா எப்படி நடத்தது, நம்ம கம்பனிக்கு தான சிறந்த கன்ஸ்ட்ரக்ஷன் விருது கிடைத்தது” என ஆர்வமாக வினவினார்.

தேவி “அதுவா பாட்டி, உனக்கு பயந்துகிட்டு அந்த விருதை நம்ம கம்பனிக்கே கொடுத்துட்டாங்க. இல்லைனா அவங்கள ஒரு கை பார்த்திட மாட்ட”

பாட்டி”வாலு, வாலு, எப்ப பாரு என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்க. நான் உன்னிடம் ஒரு முக்கியமான விசியம் பேசணும்” என்று ஆரம்பித்தார்.

தேவி “என்ன பாட்டி”

பாட்டி “உன்னுடைய அப்பாவும், அம்மாவும் மதியம் வந்தாங்க”

தேவி “எதுக்காம், இருக்கின்ற என்னோட கொஞ்சம் நிம்மதியையும் கெடுக்கவா”

எதுக்கு தேவி இப்படி பேசற, என்ன இருந்தாலும் அவங்க உன்னுடைய அம்மா,அப்பா அதுவும் இல்லாமல் அவன் என்னுடைய மகன், மருமகள் அதை மறந்துவிடாதே.

பாட்டி எதுக்கு வந்தாங்க அதை முதலில் சொல்லுக

பாட்டி “உன்னோட கல்யாணம் பற்றி பேச வந்தாங்க” என்றதும் அங்கிருந்து உடனே எழுந்து சென்றாள் தேவி. என்ன தேவி நான் என்ன பேசிட்டு இருக்கேன் எழுந்து போற என்றார்.

இதை பற்றி என்னிடம் பேச வேண்டாம் பாட்டி.

பாட்டி “இப்பொழுது பேச வேண்டாமா இல்லை எப்பொழுதுமே பேச வேண்டாமா”

தேவி “எப்பவுமே பேச வேண்டாம்” என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

பாட்டி அவள் செல்வதை பார்த்து பெருமூச்சி ஒன்றை வெளியிட்டு கொண்டார். எப்பொழுதுதான் இவளுக்கு ஒரு நல்லது நடக்குமோ அந்த கடவுள்தான் வழிகாட்டனும் என்று எண்ணிகொண்டார்.


:):):)

தருண் தனது அன்னை செய்வனவற்றை சோபாவில் அமர்த்து அமைதியாக பார்த்து கொண்டிருந்தான்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த உடன் பூங்கோதை அமித்திடம் சரண்யாவை அவனது அறைக்கு அழைத்து செல்லும் படி கூறினார்.

அதுவரை நடந்து கொண்டிருந்ததை அமைதியாக பார்த்து கொண்டிருந்தவன் அமித்திடம் “அமித் மேலே வா உன்னிடம் பேச வேண்டும்” என்று சொல்லிவிட்டு தனது அறையை நோக்கி சென்றான்.

அவன் மேலே செல்லும் வரை அமைதியாக இருந்த அவன் அத்தைகள் பூங்கோதையை நோக்கி “ அண்ணி நீங்களும், தருணும் செய்வது கொஞ்சம் கூட நன்றாக இல்லை, எங்க பொண்ணு இருக்க வேண்டிய இடத்தில் ஏதோ ஒருத்தியை அமித் கூட்டி வந்திருக்கான் நீங்க என்ன அதை என்ன ஏது என்று கேக்காம ஆர்த்தி எடுத்து உள்ள கூப்பிடுரீங்க” என்று முவரும் கேட்டனர்.

பூங்கோதை “ என்னை என்ன செய்ய சொல்றிங்க, நீங்களும் பார்த்துடுதனா இருந்திங்க தருண் தான உள்ள கூப்பிட சொன்னான் அவனிடன் கேக்கின்றது என தருணை காரணம் காட்டிவிட்டு கூறிவிட்டு சரண்யாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றார். பின் அவர்களிடம் நின்று பேச்சு கொடுத்தால் அவர் தலை அல்லவா உருளும்.

அவர்கள் சென்றதும் அமித் தனது அண்ணணின் அறை நோக்கி சென்றான்.

வனிதா “பார்த்திங்களா டி இந்த அண்ணி ஒன்னுமே தெரியாத மாதிரி பேசிட்டு போகுது”

மீனா “அட நீ வேற அக்கா, இந்த அமித் பையனுக்கு இதுவே கூட சொல்லி கொடுத்திருக்கும் இப்படி செய்ய சொல்லி”

கோமதி “நம்ம கட்டிகிட்டது சரியில்லை, நமக்கு பிறந்ததும் சரியில்லை” என்ன பண்ண சொல்லற என்றார்.

இவர்கள் இவ்வாறு பேசி கொண்டிருக்க அதை அவர்களின் கணவன்மார்களாள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஏனெனில் நடுவே ஏதாவது பேசினால் யார் இவளுங்ககிட்ட வாங்கி கட்டிகிறது என்று அமைதியாக நின்றிருந்தனர்.

அங்கே தருணின் அறையில் அமித் தருணின் முன் அமைதியாக நின்றிருந்தான்.

தருண் அவனிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக அமர்த்திருந்தான். அவனின் மவுனம் பொறுக்காமல் அண்ணா அதுவந்து என ஆரம்பித்தான். உடனே தருண் அவனை முறைக்கவும் அமைதியாகி விட்டான்.

பூங்கோதை சரண்யாவை அறையில் விட்டுவிட்டு செல்வியை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு தருணின் அறைக்கு சென்றார்.


நிறைவாள்.........

படித்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லிவிட்டு போங்க friends...................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top